05/11/2025
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 2025 batch எமது கல்லூரி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு மற்றும் பெற்றோர் கூட்டம் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இப்பிரியாவிடை நிகழ்வு மாணவர்கள் ஆசிரியர்களுக்கான நன்றியுணர்வைத் தெரிவிக்கும் ஓர் நிகழ்வாகவும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாகமூட்டி வழியனுப்பும் நிகழ்வாகவும் காணப்பட்டது.
மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வைத் தொடர்ந்து எமது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் குழாத்தினால் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல்போஷண விருந்துபசாரம் இடம்பெற்றது.
தொடர்ந்து பெற்றார் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எமது கல்லூரி இதுவரை காலமும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதோடு மாணவர்களின் எதிர்கால நடவடிக்கைள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, அஷ்ஷெய்ஹ் ஆரிப் ஷஹாப்தீன் (ஹக்கானி) (விரிவுரையாளர், உம்முல் குரா அரபுக் கல்லூரி) அவர்கள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடிய விஷேட சொற்பொழிவு மற்றும் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளிற்கு பங்குபற்றிய மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கு விருந்துபசாரத்தை வழங்குவதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கும் விஷேட சொற்பொழிவினை நிகழ்த்திச்சென்ற அஷ்ஷெய்ஹ் ஆரிப் ஷஹாப்தீன் அவர்களுக்கும் எமது அழைப்பினையேற்று வருகைதந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்நிகழ்வுளைப் பொருந்திக்கொண்டு அனைவருக்கும் நல்லருள்பாளிப்பானாக!