31/12/2022
இன்று 2022/12/31 சனிக்கிழமை உஸ்மானியா உடைய பழைய மாணவர்கள் கூட்டம் மத்ரஸாவின் பிரதான மண்டபத்தில் *முபாரக் ஹழ்ரதின்* கண்காணிப்பில் அல்லாஹ்வின் உதவியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 61 பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இன்னும் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததால் தங்களது அனுதாபத்தை தெரிவித்திருந்தார்கள்.
எமது இக்கூட்டத்திற்கு நேற்று மாலையில் இருந்து பழைய மாணவர்களின் வருகை ஆரம்பித்துவிட்டது.
கூட்டம் தஹஜ்ஜத் தொழுகையில் இருந்து ஆரம்பமானது. அதனை தொடர்ந்து குர்ஆன் தமாம் நிகழ்வு கூட்டு துஆவுடன் முடிவு பெற்றது.
07:45 மணியளவில் காலை உணவை உண்டு விட்டு அத்துடன் லுஹா தொழுகையுடன் 08:45 அளவில் ஆரம்பிக்கப்பட்டு 09:40 - 10: 20 வரை *முபாரக் ஹழ்ரத்* உடைய *சமகால உலமாக்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக உஸ்மானிகள் எவ்வாறு நடக்க வேண்டும்* என்ற தலைப்பில் மிக அழகிய முறையில் வழிகாட்டல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்னும் சில நிகழ்ச்சிகள் பழைய மாணவர்களால் நடைபெற்றன.
சுமார் 11:30 -12:30 வரை பழைய மாணவர்களின் மஷூரா மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. அதில் எமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிக முக்கியமான சில விடயங்கள் களந்தாலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு லுஹர் தொழுகை நடைபெற்றது.
தொழுகையை தொடர்ந்து எமது புதிய சான்றிதல் வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிவடையும் பொழுது மதிய உணவு தயாராக இருந்தது.
அத்தோடு எமது கூட்டம் 01:40 மணி அளவில் அல்லாஹ்வின் உதவியால் முடிவடைந்தது.
பழைய மாணவர்கள் தங்களது பிரிவை வைத்து கவலையுடனும் முஸாபஹாவுடனும் வீடு திரும்பினார்கள்.
இப்படிக்கு
ஏட்பாட்டுக்குழு தாருல் உலூம் அல் உஸ்மானியா
31/12/2023
28/11/2022
15/11/2022