28/04/2026
மட்டக்களப்பு கோட்டமட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பாராட்டுக்களும் இன்றைய காலை ஆராதனையின்போது வழங்கப்பட்டது.
இவ்வெற்றிக்காக உழைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
உங்களது வெற்றி தேசியம்வரை நீள கல்லூரிச் சமூகமாக வாழ்த்துகிறோம்.
27/04/2026
“ஓட்டிசம்” தொடர்பான விழிப்புணர்வு இன்றைய காலை ஆராதனையில் மனநல வைத்திய அதிகாரி திரு.யூடி ரமேஸ் அவர்களால் எமது கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
11/04/2026
10. 04.2026 நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவர்களான
1. இடது கை வேகப்பந்து வீச்சாளர் செல்வன் ஜெரோன் 13 வயது பிரிவின் சிறந்த பந்துவீச்சாளராக
2. செல்வன் L. டிலக்க்ஷ்மன் 13 வயது பிரிவின் சிறந்த துடுப்பாட்ட வீரராக
தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
10/04/2026
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக Koddaimunaisc Batticaloa இனால் ஒரு மில்லியன் பெறுமதியான கடின பந்து கிரிக்கட் உபகரணங்கள் பாடசாலையின் கிரிக்கட் வீரர்களை வலுப்படுத்துவதற்காக வழங்கி வைக்கப்பட்டன.
இந்துக் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் அணி வீரர் இரா.உதயராஜன் அவர்கள் கிரிக்கட் உபகரணங்களை பாடசாலை அதிபர் கே.பகிரதன் அவர்களிடம் இன்று (10) கையளித்தார். மேலும் பாடசாலை மாணவர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரியின் பழைய மாணவரும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் ஆகியவற்றின் பணிப்பாளருமான உதயராஜ், கோட்டைமுனை விளையாட்டு கழக தலைவர் சடாட்சரராஜா, மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழக, கோட்டைமுனை விளையாட்டு கிராம அங்கத்தவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது
இந் நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் தலைவர் கே.சதீசன், கோட்டைமுனை விளையாட்டுக் கழக பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், இ.சிவநாதன், ஈ.பி. பி அக்கடமியின் இணைப்பாளர் வீ. வசந்தமோகன், மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
24/03/2026
2026 ஆம் ஆண்டில் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களது தனி நபர் பெறுபேற்று இலக்கு (Student Self Target) தொடர்பான கலந்துரையாடல் எமது மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் திரு.பகீரதன் தலைமையில் இன்று இடம் பெற்றது. இதில் மதிப்பிற்குரிய எமது வலயக்கல்வி பணிப்பாளர் திரு. ரவி மற்றும் மதிப்பிற்குரிய கல்வி திட்டமிடல் அபிவிருத்திக்கும் பொறுப்பான திரு.குகதாசன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வை உளவள ஆலோசனை ஆலோசகர் திரு.ஜெகநாதன்(வலயக்கல்வி) சிறப்பாக நடத்தி வைத்தார்.
23/03/2026
*உயர்தர தொழிற் பிரிவுக்கு தரம் 12 இல் புதிய மாணவர்களை அனுமதித்தல் -2026/2027*
தற்போது உயர்தர தொழிற் பிரிவுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்காக கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
2025(2026) O/L எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எனவே மாணவர்கள் 27.03.2026 முன்னர் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து எமக்கு அனுப்பி வைக்கவும்
அல்லது கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அனுப்பிவைக்க முடியும்
www.moe.gov.lk
*மேலதிக தகவல்களுக்கு*
உயர்தர தொழிற் பிரிவு
மட்/மட்/ இந்து கல்லூரி
மட்டக்களப்பு.
☎️ 0652222377
13/03/2026
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (2026.03.12) கல்லூரியின் அதிபர் க. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் கிழக்கு இலங்கையின் முதலாவது சித்த மருத்துவ விசேட பொது வைத்திய நிபுணருமான Dr. Sarangapany Uthayanan (Consultant Physician) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
𝐂𝐡𝐞𝐜𝐤 𝐎𝐮𝐭 𝐇𝐞𝐫𝐞 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐅𝐮𝐥𝐥 𝐏𝐡𝐨𝐭𝐨 𝐂𝐨𝐥𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧📷
https://www.facebook.com/share/1DGTZKPn1V/
10/03/2026
🏐வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2️⃣0️⃣2️⃣6️⃣
09/03/2026
வலய மட்ட SPELL BEE - 2025 Competition இல் பங்கு பற்றி வெற்றி பெற்ற எமது கல்லூரி மாணவர்களுக்கு எமது கல்லூரி முதல்வர் மற்றும் பிரதி அதிபர்கள் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்கள்.
பங்குபற்றிய மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🤝😍
05/03/2026
சுற்றாடல் குழுவிற்கான இரண்டாவது சின்னம் சூட்டும் வைபவம்😍
எமது கல்லூரியின் சுற்றாடல் குழு மாணவர்களுக்கான இரண்டாவது சின்னம் கல்லூரியின் முதவரால் இன்று காலை ஆராதனையின் போது சூட்டப்பட்டது.
இம் மாணவர்களுடைய சூழல்சார் செயற்பாடுகள் கல்லூரிக்கு பலம் சேர்ப்பதாக அமையட்டும்👍