17/10/2025
🎉 க.வ. கெங்கல்ல தமிழ் வித்தியாலயம் – பெருமைமிகு தருணம்! 🎉
எமது வித்தியாலயத்தின் பழைய மாணவரும், கண்டி City Tex உரிமையாளருமான திரு. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் பெரும் நிதி பங்களிப்பின் மூலம் எமது பாடசாலையின் மைதான புனர்நிர்மாணப் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பழைய மாணவர் ஒருவரினால் செய்யப்படும் இந்த மகத்தான சேவை எமது பள்ளியின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாகும். 💐
இப்பணியின் சில முக்கிய தருணங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. 📸
அவருக்கு எமது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மென்மேலும் சகல வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ எமது வாழ்த்துக்கள். 🙏
“கல்வி மட்டுமன்றி, விளையாட்டு துறையிலும் எமது குழந்தைகள் பிரகாசிக்க வேண்டும்” என்ற தூர நோக்குடன் இந்தப் பணி முன்னெடுக்கப்படுவது உண்மையிலே பெருமைக்குரியது. 🏫⚽🏆
29/08/2025
✨🙏 ஆவணி சதுர்த்தி சிறப்பு பூஜை – கெங்கல்ல தமிழ் வித்தியாலயம் 🙏✨
கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில், ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து சிறப்பு பூஜை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.
🌸 எல்லோருக்கும் ஆரோக்கியம், நலன், வளம் மற்றும் மாணவர்களின் சித்திகளுக்கு வித்திடும் ஸ்ரீ சித்தி விநாயகரின் அருள் கிடைக்க பிரார்த்திப்போமாக.
📸 நிகழ்விலிருந்து சில நிமிடங்கள்...
12/07/2025
இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தொனிப்பொருளின் கீழ்.. "CLEAN SRILANKA" வேலைத்திட்டமானது..
எமது பாடசாலையின் அதிபர் திரு.ஞானசேகரன் ஐயா அவர்களின் தலைமையின் கீழ்
....................., சகல ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்பான பங்களிப்புடனும்..
பாடசாலையை நேசிக்கும் அன்பு மாணவச் செல்வங்களின் அதீத பங்களிப்புடன் மிகவும் நேர்த்தியான முறையில் "CLEAN SCHOOL - EDUCATION" வேலைத்திட்டம் இடம் பெற்றது....
*நிகழ்ச்சி நிரல்*
♦️ஆரம்ப நிகழ்வு - 8.00 To 8.30
1. தேசிய கொடி ஏற்றம்
2. தேசிய கீதம் இசைத்தல்
3. பாடசாலை கீதம் இசைத்தல்
4. ஸ்ரீலங்கா வேலை திட்ட அறிமுக உரை-
5. அதிபர் உரை
♦️சூழல் சுத்தம் செயற்றிட்டம் - 9.00 To 12.00
♦️பாடசாலை சுற்றுப்புறச்சூழல் ♦️வகுப்பறை சூழல்
♦️பிரதான தனி அறைகள்
♦️மைதானம்
♦️அதிபர் காரியாலயம்
♦️நூலகம்
♦️விஞ்ஞான ஆய்வு கூடம்
♦️போசணையான உணவின் முக்கியத்துவம்- 12.00 To 01.00
♦️சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்
மற்றும் வீதி நாடகம்
போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன
ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
22/06/2025
🎉 35 ஆண்டுகள் சேவையின் மகத்தான பயணம் — நன்றி, விடைபெறும் நிகழ்வு 🙏
நம்முடைய பாடசாலையின் பிரதி அதிபரான திருமதி ஜுடிற்றா அம்மையார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் சிறப்பு பதிவு
எமது பாடசாலையில் மிகவும் உணர்ச்சிவசமான, நினைவாகச் செல்வதற்குரிய ஒரு நாள்…
📚 35 ஆண்டுகளாக பள்ளிக்குழந்தைகள் வளரும் ஒவ்வொரு படியில் தன்னை ஈடுபடுத்தி, கல்வி ஒளி பரப்பி, ஒவ்வொரு மாணவனும்/மாணவியுமாக திறமையுடன் வளர எளிமையாக வழிகாட்டியவர்,
திருமதி ஜுடிற்றா அம்மையார், தனது சேவைக்காலத்தை பூர்த்தி செய்து ஓய்வு பெறுகிறார்.
அவரது சேவை என்பது வெறும் ஆண்டு கணக்கல்ல...
அன்பும், பொறுப்பும், அமைதியும், வழிகாட்டலும் கலந்து உருவான ஒரு பயணம்!
மாணவர்கள் மட்டும் அல்ல – ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளியின் ஒவ்வொரு பகுதிக்கும் அவர் ஒரு வலிமையான தூண்!
📅 இந்த மகத்தான பயணத்தின் இறுதி கட்டத்தை குறிக்கும் விதமாக,
எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
💐 அவரது ஓய்வு வாழ்க்கை அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் அமைய எமது பாடசாலையின் சார்பில் நன்றியும், வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏 மிக்க நன்றி ஜுடிற்றா அம்மையாரே… உங்கள் சேவை என்றும் மாணவ, மாணவியரின் இதயங்களில் நீடிக்கும்!
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்கம் பெற்றோர்கள், பழைய மாணவர்கள்
02/06/2025
எமது பாடசாலையில் சித்திக்கு வித்திடும் எம் பெருமான் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 7வது வருட வருஷாபிஷேகம் - 02-06-2025
03/05/2024
அன்பார்ந்த செல்வங்களே, ஒரு பாடசாலை மாணவர்களின் வெற்றி அவர்களை பின்தொடர்ந்து வரும் மாணவர்களின் வெற்றிக்கும் வழிகாட்டும்
என்பதனை மனதில் கொண்டு நீங்கள் கல்வியினால் சிறந்தவர்களே என்ற மகுடத்தை ஏற்று க.பொ.த (சாஃத) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றிட பாடசாலை சமூகம் என்ற வகையில் எல்லாம் வள்ள இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
'உங்கள் வெற்றி உங்களின் அடுத்த கட்ட நகரிற்கு வித்திடும்"
வாழ்க வளமுடன்.
- அதிபர் -
19/04/2024
அன்பார்;ந்த உறவுகளே,
ஓர் அடி முன்வைத்து எடுத்த செயற்றிட்டம் பாடசாலையின் முன்னோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கும் என்ற தூர நோக்கு சிந்தனை. செயற்றிட்டத்தின் வெற்றியின் பயன் எமது அன்பார்ந்த எதிர்கால மாணவ மணிகளுக்கு கிடைக்கும் என்ற உன்னத நோக்கில் சாரும். இவ்வாறான தூர நோக்கினை கொண்ட செயற்பாடு 2023ம் வருடம் நவம்பர் மாதம் 16ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு உள்ளுர், வெளியூர் நலன்விரும்பிகளின் சிறந்த ஒத்துழைப்புடன் நடந்தேறி வருகின்றது.
'ஒரு சமூகத்தின் மாற்றம் பாடசாலை வகுப்பறையிலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றது"
என்ற உன்னத நோக்கை பிரதானமாகக் கொண்டு எமது பாடசாலை மாற்றத்தை நோக்கிய பயணமாக, பாடசாலையின் தேவையின் மிக முக்கியமாக உள்ள இடப்பற்றாக்குறையினை தீர்க்கும் உன்னத பணிக்கு பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் உங்களின் அன்பான உதவியினை எதிர்பார்க்கின்றோம்.
நீங்கள் வழங்கும ஒவ்வொரு ஒத்துழைப்பும் எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
"மாற்றம் ஒன்றே மாறதது."
நன்றி
அதிபர்
077-2594620
18/04/2024
க-ம.மா-வ-கெங்கல்ல தமிழ் வித்தியாலய அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த வருஷாபிஷேக நிகழ்வு 19-04-2024 அன்று நடைபெற எம்பெருமான் ஸ்ரீ சித்தி விநாயகரின் பூரண அனுக்கிரகம் கிட்டியுள்ளது.
அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து பூஜைகளில் கலந்து எம்பெருமானின் பூரண அனுக்கிரகம் கிட்டி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் பிரார்த்திக்குமாறு பக்தி நிறைந்த அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்கம் பெற்றோர்கள், பழைய மாணவர்கள்
07/04/2024
எமது பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்புற வாழ்த்துகிறோம்!!
🙏🙏🙏அனைவரும் வருக 🙏🙏🙏