13/05/2026
எமது பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதார நலன் கருதி, வன்னி ஹோப் (Vanni Hope) நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பெறுமதிமிக்க திறன் பலகை (Smart Board) மற்றும் புனரமைக்கப்பட்ட 13 மலசலக்கூடங்கள், மாணவர்களுக்கான நீர் வசதிகள் இன்று மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக எமது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவியமைக்கும், நீண்டகால தேவையாக இருந்த மலசலக்கூடங்களை மிகச்சிறந்த முறையில் திருத்தம் செய்து தந்தமைக்கும் வன்னி ஹோப் நிறுவனத்திற்கும், இதற்கான அனுசரணை வழங்கியிருந்த VINVA நிதியம் மற்றும் SMEC நிறுவனத்திற்கும் அதன் பின்னால் நின்று உழைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்விற்கு வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் திருவாளர் ரஞ்சன் சிவஞான சுந்தரம், மாகாண இணைப்பாளர் திரு ராதா மற்றும் திரு குணதீபன், கள ஆய்வாளர் திரு பாஸ்கர்ன் மற்றும் பாடசாலை இணைப்பாளர் திரு N. சசிகுமார் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர்.
உங்கள் இவ்வாறான உன்னத மனிதாபிமானப் பணிகள் தொடர எமது வாழ்த்துக்கள்!
12/05/2026
பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரிக்கு 2028 ஆம் ஆண்டுக்குரிய உயர்தர #பெளதிக விஞ்ஞான, #உயிரியல் விஞ்ஞான, #வணிக மற்றும் #கலைப் பிரிவுகளுக்கான மாணவர் விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. உரிய #இலக்கங்களை தொடர்புகொண்டு அல்லது கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தங்களது விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக் கொள்க.
11/05/2026
அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வன்னி ஹோப் நிறுவனத்தினால் எமது பாடசாலைக்கு திறன் பலகையொன்று அன்பளிப்புச் செய்ததுடன் 13 மலசலக்கூடங்கள் திருத்தம் செய்து மாணவர்களின் மீள் பாவனைக்காக மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதிகளையும் மேம்படுத்தி கொடுத்துள்ளனர். மேற்படி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக பாடசாலை பாவனைக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 13 ஆம் திகதி, புதன்கிழமை Vanni Hope நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட நிர்வாகிகள் வருகைத்தரவுள்ளனர்.
மேலும் திறன்பலகையை வழங்குவதற்கு எமது பாடசாலையை பரிந்துரைத்த சபரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு V. சண்முகநாதன் அவர்களுக்கும் மலசலக்கூடங்களை திருத்துவதற்கும் குடிநீரை வழங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்துக்கொடுத்த பாடசாலை பழைய மாணவர்கள் சங்க செயலாளர் திரு N. சசிகுமார் (இந்துக் கல்லூரி) அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
08/05/2026
#புவியியல் உலகில் ஒரு பயணம் - Vista 2026! 🌍✨
எமது பாடசாலை உயர்தர புவியியல் பிரிவு மாணவர்களின் அயராத உழைப்பிலும், தேடலிலும் உருவான "Geo Vista" புவியியல் கண்காட்சி ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்று முடிந்தது. 🗺️
மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகள், வரைபடத் திறன்கள் மற்றும் புவியியல் சார்ந்த மாதிரிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. பாடப்புத்தகத்தில் கற்ற விடயங்களை செயல்வழிக் கற்றலாக மாற்றிக் காட்டிய எமது மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏🎓
இக்கண்காட்சிக்கு பலாங்கொடை இந்துக் கல்லூரி, திருவள்ளுவர் தமிழ் மகா வித்தியாலயம், ஜெயிலாணி தேசிய பாடசாலை, புனித எக்னஸ் மகளிர் கல்லூரி, புத்தஜெயந்தி மத்திய கல்லூரி, வித்தியாலோக்க மத்திய கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பங்குபற்றி கண்காட்சியினை சிறப்பித்தனர்.
இளம் புவியியலாளர்களின் இந்த முயற்சி தொடரட்டும்! 🚀
24/04/2026
# # **கலாசாரம், பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் கொண்டாட்டம்…** ✨🌿
நமது கல்விச் சமூகத்திற்குள் நிலவும் நல்லிணக்கம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பிரதிபலிப்பாக
2026 ஏப்ரல் 24 அன்று, பாடசாலையின் சகோதர மொழி ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து புத்தாண்டு விழாவைக் முன்னிட்டு ஆசிரியர்களுக்கு உணவு மேசையொன்று தயார் செய்து விருந்துபசாரமொன்றை வழங்கினர். 🎉🇱🇰
நமது சமூகத்தின் செழுமையான பன்முகக் கலாச்சார விழுமியங்களை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தமையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
# # **සංස්කෘතිය, විවිධත්වය සහ එකමුතුකමේ සැමරුම...** ✨🌿
අපගේ අධ්යාපන ප්රජාව තුළ පවතින සුහදතාවය, සංස්කෘතික විවිධත්වය සහ එකමුතුකම විදහා දක්වමින්, **2026 අප්රේල් 24** වන දින පාසලේ සහෝදර ගුරුවරුන් සහ අනධ්යයන කාර්ය මණ්ඩලය එක්ව අලුත් අවුරුදු උත්සවය නිමිත්තෙන් ගුරු මණ්ඩලය වෙනුවෙන් විශේෂ දිවා භෝජන සංග්රහයක් සංවිධානය කරන ලදී. 🎉🇱🇰
අපගේ ප්රජාව සතු පොහොසත් බහුසංස්කෘතික වටිනාකම් බෙදා ගැනීමට ලැබුණු මෙම අවස්ථාව පිළිබඳව අප බෙහෙවින් සතුටට පත්වන අතර, පාසල වෙනුවෙන් අපගේ හෘදයාංගම ස්තූතිය මෙසේ පුද කර සිටිමු.
23/04/2026
கல்லூரியின் புவியியல் பிரிவு மாணவர்களால் "Geo Vista 2026" எனும் கருப்பொருளில் கண்காட்சி ஒன்று ஏற்பாடாகியுள்ளது. அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
03/04/2026
இந்தப் பெறுபேறுகள் உங்கள் உயர்கல்விப் பயணத்தின் ஒரு திறவுகோல் மட்டுமே. உங்கள் அறிவாற்றலால் இந்தச் சமூகத்திற்கு ஒளிவீசும் சிறந்த வெற்றியாளர்களாகத் திகழ வாழ்த்துகள்.
02/04/2026
நேற்றைய தினம் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலையிலிருந்து தோற்றிய 116 மாணவர்களில் 86 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களின் பெறுபேறுகளுக்காக உழைத்த கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் நலன் விரும்பிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கு நல்வாழ்த்துகளை கூறிக்கொள்கின்றோம். மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.