Fassiyyathush Shazuliyya

Fassiyyathush Shazuliyya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fassiyyathush Shazuliyya, Tutor/Teacher, 100, Naleem Hajiar Mawatha china fort Beruwala., Beruwala.

மனிதர்களையும், ஜின்களையும் படைத்தது என்னை வணங்குவதற்கன்ரி வேறில்லை என்று நமக்கு அறுள்மறையாம் திருமரை கட்டளையிடுகின்றது!இ...
07/09/2020

மனிதர்களையும், ஜின்களையும் படைத்தது என்னை வணங்குவதற்கன்ரி வேறில்லை என்று நமக்கு அறுள்மறையாம் திருமரை கட்டளையிடுகின்றது!

இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் ரயீஸுல் முபஸ்ஸிரீன் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அறிந்து வணங்குவதற்கன்ரி வேறில்ஸை என்று கூறுகிரார்கள்!

ஆனால் இன்றுல்ல முஸ்லிம்களின் நிலையோ பரிதாபமானது, இறைவனின் நோக்கத்தை மறந்து மிகவும் சிரத்தையெடுத்து அமல் செய்கிரார்கள், அமலுக்கு கூலியுண்டு அது வேறு விடயம், ஆனால் அவனை அறியவேண்டும் என்ற அல்லாஹ்வின் நோக்கத்தை மறந்து தான் வணங்கக் கூடிய ரப்பை அறியாமல் சடத்துவ அமல் செய்பவர்களாக வாழ்ந்து வேற்றுணர்வுடன் தான் பெரிய அமலாலி என்று தாவா செய்யும் மூடர்களாகவே வாழ்ந்து மரணிக்கிரார்கள்!

தரீக்காக்கள் உருவாக்கப்பட்டது இறைவன் மனிதனை இப் பூவுலகிற்கு அனுப்பிய நோக்கத்தை அடைவதற்க்கே ஆனால் இன்று தரீகத்தின் நோக்கத்தை தரீகாவில் உல்லவர்களுக்கே தெரியவில்லை அதை அறிந்தவர்களை அனுகி அறியவேண்டும் என்றும் முயற்சிக்கவில்லை!

குதுபுல் அக்பர் அபுல்ஹஸன் ஷாதுலி இமாமவர்கள் கூறுகிர கீழ்வரும் பொன்மொழியை ஆலமாக சிந்தித்து தரீகத்தின் நோக்கத்தை அறிந்து இறைவனின் நோக்கத்தையடைய முயற்சிப்போம், இமாமவர்கள் கூறுகிரார்கள்,👇👇👇

உனக்கு துணியாவை காட்டித் தந்தவன் உன்னை ஏமாற்றிவிட்டான்!

உனக்கு அல்லாஹ்வை காட்டித்தராமல் அமலை மட்டும் காட்டித் தந்தவன்
உன்னை வறுத்தப்படுத்தி விட்டான்!

உனக்கு யார் அல்லாஹ்வை காட்டித் தந்தானோ அவனை உன் உற்ற நன்பனாக ஆருயிர் தோழனாக ஆக்கிக்கொள், அவன் மூலமாகவே உன்னுடைய எல்லாக் காரியங்களும் சித்தியடையும்..

28/07/2020

மறுமை நாளின் அடையாளங்களில் சில...
மோசடிக்காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.

நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.

மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்
அன்பர்களே, அல்லாஹ்வின் வெறுப்புக்கு இலக்கான சண்டாள நயவஞ்சகர்களின் தொடர்பை அடியோடு அறுத்துக்கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்.
இக்காலத்திலுள்ள மக்களில் பெரும்பாலானவர்களை நீங்கள் அண்டி பழகாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அவர்கள் மனித உடையணிந்த ஒநாய்களாகவே இருக்கிறார்கள்.
கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)

03/05/2019

திக்று தடை பட பாவமே காரணம்........................................
அல்லாஹ்வை திக்று செய்வதற்காக உனது நாவையும்,அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக உனது இதயத்தையும்,அவனுடைய கட்டளையை பின்பற்றுவதற்காக உனது உடலையும், நீ ஒதுக்கி வைத்துவிடுவாயாக, இவ்வாறு செய்தால் நல்லடியார்களில் உள்ளவனாக நீ ஆகிவிடுவாய்'

திக்று செய்வது உன்னுடைய நாவின் மீது கனமாக இருந்தால், உன் பேச்சில் வீனானவை அதிகமானால், மனோ இச்சைகளில் உன் உடலுறுப்பு மூழ்கினால், உன் சிந்தனை வாசல் உனக்கு மூடப்பட்டால், இவை எல்லாம் உன்னுடைய மாபெரும் பாவங்களின் மூலமாக என்பதை அறிந்துகொள்.

சாதுலி நாயகம்.

01/05/2018
07/11/2017

உலகில் தோன்றிய சகல தரீகாக்களின் ஸ்தாபகர்களும் தரீக்காக்களை உருவாக்கியதன் நோக்கம் அவர்களுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொல்வதற்காக அல்ல, மாறாக அந்தந்தக்காலத்தில் வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்குவதற்கே, தரீக்காக்கலின் பயிற்சி முறைகளிள் வித்தியாஷங்கள் தோன்றினாலும் முடிவு கங்கைகள் எல்லாம் சமுத்திரத்தில் கலந்துவிடுவது போன்றுதான்.

ஆனால் இன்று தரீக்காக்களின் நோக்கங்களை மறந்து சடரீதியான அமல்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எங்களாள் அவதானிக்க முடிகிறது, வெளிரங்க அமல்களுக்கு முக்கியத்துவம் கட்டாயம் கொடுக்கத்தான் வேண்டும் ஆனால் அந்த அந்த அமல்களை அவ்ராதுகளை செய்வதன் நோக்கம் கல்பை பரிசுத்தப்படுத்துவதற்கே என்றதை நாம் மறந்துவிட்டோம், சாதுலி இமாமவர்கள் கூறுகிரார்கள் என்னுடைய தரீகத்தில் முக்கியமானது ஜிஹாதுல் அக்பர் என்று சொல்லக்கூடிய நப்ஸோடு ஜிஹாது செய்வதாகும் என்று குறிப்பிடுகிரார்கள், நப்ஸோடு ஜிஹாது செய்யாதவன் பொறாமை,இச்சை,மேலென்னம்,பதவிகளை அடையவேண்டும் போன்ற ஆசைகள்,விட்டுக்கொடாமை இன்னோரன்ன துர்குணங்களை அவனிடத்தில் இருப்பதை அவதாணிக்கலாம்,
இவர்கள் தான் சடரீதியான தரீகாவை பின்யற்றியவர்கள்.

இதற்கு மாராக தரீகத்தின் அகமியங்களை அறிந்து கொண்டவர்களை சாதுலி இமாமவர்கள் குறிப்பிடும்போது என்னுடைய ஸிர்ரை சுமக்க முடியாத ஆயிரம் முரீதுகளை விட ஸிர்ரை சுமக்கக்கூடிய ஒரு முரீதே எனக்கு மேலானவன் என்று குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய பாதையில் மரனித்தவர்களை நீங்கள் மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் என்று இவர்களைப்பற்றி குர்ஆன் சாட்சி பகர்கிறது,
இவர்கள்தான் நபிகளார் சொன்ன ஜிஹாதுல் அக்பரில் வெற்றிபெற்றவர்கள்.

19/06/2017

இல்முத் தௌஹீத் என்று சொல்லக்கூடிய மஹ்ரிபாவுடய அறிவை சில தரீக்கத்துடய செய்கு மார்கள் பகிறங்கமாகவே பேசும்போது, இன்னும் சில செய்குமார்கள் பகிறங்கமாக பேசுவதை தடைவிதித்திருக்கின்றனர், அதற்காக அவர்கள் தௌஹீதை மறுத்தவர்கள் அல்ல, உதாரணத்திற்கு சாதுலியா தரீகாவை எடுத்துக்கொண்டால் ஸய்யதினா அபுல்ஹஸன்சாதுலி இமாமவர்கள் மிகநுற்பமாகவே மஹ்ரிபாவை பேசியிருக்கிறார்கள் அந்தி சந்திகளிள் எல்லாம் பேசுவதை தடைசெய்திருக்கிறார்கள், இமாமவர்கள் ஒரு சமயம் கூறிணார்கள் உங்களுக்கு அல்லாஹ்தஆலா அழித்த நிஹ்மத் மஹ்ரிபாவாகும் அதை மக்களுக்கு சொல்லிக்காட்டுங்கள், அதே சமயம் இன்னொரு தடவை கூறிணார்கள், மஹ்ரிபா வளங்கப்பட்டவர்கள் உல்லத்தில் ஜம்ஆக இருக்கட்டும் நாவில் பர்க் இருக்கட்டும் இல்லாவிட்டால் மக்கள் உங்களை ஸிந்தீக் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் என்று கூருகிறார்கள்.
இதிலிருந்து நாம் எடுக்க வேண்டிய படிப்பினை என்னவென்றால் சரீயத்தையே புறிய முடியாத பாமரர்களிடமோ காரணமில்லாமல் மஹ்ரிபாவை எதிர்கக்கூடியவர்களிடமோ, இந்த அறிவை பேசவோ தர்கம்புறியவோ கூடாது என்பதே என்னுடைய கருத்தாகும்.

26/03/2017

குதுபுமார்கள் என்பவர்கள் யார்?..................................................

இன்றுள்ள ஒவ்வொரு தரீக்காக்கலின் முரீதுகளும் தங்களுடைய ஞான ஆசிரியர்களை(செய்கு) தாங்கள் வைத்த அன்பின் காரணமாக ஒரேயடியாகவே குதுபுஸ்ஸமான் என்ற பட்டத்தைக் கொடுத்து விடுகிறார்கள், ஸமானுடைய குத்பு என்பது உலக நடைமுறையில் கொடுக்கப்படக்கூடிய பட்டங்கள் போண்றதல்ல,அது கண்மணி நாயகத்தின் கலீபாவாக முத்து முகமது நபியால் ஒவ்வொரு காலத்திலும் கிலாபத்துக் கொடுக்கப்பட்டவர்களே,குதுபுஸ்ஸமான் என்று அழைக்கப் படுகிறார்கள்.
இற்றைக்கு சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த எங்களுடைய சாதுலிய்யதுல் பாஸிய்யா தரீகாவின் ஆன்மீகத் தந்தை குதுபுஸ்ஸமான் பாஸி நாயகம் அவர்கள் ஸமானுடைய குத்பைப் பற்றி குறிப்பிடும் போது, இந்தக் காலத்தின் குத்பாக நான் இருக்கிறேன் குதுபாணிய்யத்துடய பரிவட்டம் எனக்கு எனது திருப்பாட்டணார் முகமது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கலால் போர்த்தப்பட்டுள்ளது,ஏழு வாணங்களையும் பார்க்கிறேன் அங்கு எனது ஆட்சி நடக்கிறது ஏழு பூமிகளையும் பார்க்கிறேன் அங்கும் எனது ஆட்சி தான் நடக்கிறது இந்த உலகம் இயங்குவதே என்னைக் கொண்டுதான் இந்தக்காலத்தில் வாழ்கின்ற எல்லா ஆரிபீண்களுடைய நெற்றியிலும் என்னுடைய பாதம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள், இவர்கள் தான் ஸமானுடைய குதுபுகள்

19/01/2017

சாதுலி நாயகத்தின் முதலாவது கலீபாவான அபுல் அப்பாஸ் முர்ஸி, ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூருகிரார்கள்,

என்னுடைய உல்லத்தில் ஒரு என்னமிருந்தது அதாவது நல்ல ருஷியான உணவு பானங்களையும்,ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளையும், ருஷிப்பதை, அணிவதை தவிர்ந்து புகறாக்களுடைய,
ஆடையையும், உணவையும் தேர்ந்து எடுக்கவேண்டும் என்ற என்னத்துடன் இருந்தேன், இதே என்னத்துடன் என்னுடைய நாயகத்திடம் சென்றேன்,
அப்போது என்னுடைய நாயகம், அபுல் அப்பாஸே முதலில் நீ அல்லாஹ்வை அறிந்துகொள், பின்பு சரீஅத்துக்கு முரனில்லாமல் எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள் என்ரு கூரினார்கள்.

Address

100, Naleem Hajiar Mawatha China Fort Beruwala.
Beruwala
12070

Alerts

Be the first to know and let us send you an email when Fassiyyathush Shazuliyya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fassiyyathush Shazuliyya:

Shortcuts

Share

Category