வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக,
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த நிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்களை இழந்து கல்வியை பெற முடியாத நிர்கதியான நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அவர்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய வேண்டியது எமது கடமையாகும். எனவே பின்வரும் பொருட்களை சேகரித்து ஒப்படைக்குமாறு வேண்டி இருக்கிறார்கள்.
தேவையான பொருட்கள்:-
* கடந்த கால பாட குறிப்புகள், கடந்த கால வினா புத்தகங்கள்
* சீருடைகள் / பாவித்த நல்ல நிலையில் உள்ள சீருடைகள்
* அப்பியாச கொப்பிகள்
* பாடசாலை பைகள்
* தண்ணீர் போத்தல்கள்
* பாதணிகள்
* பேனைகள், பென்சில்கள்
* கலர் பெட்டிகள்
* மாணவிகளுக்கான நெப்கின்கள்
*அத்தோடு துணிகள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலவசமாகவும் அவசரமாகவும் தைத்து தர எமது பிரதேச tailors தயாராக இருக்கிறார்கள். முடியுமானவர்கள் வெள்ளைத் துணிகளையும் வழங்க முடியும்.
எனவே எமது பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு தங்களாலான பொருட்களை நாளை (03/12/2025) காலை 9 மணி முதல் பாடசாலையில் ஒப்படைக்க முடியும். ஆசிரியர்களும் கல்வி சாரா உத்யோகத்தர்களும் அவற்றை பொறுப்பேற்பார்கள்.
- நன்றி -
Oddamavadi Central College - National School
OCC
09/11/2025
07/11/2025
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட் /மம /ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)ன் நூலகத்தின் ஏற்பாட்டில் "புத்தகம் வாசிப்போம் உலகை வெல்வோம்" என்ற தொனிப்பொருளில் நூலக வாரம் ( 27.10.2025-31.10.2025 ) வரை அனுஷ்டிக்கப் பட்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு வாசிப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் வகையில்போட்டி நிகழ்வுகள் மாணவர் மற்றும் பாடசாலை ஆளணியினருக்கிடையில் நடாத்தப்பட்டன. நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் MA. ஹலீம் இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MI.சேகுஅலி அவர்களும், கெளரவ அதிதியாக கோரளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிமனையின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் AMM. தாஹிர் ( SLES )அவர்களும் ,ஓய்வுபெற்ற அதிபர் ஜனாப் VA. ஜுனைட் அவர்களும் (SLPS) நூலகர் பொது நூலகம் ஓட்டமாவடி MC ஜனாப் சரீப் ஹுசைன் அவர்களும் ,நூலக குழுவினரும், பாடசாலை ஆளணியினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
31/10/2025
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலக வாரத்தின் ஓர் நிகழ்வான புத்தகக் கண்காட்சியினை கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் MA.கலீம் இஸ்ஹாக் அவர்களும் பிரதி அதிபர்களும், உப அதிபர்களும், ஆசிரியர்களும், நூலகக் குழுவினரும் ஆரம்பித்து வைத்த போது
31/10/2025
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலக வாரத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாக கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் MA.கலீம் இஸ்ஹாக் அவர்களும் பிரதி அதிபர்களும், உப அதிபர்களும், ஆசிரியர்களும், நூலகக் குழுவினரும் நூலக வாசகங்கள் தாங்கிய விருட்சத்தினை காட்சிப் படுத்திய போது
31/10/2025
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலக வாரத்தின் ஓர் நிகழ்வான வீதி விழிப்புணர்வு ஊர்வலத்தினை கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் MA.கலீம் இஸ்ஹாக் அவர்களும் பிரதி அதிபர்களும், உப அதிபர்களும், ஆசிரியர்களும், நூலகக் குழுவினரும் ஆரம்பித்து வைத்த போது
28/10/2025
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இரட்டையர்கள் சாதனை
(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் இரட்டையர்கள் மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி சிங்களப் போட்டியில் கலந்து கொண்டு தங்ளது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில், ஆதிப் அஹமட் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், வாசிப்புப் போட்டியில் ஆகிப் அஹமட் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர், சென்ற முறை பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள், ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.ரீ.எம்.றியாஸ் - வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய ஆசிரியை என்.எம்.எப்.பர்ஸானா தம்பதிகளின் புதல்வர்களாவர்.
தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
23/10/2025
மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டி தரம் 7 பிரிவில் எமது பாடசாலை மாணவர்கள் இரு நிகழ்ச்சிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.
1. MR. ஆதிப் அகமட்
(இரண்டாம் இடம் -பேச்சு)
2. MR. ஆகிப் அகமட்
(மூன்றாம் இடம் - வாசிப்பு)
அம் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் பாடசாலை சமூகம் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
17/10/2025
தேசியவாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது பாடசாலை நூலகத்தில் நடைபெற்ற
மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளின் போது
16/10/2025
Our Students!!!
16/10/2025
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எமது பாடசாலை நூலக குழுவினால் பல நிகழ்வுகள் ஓக்டோபர் மாதம் முழுவதும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக கொடிவாரமும் கொடி விற்பனையும் ( 16.10.2025) இன்று கல்லூரி முதல்வர் MA.ஹலிம்இஷ்ஹாக் சேர் அவர்கள் கொடி விற்பனையை ஆரம்பித்து வைத்த போது. கல்லூரியின் பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்களும் நூலக ஊழியர்களும் கலந்து கொண்ட போது.
16/10/2025
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எமது பாடசாலை நூலக குழுவினால் பல நிகழ்வுகள் இம் மாதம் முழுவதும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக சிறப்புப் பேச்சாளர்MIM அன்வர் (ஸலபி,மதனி) அவர்கள் திங்கட்கிழமை (13/10) காலை ஆராதனையில் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி மாணவர் ஆசிரியர் மத்தியில் உரையாற்றினார்கள்.
மேலும் எமது கல்லூரி நூலகத்திற்கென கல்லூரி முதல்வர் அவர்களிடம் நூல்களை அன்பளிப்பு செய்தார்கள்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Main Street, Oddamavadi
Batticaloa
30420