07/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.
1980ஆம் ஆண்டு மல்ஹருஸுல்ஹியா தேசியப் பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவனாகிய நான், இப்பாடசாலையில் கல்வி கற்று, 1980ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியராகவும், அதிபராகவும், கல்விப் பணிப்பாளராகவும் நாட்டின் பல பகுதிகளில் சேவையாற்றிய பின்னர், தற்போது ஓய்வு பெற்றுள்ளேன்.
என்னை உருவாக்கிய பாடசாலை மழ்ஹருஸுல்ஹியா தேசியப் பாடசாலை என்று கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. எனது அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் வளர்த்த பெருமைக்குரிய கல்வி நிலையம் இதுவாகும்.
எனவே, தற்போது எனது பாடசாலையில் புதிய அதிபரின் வருகையுடன் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மறுமலர்ச்சியை நிலையான வளர்ச்சியாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குறிப்பாக, அனைத்து பழைய மாணவர்களும் மீண்டும் தமது பாடசாலையுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு பாடசாலையை தனிப்பட்ட அதிபரால் மட்டும் முன்னேற்ற முடியாது. பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள், சமூக அமைப்புகள், நிறுவனங்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தியில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் பாடசாலை துரித வளர்ச்சியை அடைய முடியும்.
எனவே, புதிய அதிபரின் வருகையால் உருவாகியுள்ள இந்த மறுமலர்ச்சியை துரிதமான வளர்ச்சியாக மாற்றிக் கொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்துள்ளது.
அதன் முதல் கட்டமாக, எதிர்வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலில் அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்து கொண்டு, எமது பாடசாலையின் துரித வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து, கைகோர்த்து உழைக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும் உதவியும் எமக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, எமது பாடசாலையின் ஒளிமிகு எதிர்காலத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.
வஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.
A.H.M. Jiffry (BA, SLEAS, PGDE)
Former Principal & Qadi Judge
(Galle District)