07/10/2023
ලයිට් බිල - Politics Memes_Episode 95 Subscribe Our Channel Episode 94 - https://youtu.be/_kZrhhBMJNI?si=r7JoAF6gITxAu8EbVarious stories were spread regarding the electricity bill of Mr. Namal Ra...
இனி நீங்கள் இந்த தளத்தின் ஊடாக வணிகம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்
07/10/2023
ලයිට් බිල - Politics Memes_Episode 95 Subscribe Our Channel Episode 94 - https://youtu.be/_kZrhhBMJNI?si=r7JoAF6gITxAu8EbVarious stories were spread regarding the electricity bill of Mr. Namal Ra...
'விதிகள்' மற்றும் 'விருப்புரிமை' இரண்டும் தொடர்பான
விடயங்களை ஒருங்கிணைக்கும் ஓர் நாணயக் கொள்கை
கட்டமைப்பை கொண்டுள்ளது என்பது பணவீக்க
இல்க்கிடலின் ஓர் தனித்துவமான நன்மையாகும். ஆகவே,
பொருளாதார பங்குதாரர்கள் எதிர்கால பணவீக்கம் பற்றிய
தமது எதிர்பார்க்கைகளை நிச்சயிப்பதற்கு விதிகள் போன்ற
ஓர் கட்டமைப்பை பணவீக்க இலக்கு வழங்குகிறவேளையில்
அதிர்வுகள் தொடர்பான எதிர்ச்செயலாற்றலில் தனது
விருப்புரிமையை மத்திய வங்கி நடைமுறைபடுத்த முடியும்.
பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினுடைய பிரதான கூறுகள்
பின்வருமாறு:
I. பணவீக்கத்திற்கான எண்ரீதியான இலக்கின் பொதுவான
அறிவிப்பு.
II. நாணயக் கொள்கையானது நடுத்தரகால பணவீக்க
எறிவை உள்ளடக்கிய பரந்த ஓர் தகவல்களின்
தொகுப்பை அடிப்படையாகக்கொண்டதுடன், இது
முன்னோக்கிய நாணயக் கொள்கை தீர்மானித்தலுக்கு
வசதியளிக்கும்.
இலங்கையின் நாணயக் கொள்கை பகுப்பாய்வுகளிற்கான மாதிரியை
அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை
III. உயர்மட்ட வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறும்
தன்மையும் கொண்ட பொறிமுறைகள்.
நிதியியல் முறைமை உறுதிப்பாடு
ஒழுங்கு விதியும் மேற்பார்வையும்
வங்கிகளை ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வை செய்தலும்
வங்கிகளுக்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை கட்டமைப்பு தொடர்பாக வங்கித் தொழில் சட்டம், நாணயச் சட்ட விதி, செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி இரு வகை வங்கிகளுக்கு வங்கித் தொழில் உரிமத்தினை வழங்குகின்றது. அவையாவன உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இவை சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகளாகும்). உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு முன்னயது பொது மக்களிடமிருந்து கேள்வி வைப்பினை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் (வாடிக்கையாளர்களுக்காக நடைமுறைக் கணக்கினைத் தொழிற்படுத்துதல்) பரந்தளவிலான வெளிநாட்டுச் செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கும் வெளிநாட்டுச் செலாவணியில் ஓர் அதிகாரம் பெற்ற வணிகராகவும் தொழிற்படுமிடத்து பின்னையது மத்திய வங்கியின் ஒப்புதல்களுடன் வெளிநாட்டுச் செலாவணியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பின்வருவனவற்றை மேற்கொள்வதற்கு மத்திய வங்கிக்கு சட்டம் அதிகாரமளித்துள்ளது:
புதிய வர்த்தக மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல்
சட்டங்களின் கீழ் முன்மதியுடைய பணிப்புரைகள், தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்பனவற்றினை வங்கிகளுக்கு வழங்குதல்.
வங்கிகளின் தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் பரீட்சித்தல்களை மேற்கொள்ளல்.
ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தல் மற்றும் பலவீனமான வங்கிகள் தொடர்பாக தீர்மானத்தை மேற்கொள்ளுதல்.
நாணயச் சபையினால் உரிமம் வழங்கப்பட்ட வங்கிகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைத் தொழிற்பாடுகளை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் திணைக்களம் மேற்கொள்கின்றது. வங்கி மேற்பார்வையானது, வங்கித் தொழில் மேற்பார்வைக்கான பாசல் குழுவினால் தயாரிக்கப்பட்ட சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வங்கி மேற்பார்வைக்கான தரத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
தொடர்ச்சியான மேற்பார்வைஃகண்காணிப்பு முறையின் கீழ் காலத்துக்கு காலம் வங்கிகளின் தொழிற்பாடுகள் தொடர்பாக வழங்கப்படும் தகவல்களினடிப்படையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினதும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினதும் நிதி நிலைமைகள் கண்காணிக்கப்படுகின்றன. காலத்துக்கு காலம் தரப்படும் தகவல்களில் அடங்கிய விடயங்களாக வைப்புகள் மற்றும் முற்பணங்களது வாராந்த வட்டி வீதங்கள்; சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவு, வகைப்படுத்தப்பட்ட முற்பணங்கள் மற்றும் அறவிடமுடியாத ஐயத்திற்குரிய முற்பணங்களுக்கான ஒழுங்குகள், நியதி ரீதியான திரவச் சொத்துகள் தொடர்பான என்பன மாதாந்த கூற்றுக்கள்; மூலதனத் தேவை, பங்குகளில் முதலீடு, நெருங்கிய உறவினர்கட்கு வழங்கப்பட்ட கடன் வசதிகள், வட்டியின் பரம்பல்கள், வெளிநாட்டு நாணய வெளிப்பாடுகள், முதிர்ச்சி இடைவெளி பகுப்பாய்வு என்பன தொடர்பான காலாண்டு கூற்றுக்கள்; மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் அறிக்கைகள் மற்றும் கைவிட்டப்பட்ட சொத்துக்கள் என்பன தொடர்பான வருடாந்த கூற்றுகள் ஆகியவை காணப்பட்டன.
வங்கிகளை பல்வேறு இடர்நேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தி பலவீனமான வங்கிகளின் தரங்களை உயர்த்துவதற்குத் தேவையான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக, தொகைரீதியான நடவடிக்கைகளான மூலதனப்போதுமை, சொத்துக்களின் தரம், முகாமைத்துவம், வருவாய்கள் மற்றும் திரவத்தன்மை (i.ந., ஊயுஆயுடு மாதிரி கூறுகள்) மற்றும் தரரீதியான நடவடிக்கைகளான நியதித் தேவைப்பாடுகள், பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிகள், உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் கம்பனி ஆளுகையின் தரம் என்பவற்றுடன் வங்கியின் இணங்கி நடத்தல் தொடர்பான மதிப்பீடு என்பவற்றைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் ஒரு உள்ளக மேற்பார்வை மதிப்பீடு முறைமை அறிமுகப்படுத்தப்படுள்ளது.
வங்கித் தொழில் சட்டம் மற்றும் நாணயச் சட்ட விதி என்பனவற்றின் ஏற்பாடுகளின் படி எல்லா உரிமம் பெற்ற வர்த்தக மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் ஆகக் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்ட ரீதியான பரீட்சித்தல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். வங்கிகளின் பரீட்சித்தல்களில் ஒரு புதிய அணுகுமுறை இப்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது - இடர்நேர்வுகளை அடிப்படையாகக் கொண்ட பரீட்சை செயல்முறையான இது வங்கித் தொழிலில் எதிர்பாராத இடர்நேர்வுகளை அடையாளம் காண்பது, இத்தகைய இடர்நேர்வுகளை முகாமையிடுவது மற்றும் இத்தகைய இடர்நேர்வுகளை மட்டுப்படுத்தத் தேவையான வளங்களை மதிப்பீடு செய்வது என்பனவற்றில் கவனம் செலுத்துகின்றது. முன்மதியுடைய தேவைப்பாடுகள் மற்றும் நிதியியல் நிலமையில் ஏதாவது பலவீனங்கள், குறைபாடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகள் போன்றவற்றுடன் வங்கி இணங்கி ஒழுகாத விடயங்கள் தொடர்பாக , அவ்வங்கி திருத்தும் நடவடிக்கை எடுக்கும் என்பதனை உறுதிசெய்வதற்காக, மத்திய வங்கி, அவற்றை வங்கியின் பணிப்பாளர் சபையின் கவனத்துக்கு கொண்டு வரும்.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பன காலாண்டு, வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுகளை முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகளை உள்ளடக்கியவிதத்தில், செய்திப் பத்திரிகைகளில், மூன்று மொழிகளிலும், ஒவ்வொரு காலமும் முடிவடைந்த இரு மாதங்களுக்குள் பிரசுரிக்குமாறு கோரப்பட்டுள்ளன.
பொதுவான வங்கித்தொழில் கருத்துக்களம் - ஆளுநர், உரிமம் பெற்ற வங்கிகளின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்களுடன் மாதாந்த கூட்டங்களை நடத்தி வருகின்றார் . இக்கூட்டங்கள், வங்கித் தொழில் செயற்பாடுகள், நிதியியல் துறை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொள்கைகள் என்பனவற்றை கலந்துரையாடும் ஒரு கருத்துக்களமாக இருக்கின்றது.
வங்கிப் பணிப்பாளர்களின் கருத்தரங்கு - வங்கிகள் சவாலான சூழ்நிலைகளை எதிர் கொள்ளக்கூடிய தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒழுங்குபடுத்தல் மற்றும் வங்கியியல் வர்த்தக சீர்திருத்தங்களின் புதிய முன்னேற்றங்களை வங்கிப் பணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் மத்திய வங்கி வருடார்ந்தம் வங்கிப் பணிப்பாளர் கருத்தரங்கை நடாத்துகின்றது.
பொது மக்களுக்கான விழிப்பூட்டல் - நிதியியல் நிறுவனங்களுடனான பொதுமக்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பெறுபேறுகள் பற்றியும் தடை செய்யப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வது பற்றியும் அவர்கள் மதிப்பீடு செய்யுமாறும் மற்றும் எச்சரிக்கைகளுடன் இருக்குமாறும் ஒழுங்கான பத்திரிகை அறிவித்தல்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள்ஃநிகழ்ச்சிகள் மூலம் மத்திய வங்கி வங்கித் தொழில் மற்றும் நிதியியல் விடயங்களில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களினை நடாத்துகின்றது.
நிதியியல் முறைமை உறுதிப்பாடு
நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பது, பாதுகாப்பானதும், உறுதியானதுமான நிதியியல் முறைமை ஆகும். இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிர்ச்சிகளை எதிர்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு உறுதியான நிதியியல் முறைமையானது வைப்பாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குகிறது. இது நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் பயன்தரும் வகையிலும் திறனாகவும் தொழிற்பட ஊக்கமளிக்கின்றது. எனவே, இது முதலீட்டினையும், பொருளாதார வளர்ச்சியினையும் தூண்டுகின்றது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு பயனுள்ள ஒழுங்கமைப்பு கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பானதும் முன்னேற்றகரமானதுமான கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையினுள் உறுதியான நிதியியல் மற்றும் பொருளாதாரச் சூழலை தேவைப்படுத்துகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவது நிதியியல் முறைமைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்படையக்கூடிய தன்மையையும், இடர் நேர்வுகளையும் இனங்கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவதனை இயலச் செய்கிறது.
சேமிப்பாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கைத் தன்மையினை உருவாக்கி சாதகமான சூழலை ஏற்படுத்தல்
நாணயக் கொள்கையின் மாற்றங்களுக்கு உதவிசெய்து, அதன் மூலம் விலை உறுதிப்பாட்டினை அடைவதற்கு உதவி செய்தல்
திறனான நிதியியல் இடையீட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல், இது இறுதியில் முதலீடு, வளர்ச்சியைத் தூண்டும்.
பயனுள்ளதும் வினைத்திறன் மிக்கதுமான சந்தைகளின் பொருளாதார செயல்பாட்டை ஊக்கப்படுத்தி, வளங்களின் பகிர்வினை மேம்படுத்துதல்
பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு
ஒரு பொருளாதாரத்தில், பொது விலை மட்டத்தில் பரந்தளவுக்கு ஏற்ற இறக்கமற்ற நிலைமை இருக்குமாயின் அது பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு உள்ள ஒரு நிலைமை எனக் கருதலாம். இது நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு உதவுகின்றது. விலையின் ஏற்ற இறக்கம் குறைந்த வீதத்தில் இருக்கும் போது பொருளாதாரத்தில் பங்கு பெறும் குடியிருப்பாளர்களினதும், நிறுவனங்களினதும் பொருளாதாரத் தீர்மானங்களில் கணிசமான பாதிப்பினை அது ஏற்படுத்த மாட்டாது. எனவே, நிலையான விலைகள் எதை உற்பத்தி செய்வது எவ்வாறு உற்பத்தி செய்வது போன்ற தீர்மானங்களை எடுப்பதில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்த மாட்டாது. எனவே, இது பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இட்டுச் செல்லும் வினைத்திறமைமிக்க மூலவள ஒதுக்கீட்டை இயலச் செய்கிறது.
கற்பிப்போர் கவனத்திற்கு
=========================
(ஹிட்லரின் நாஜி வதை முகாமிலிருந்து உயிர்பிழைத்த ஒரு பள்ளி அதிபர் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்).
அன்புள்ள ஆசிரியர்களுக்கு, நான் நாஜி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவன். வேறு எவரும் காணக்கூடாத காட்சிகளை எனது கண்கள் அங்கு கண்டன. படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட நச்சு வாயு அறைகள்; படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள்; தாதிகளால் கொல்லப்பட்ட சிசுக்கள்; பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்ற ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட பெண்களும், குழந்தைகளும். எனவே நான் கல்வியின் மீது மிகுந்த சந்தேகம் கொள்கிறேன்.
எனவே ஆசிரியர்களே! எனது வேண்டுதல் என்னவெனில் உங்கள் மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவாக உதவுங்கள். உங்கள் உழைப்பு மெத்தப் படித்த அரக்கர்களையும், திறமையான உளநோயாளர்களையும் உருவாக்கக் கூடாது. எழுத்தும், வாசிப்பும், கணிதமும், சரித்திரமும் மாணவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கினால் மட்டுமே பயன் மிகுந்ததாக இருக்கும்.
(Excerpt from the book 'Teacher and Child' by by Dr. Haim Ginott, Child Psychologist and Author)
20/09/2017
பாடசாலைகளுக்குள் முறைகேடாக நடந்து கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! மாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.
20/09/2017
Srilanka Jobs: DSI JOB VACANCY SRILANKA DSI SRILANKA CALLED FOR VACANCY