18/06/2026
#நன்றி_நவிலல்
தமிழ் தினம், ஆங்கில தினம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி கோட்டமட்ட மற்றும் வலய மட்டங்களில் வெற்றி பெற்ற எமது மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒரு தொகை தங்கப்பதக்கங்களை தந்துதவிய தரம் 7M எம்.எஸ்.எப்.பராஹ் ஸனாறியின் தந்தையான ஐ.எம்.சாஜஹான் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
17/06/2026
#தேசிய_டெங்கு_ஒழிப்பு_வாரம்
டெங்குவாரத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் நாளை காலை 8 மணியளவில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சிரமதான பணிகள் இடம்பெற இருப்பனால் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிரமதான பணியில் பங்கேற்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.
12/06/2026
#மாகாணம்_செல்லும்_அல்_அமீனின்_நாமம்
அண்மையில் இடம்பெற்ற வலயமட்ட தமிழ் தினப் போட்டியில் எமது பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவியான ஏ.எப்.ஸப்னா அறிவிப்பாளர் போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று மாகாணப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.
குறித்த மாணவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாணமட்ட போட்டியிலும்
வெற்றிபெற பிரார்த்திக்கிறோம்.
அத்தோடு குறித்த மாணவியை போட்டிற்காக பயிற்றுவித்த எமது தமிழ் பாட ஆசிரியர்களான எஸ்.எம்.பர்சான் மற்றும் ஏ.எம்.என்.சிபாயா ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
09/06/2026
#ஆங்கில_தினப்_போட்டிகளில்_2026_எமது_மாணவர்கள்_சாதனை
அண்மையில் நடைபெற்ற கோட்டமட்ட ஆங்கில தினப் போட்டிகளில் கீழ் வரும் எமது மாணவர்கள்
1. MF.Faiz Ahmed(Grade 12)
:1st place in Oratory Impromptu
:2nd place in Dictation
2. MIF.Samla(Grade 9)
: 1st place in Handwriting
3. MTF.Sana(Grade 13)
:2nd place in Dictation
4. NF.Nasrin( Grade 12)
:3rd place in Storytelling
கோட்டத்திலுள்ள ஏனைய பாடசாலை மாணவர்களுடன் போட்டியிட்டு 5 இடங்களை வென்றுள்ளதோடு வலயமட்ட போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர்.
குறிப்பாக இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த எமது பாடசாலையின் ஆங்கிலப்பாட ஆசிரியர்களான எம்.ஐ.எம்.றபீக், ஏ.எம்.நுஸ்ரத் பேகம் ஆகியோருக்கும், இதற்கு துணை நின்ற ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
05/06/2026
#சர்வதேச_சுற்றாடல்_தின_நிகழ்வு
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “Urgent Climate Action" எனும் கருப்பொருளில் (5) இன்று வெள்ளிக்கிழமை எமது பாடசாலையில் பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதிபர் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு காலை ஆராதனை உரையினை ஏ.எல்.எம்.நிலாம் ஆசிரியர் நிகழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வுகளும் நடைபெற்றன.
இறுதியாக இந் நிகழ்வுகளில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் தாகசாந்தியும் ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.
05/06/2026
#தேசிய_சுற்றுச்சூழல்_வாரம்_2026
03/06/2026
மாணவர் பாராளுமன்ற அமர்வும் அமைச்சரவை பதவியேற்பும் - 2026
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வும், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பும் அன்மையில் அதிபர் ஏ.ருபாய்தீன் தலைமையில் பாடசாலை கேற்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடாத்தி செல்வதற்கான சபாநாயகர் தெரிவும் அமைச்சரவை நியமனமும் நடைபெற்றது.
இதன் போது பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா அவர்களும் ஆசிரியர்களான ஏ.ஜீ.அமீர், எம்.எம்.எம்.நவாஸ், ஏ.எல்.நிலாம், எம்.பீ.எம்.முபாசிர், ஏ.பீ.பஸ்மிலா, ஏ.எம்.என்.சிபாயா, ஏ.எல்.எப்.நுஸ்கா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திட்டமிட்டு நடத்தப்படுகின்ற பாராளுமன்ற அவை போன்ற மாதிரி அமைப்பில் மிகவும் திறம்பட நடாத்தப்பட்ட மாணவர் பாராளுமன்ற கட்டமைப்பு உண்மையில் வரவேற்கத்தக்கது. வாக்களிப்பதை மட்டுமே அரசியல் அறிவாகக் கொண்ட தலைமுறையினரில் இருந்து பாராளுமன்றம் பற்றிய அரசியல் அறிவும் கொண்ட சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கான மாபெரும் முயற்சி இதுவாகும்.
பாடசாலை மட்டங்களில் ஊக்குவிக்கப்படுகின்ற இவ்வாரான அரசியல் சார்ந்த செயற்பாடுகள் தான் மாணவர்களின் ஆளுமைகளை வெளிஉலகிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களாக காணப்படுகின்றன.
27/05/2026
𝐇𝐚𝐩𝐩𝐲 𝙴𝚒𝚍 𝙰𝚕-𝙰𝚍𝚑𝚊 1447 ℍ𝕚𝕛𝕣𝕚𝕒𝕙
"𝐰𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐲𝐨𝐮 & 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐚 𝐣𝐨𝐲𝐟𝐮𝐥 𝐚𝐧𝐝 𝐛𝐥𝐞𝐬𝐬𝐞𝐝 𝐄𝐢𝐝 𝐚𝐥-𝐀𝐝𝐡𝐚 𝐦𝐚𝐲 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐚𝐜𝐫𝐢𝐟𝐢𝐜𝐞 𝐛𝐞 𝐚𝐩𝐩𝐫𝐞𝐜𝐢𝐚𝐭𝐞𝐝 𝐚𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐫𝐚𝐲𝐞𝐫𝐬 𝐚𝐧𝐬𝐰𝐞𝐫𝐞𝐝"
🅦🅘🅢🅗🅔🅢 🅕🅡🅞🅜 🅐🅛-🅐🅜🅔🅔🅝 🅕🅐🅜🅘🅛🅨