19/10/2024
இலங்கை அரசினால் பல்கலைக்கழகமொன்றில் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் முழுநேரக் கற்கைநெறி ஒன்றை தொடரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமை பரிசில்கள் அல்லது நிதி உதவிகள் பற்றி விளக்கம்.
இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களுக்கு அல்லது உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது, மகாபொல (Mahapola) புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகை (Bursary) என்ற இரண்டு நிதித் திட்டங்களை (இரண்டில் ஏதாவது ஒன்று மாத்திரம் ஒரு மாணவருக்கு வழங்கப்படும்) வழங்குவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும். இவற்றில் ஏதாவது ஒன்றை மாத்திரம் பெறுவதற்கு மாணவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதை பின்வருமாறு நோக்கலாம்.
1. மகாபொல புலமைப்பரிசில்
ஒவ்வொரு ஆண்டும் மகாபொல புலமைப்பரிசில் தொகையைப் பெறுவதற்கு தகுதியான மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்கிறது.
#விண்ணப்பம்:
மேற்படி தகுதியானவர்களை தெரிவு செய்ய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது (ப.மா.ஆ) ஒவ்வொரு மாணவருக்கும் விண்ணப்பப் படிவங்களை தனித்தனியாக வழங்கும். தற்காலத்தில் இவைகள் நிகழ்நிலை (Online) விண்ணப்பங்களாக மாணவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறித்த விண்ணப்பத்தை மாணவர்கள் ப.மா.ஆ. தீர்மானிக்கும் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தி சமர்ப்பித்தல் வேண்டும்.
ப.மா.ஆ. உடன் முழுநேர மாணவராவர் ஆவதற்கு விண்ணப்பிக்கும் போது குறித்த மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கே விண்ணப்பப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே மாணவர்கள் குறித்த மின்னஞ்சல்களை செயலில் (Active) வைத்திருத்தல் வேண்டும்.
#வகைகள்
இப்புலமைப் பரிசில்கள் தகுதி (Merit) மற்றும் சாதாரண புலமைப்பரிசில்கள் என இரண்டு (02) முறைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. க.பொ.த (உ/த) இல் அதிக மதிப்பெண்கள் (Z Score) பெற்ற மாணவர்களுக்கு Merit புலமைப்பரிசில் வழங்கப்படும் அதேவேளை க.பொ.த (உ/த) பரீட்சை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதாரண புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. மொத்த புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையில் 10% Merit அடிப்படையில் வழங்கப்பட மீதமுள்ள 90% சாதாரண புலமைப் பரிசில்களுக்கு வழங்கப்படும்.
#மாதாந்த #கொடுப்பனவு
Merit புலமைப்பரிசில் தொகையாக ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூபா. 5050.00 வும், சாதாரண புலமைப்பரிசில் தொகையாக ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூபா. 5000.00 வும் வழங்கப்படும்.
குறித்த உதவி தொகையானது மகாபொல நம்பிக்கை நிதியத்தினால் (Mahapola Trust Fund) புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்படும். மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகளில் மாத்திரம் மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும்.
2. மாணவர் உதவி தொகை
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும்/ உயர் கல்வி நிறுவனங்களும் மாணவர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
#விண்ணப்பம்
இதற்காக பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழகம் தீர்மானிக்கும் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தி கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
ப.மா.ஆ. ஊடாக உள்ளக மாணவராக விண்ணப்பிக்கும் போது மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கே விண்ணப்பப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே மாணவர்கள் குறித்த மின்னஞ்சல்களை செயலில் (Active) வைத்திருத்தல் வேண்டும்.
வருடாந்த குடும்ப வருமான எல்லை;
மாணவர் உதவி தொகையானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை மையப்படுத்தியே வழங்கப்படுகின்றன. இத்தெரிவில் பெற்றோர்களின் வருடாந்த வருமானம் ரூபா 500,000.00 க்கு சமமாக அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் மாத்திரமே இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார். இது அரச கொள்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மாற்றம் பெறலாம்.
மாணவரின் பெற்றோர் பிரிந்திருந்தால் அதனை உறுதி செய்து கொள்வதற்குரிய ஆவணச் சாட்சிகளை முன்வைத்து அல்லது அவ்வாறு பிரிவது தொடர்பான எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்காத பட்சத்தில் உரிய போலீஸ் பிரிவு அறிக்கையுடன் கிராம அலுவலர் அறிக்கை பெறப்பட்டதன் பிற்பாடே வருமான எல்லையினை தீர்மானிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
மாணவர் திருமணம் முடித்திருந்தால் மணம் முடித்த மாணவர் வேறு குடும்பமாக கருதப்பட்டு அவர்களின் வருமானம் வருடாந்த வருமானமாக கணக்கில் எடுக்கப்படும்.
மேற்குறித்த வருடாந்த வருமான எல்லையில், 19 வயது அல்லது அதற்கு அதற்கு கீழான வயதில் இருக்கும் கூடிய பட்சம் 03 மாணவர்கள் வரை பாடசாலை செல்கின்ற சகோதரன் அல்லது சகோதரிக்காக ரூபா. 24,000.00 வீதம் பெற்றோரின் வருடாந்த வருமானத்தில் இருந்து கழிக்கப்படும்.
அதேபோல், எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவகத்திலும் கற்கை நெறியொன்றைத் தொடர்கின்ற மாணவர் ஒருவருக்கு ரூபா. 36,000.00 வீதம் இரண்டாவது பிள்ளையில் இருந்து மேலே செல்லும் விதத்தில் வழங்கப்படுவதுடன் இத்தகைமையானது தீர்மானிக்கப்படுவது முதல் பிள்ளையானது உதவித்தொகை அல்லது மகாபொல என்பவற்றை பெறாத பட்சத்தில் மாத்திரமேயாகும். இதற்கான சாண்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்படுதல் வேண்டும்.
இதில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய விடயம் யாதெனில், வருமானம் எனும் போது அரச அல்லது தனியார் ஊழியராயின் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து இதர கொடுப்பனவுகள் அனைத்தும் சேர்த்த சம்பளம் (Gross Salary) மாதாந்த வருமானமாகக் கொள்ளப்படும். அத்துடன், பெற்றோரின் பெயரில் காணப்படும் ஏனைய இதர வருமானங்களும் இதில் கணக்கில் எடுக்கப்படும். இந்நிதியுதவி கிடைக்காத மாணவர்களின் பெற்றோர் ஒய்வு பெறும் மரணிக்கும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மீண்டும் இக்கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்க முடியும்.
மாதாந்த கொடுப்பனவு
இவ்வுதவி தொகையானது ஒரு மாணவருக்கு மாதாந்தம் ரூபா. 4000.00 வழங்கப்படும்.
குறித்த உதவி தொகையானது பல்கலைக்கழகத்தினால் உதவி தொகைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தீர்மானிக்கின்றபடி மக்கள் வங்கி அல்லது இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகளில் மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும்.
#தவணைகள்
உதவி தொகைகள் ஒரு கல்வி ஆண்டுக்கு 10 தவணைகள் வீதம், நான்கு வருட கற்கையாயின் 40 தவணைகளும் மூன்று வருட கற்கையாயின் 30 தவணைகளுக்கு செலுத்தப்படும்.
#உதவி #தொகையில் #தடங்கல்
உதவி தொகை செலுத்துதல், அதனை நிறுத்துதல் அல்லது இரத்துச் செய்தல் போன்றன பின்வரும் விடயங்களின் அடிப்படையில் அமையும்.
1. ஒவ்வொரு உதவித்தொகை பெறும் மாணவரும் சம்பந்தப்பட்ட கற்கையில் ஈடுபட வேண்டும் என்பதோடு வகுப்புகளுக்கு சமுகமளிக்கும் வருகை வீதம் #80% கட்டாயம் இருத்தல் வேண்டும்.
2. ஒழுக்காற்று நடவடிக்கைகள் மீது விரிவுரைகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்ட, பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தி அதற்கு தண்டனை விதிக்கப்பட்ட, பகிடிவதை மீதான தண்டனை விதிக்கப்பட்ட, அவமானகரமான செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களின் உதவித்தொகை தவணைகளை பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள்/ உயர் கல்வி நிறுவனர் பரிந்துரைகளைச் செய்யாது.
நன்றி
24/06/2023
பல்கலைக்கழக அலுவலர்களுக்கு, அலுவலக முறையான கடமைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட (Assigned Vehicle) பல்கலைக்கழக வாகனங்களை அவர்களின் தனிப்பட்ட போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும்.
இதற்காக குறித்த அலுவலர்கள், மாதாந்தம் ஒரு கொடுப்பனவை பல்கலைக்கழகத்திற்கு செலுத்துதல் வேண்டும்.
Establishment Circular Letter No. 07/2000 dated 25.03.2000 and Establishment Circular Letter No. 02/2006 dated 13.02.2006.
16/02/2023
Special leave for religious observances - To Muslims (Section 09, Division 1, Chapter X of the University E-Code of the UGC and HEIs)
--------------------------------------------------------------------------
Special leave not exceeding two hours may be granted at the discretion of the Chairman of the Commission / Principal Executive Officer or an officer authorized by him in that behalf and subject to the exigencies of the service to Muslims in the employment of the Commission/Higher Educational Institution / Institute for the purpose of religious observances on Fridays commencing from 12:15 p.m. This special leave may be granted on condition that the person may if necessary be required to work outside his normal office hours to make up for the time spent on such special leave.
Similarly, the letter No. UGC/AC/2017/SA/Gen dated 18.08.2017 titled "Request to support Religious Freedom among all State Universities" states as follows:
1. To reserve sufficient space for religious activities for all religions.
2. To avoid scheduling any form of examination including continuous assessments in Higher Education Institutes between 12 noon to 2.00 p.m. on Fridays, in order to allow Islamic students to attend prayers.
3. To avoid conducting examinations on the day before and after the date of the following main religious ceremonies,
a) Vesak,
b) Thai Pongal,
c) Ramazan,
d) Christmas
சமய அனுட்டானங்களுக்கு விஷேட லீவு - முஸ்லிம்களுக்கு
------------------------------------------------------------------------
ஆணைக்குழுவின் தவிசாளர் / பிரதான நிறைவேற்று அலுவலரின் அல்லது அதற்கென அவரால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவரின் தற்துணிவின் பேரிலும், சேவைத் தேவைகளுக்கு அமையவும், ஆணைக்குழுவில் / உயர்கல்வி நிறுவனத்தில் / நிறுவகத்தில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு சமய அனுட்டான நோக்கத்திற்காக, வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 12:15 மணி தொடக்கம் இரு மணித்தியாலங்களுக்கு மேற்படாத லீவு வழங்கப்படலாம். அவசியம் ஏற்பட்டால், அந்த ஆள் அத்தகைய லீவில் கழிந்த நேரத்தை சரிக்கட்டும் வகையில் அவரது வழமையான அலுவலக மணித்தியாலங்களுக்கு அப்பாலும் வேலை செய்யத் தேவைப்படுத்தப்படலாம் என்னும் நிபந்தனை மீதே இந்த விஷேட லீவு வழங்கப்படலாம்.
அதேபோல், 2017.08.18ஆம் திகதிய UGC/AC/2017/SA/Gen என்ற கடிதத்தில் "அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களிலும் மத சுதந்திரத்தை ஆதரிப்பதற்கான கோரிக்கை" என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அனைத்து மதத்தினருக்கும் சமய நடவடிக்கைகளுக்கு போதுமான இடத்தை ஒதுக்குதல்.
2. இஸ்லாமிய மாணவர்கள் தொழுகையில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியான மதிப்பீடுகள் உட்பட எந்தவொரு தேர்வையும் திட்டமிடுவதைத் தவிர்க்கவும்,
3. பின்வரும் பிரதான சமயச் சடங்குகளின் திகதிக்கு முந்திய தினமும் பிந்திய தினமும் பரீட்சைகளை நடாத்துவதைத் தவிர்த்தல்.
அ) வெசாக்,
ஆ) தைப்பொங்கல்,
இ) ரம்ஜான்,
ஈ) கிறிஸ்துமஸ்
07/02/2023
இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆளுகையின்கீழ், திறந்த பல்கலைக்கழகம் அடங்கலாக 17 தேசிய பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. அவைகள்:
1. கொழும்பு பல்கலைக்கழகம்
2. பேராதனைப் பல்கலைக்கழகம்
3. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
4. களனிப் பல்கலைக்கழகம்
5. மொரட்டுவைப் பல்கலைக்கழகம்
6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
7. இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
8. ருஹூன பல்கலைக்கழகம்
9. கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
10. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
11. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்
12. இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்
13. இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
14. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
15. கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்
16. கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்
17. வவுனியாப் பல்கலைக்கழகம், இலங்கை
மேற்குறித்த தேசிய பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக பின்வரும் 05 பல்கலைக்கழகங்கள் மற்றும் 01 நிறுவகம் என்பன அரசாங்க பல்கலைக்கழகங்களாக மற்றும் நிறுவனங்களாகக் காணப்படுகின்றன.
18. ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (KDU) - இது பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ளது.
19. இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் - உயர்கல்வி அமைச்சின் கீழுள்ளது.
20. இலங்கை பிக்ஷு பல்கலைக்கழகம் - உயர்கல்வி அமைச்சின் கீழுள்ளது.
21. தொழிற்கல்வி தொழிநுட்பப் பல்கலைக்கழகம் (UoVT) - தொழில் மற்றும் தொழிநுட்ப அமைச்சின் கீழுள்ளது.
22. இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் - திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழுள்ளது.
23. தேசிய கல்வி நிறுவனம் - கல்வி அமைச்சின் கீழுள்ளது.
18/01/2023
இலங்கையில் பல்கலைக்கழகங்கள் நிருவகிக்கப்படுவதற்கான இலங்கைப் பாராளுமண்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட சட்ட மூலங்கள்
---------------------------------------------------------------
1. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டம்
2. 1985 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
3. 1988 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
4. 1988 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
5. 1988 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
6. 1989 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
7. 1995 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
8. 2009 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
9. 2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்
17/01/2023
#இலங்கையில் உயர்கல்வி தொடர்பான சட்டவாக்கத்தின் வரலாற்று ரீதியான அபிவிருத்திகள் #
1. 1921 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரிக் கட்டளைச் சட்டம் (Ceylon University College Ordinance No. 20 of 1921).
1921 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரிக் கட்டளைச் சட்டத்தின் மூலம் 1921 ஆம் தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியானது இலங்கையில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும். இப்பல்கலைக்கழகக் கல்லூரியானது லன்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கலைமானி (BA) மற்றும் விஞ்ஞானமானி (B.Sc.) பாடநெறிகளைப் பொறுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் முதல் அதிபராக இந்தியாவின் கல்வியியல் சேவையில் புகழ்பெற்ற கல்வியாளரான Mr. Robert Marrs காணப்பட்டார்.
2. 1942 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழகக் கட்டளைச் சட்டம் (Ceylon University Ordinance No. 20 of 1942).
1942 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழகக் கட்டளைச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழக அந்தஸ்துடன் இயங்கி வந்த இரண்டு சுதந்திர அரசாங்க கல்வி நிறுவனங்களான தகுதிவாய்நத மருத்துவர்களை பயிற்றுவித்த இலங்கை மருத்துவ கல்லூரி (1870) மற்றும் இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி (1921) ஆகியன இணைந்து 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் தேதி தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழகமே (University of Ceylon) இலங்கையில் முதன் முதலில் தாபிக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்தின் முதல் உப வேந்தராக Sir Ivor Jennings காணப்பட்டார்.
3. 1958 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வித்யோதய மற்றும் வித்தியாலங்கார பல்கலைக்கழக சட்டம் (Vidyodaya and Vidyalankara Universities Act No. 45 of 1958).
இச்சட்டத்தின் பிரகாரம் 1870 களில் பாரம்பரிய கற்றல்களை மேற்கொண்ட வித்யோதய பிரிவேனா மற்றும் வித்தியாலங்கார பிரிவேனா ஆகியவற்றிற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. பின்னர், இப்பல்கலைக்கழகங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura) என்றும் களனிப் பல்கலைக்கழகம் (University of Keleniya) என்றும் பெயர் மாற்றம் பெற்றிருந்தது.
4. 1966 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உயர் கல்விச் சட்டம் (Higher Education Act No. 20 of 1966).
1966 ஆம் ஆண்டு வரைக்கும் இச்சட்டத்தின் கீழ் சுதந்திர தன்னாட்சி நிதியூதவி நிலையின் கீழ் பல்கலைக்கழகங்களாக தொழிற்பட்டு வந்த இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Ceylon), வித்தியோதய மற்றும் வித்தியாலங்கார போன்ற பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கான தேசிய பேரவை (National Council for Higher Education (NCHE)) என்ற பொதுவான ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. NCHE ஆனது பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் நிலை போன்றவற்றிற்கிடையில் தளங்களை அமைத்து பல்கலைக்கழகக் கல்வியை ஒழுங்குபடுத்துதலையும் மேற்பார்வை செய்தலையும் மேற்கொண்டு வந்தது. பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் அனுமதியானது NCHE ஊடாகவே செய்யப்பட்டு வந்தது. இதன்போது இலங்கைப் பல்கலைக்கழகத்தின் (University of Ceylon) கொழும்பு வளாகம் (Colombo Campus) கொழும்புப் பல்கலைக்கழகம் என்ற சுதந்திர பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது. ஆனாலும் பேராதனை வளாகமானது (Peradeniya Campus) இலங்கைப் பல்கலைக்கழகமாக (University of Ceylon) தொடர்ந்து செயற்பட்டு வந்தது.
5. 1972 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழகச் சட்டம் (University of Ceylon Act No. 01 of 1972).
இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பெயரிலான ஒரு தனியான பல்கலைகழகத்தின் வளாகமாக இச்சட்டத்தின் கீழ் நான்கு சுதந்திர பல்கலைக்கழகங்கள் மாற்றம் பெற்றன. கொழும்பில் அமையப் பெற்றிருந்த பல்கலைக்கழகத்தின் நிருவாக கட்டமைப்பானது Senate House என்ற பெயரில் அரச மற்றும் தனிப்பட்ட வளாகங்களுக்கிடையில் தளங்களை அமைத்துக் கொடுத்தது. இலங்கை தொழிநுட்பக் கல்லூரியானது (Ceylon College of Technology) இலங்கை பல்கலைக்கழகத்தின் (University of Sri Lanka) கடுபெத்த வளாகமாக (Katubedda Campus) தரமுயர்த்தப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வாளாகம் (Jaffna Campus of the University of Sri Lanka) ஆரம்பிக்கப்பட்டது.
10/01/2023
Establishment Circular Letter No. 10/2022 dated 16.11.2022.
------------------------------------------------------------------
An employee can take paid leave to sit examinations or appear for Viva Voce examinations up to ten (10) occasions during his/her career as per the Establishment Circular Letter No. 04/2002 dated 31.01.2002 on submission of documentary proof while keeping the maximum total period allowed under this provision as two months (60 days) excluding holidays and weekends unchanged.
Such leave will be granted for professional advancement in areas directly relevant to any employee's field of activity in the University System. Leave will be approved by the Commission/Council/Board of Management on the recommendation of the Secretary/Registrar/Dean/Head of Department/Sectional Head, subject to the exigencies of service.
--
2022.11.16 ஆம் திகதிய 2022/10ஆம் இலக்க தாபன சுற்றறிக்கைக் கடிதம்.
-----------------------------
2002.01.31 ஆம் திகதிய 2002/04ஆம் இலக்க தாபன சுற்றறிக்கைக் கடிதத்தின் பிரகாரம், பல்கலைக்கழக முறைமையிலுள்ள பணியாளர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கோ அல்லது Viva Voce பரீட்சைக்கு தோற்றுவதற்கோ சம்பளத்துடன் கூடிய விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம். இது அவர்களின் மொத்த சேவைக்காலத்தில் பத்து (10) சந்தர்ப்பங்களுக்கு மேற்படாத வகையில் வழங்கப்படுவதோடு இரண்டு மாதங்களை விஞ்சாமலும் இருத்தல் வேண்டும். இந்த லீவைக் கணக்கிடும் போது அந்த விடுமுறைக் காலத்தினுள் வருகின்ற அரசாங்க விடுமுறை தினங்கள், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் என்பவற்றை உள்ளடக்கலாகாது. இவற்றின் போது உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படல் வேண்டும்.
பல்கலைக்கழக முறைமையில் ஒவ்வொரு ஊழியரினதும் செயற்பாட்டுத் துறையுடன் நேரடியாக தொடர்புடைய துறைகளில் தொழில்சார் முன்னேற்றத்திற்காக அத்தகைய விடுமுறை வழங்கப்படும். குறித்த விடுமுறையானது செயலாளர்/பதிவாளர்/பீடாதிபதி/துறைத் தலைவர்/பிரிவுத் தலைவர் ஆகியோரின் பரிந்துரையின் மேல் ஆணைக்குழுவினால்/பேரவையினால்/முகாமைச்சபையினால் சேவையின் தேவைகளுக்கு எற்ப அனுமதிக்கப்படும்.