14/07/2023
Students are getting ready to participate in the Zonal level Sports Meet. 2023
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Madeena Vidyalaya - Kuda Nelubewa, School, Anuradhapura.
14/07/2023
Students are getting ready to participate in the Zonal level Sports Meet. 2023
09/07/2023
எமது பாடசாலையில் நேற்று இடம்பெற்ற சிரமதான நிகழ்வின் போது
07/07/2023
எமது பாடசாலையின் விளையாட்டு மைதான புனர்நிர்மாணப் பணியின் போது.
As received
#ஊரின்_அடயாளம்_பாடசாலை.....
ஒரு ஊரை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த ஊரிலுள்ள பாடசாலைகளின் நிலவரங்களை அறிந்து கொண்டால் போதுமானதாக இருக்கும்.
இதனூடாக பல விடயங்களை ஊகித்துத் கொள்ள முடியும். பாடசாலைகள் என்பது அந்தந்த சமூகத்தின் மிகப் பெரிய சொத்து. ஒழுக்கமுள்ள,சவால்ககளை வெற்றி கொள்ளக்கூடிய, கற்றறிந்த ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்றால் அந்தந்த சமூகத்திலுள்ள பாடசாலைகள் பலப்படுத்தப்பட வேண்டும். பயன்படுத்தப்பட வேண்டும்.
ஊரும் வீடும் சுத்தமாக இருக்கிறது என்றால் அந்த ஊரிலுள்ள பாடசாலைகள் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். ஊரும் வீடும் சீராகவும் சிறப்பாகவும் இயங்குகின்றது என்றால் அந்த ஊரிலுள்ள பாடசாலைகள் சீராகவும் சிறப்பாகவும் இயங்குகின்றது என அர்த்தம்
ஊருதான் பாடசாலை. பாடசாலை தான் ஊரு.
வீடுதான் பாடசாலை. பாடசாலை தான் வீடு. எனவே, ஊரும் வீடும் ஒரு பாடசாலையின் விம்பம்.
அண்மைக் காலமாக சமூகத்திக்கும் பாடசாலைக்குமான தொடர்புகள் மிகக் குறைவடைந்திருக்கின்றது அல்லது இல்லாமல் போய் விட்டது. பாடசாலைகளும் அது அமைந்து இருக்கின்ற சமூகமும் தனித்தனியாக இயங்குமாக இருந்தால் நாம் எதிர்பார்க்கின்ற எந்தவொரு விளைவுகளையும் அடைவுகளையும் பெறமுடியாது என்பது நிதர்சனம். இதற்கு மாற்றமாக, சமூக பாடசாலையாக அல்லது அந்தந்த சமூகத்தால் போசிக்கப்படுகின்ற பாடசாலையாக இருக்குமென்றால், அது அந்த ஊரை காக்கின்ற மிகப் பெரிய அடையாளமாக இருக்கும்.
சமூகத்தையும் பாடசாலையையும் பிரித்தறிய முடியாமலும் பாடசாலைகள் என்பது அந்தந்த சமூகம் வந்து செல்கின்ற ஒரு இடமாகவும் இருந்தால் அந்த ஊர் மிக நேர்த்தியான சமூக கட்டமைப்பையும் எல்லா வகையான சவால்களையும் வெல்லக்கூடிய சந்ததிகளை உருவாக்கும் இடமாகவும் மாறும் என்பது உண்மை.
எமது பார்வையில் பாடசாலைகள் என்பது எமது பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளுக்கு சேர்க்கின்ற ஒரு இடமாகவே காண்கின்றோம். இதன் பின்னர் எமது பணி முடிந்து விட்டதாக உணர்கின்றோம்.
பெறுபேறுகள் குறைவடைகிற போது அல்லது பிள்ளைகளால் பிரச்சினைகள் வீடுவரை வருகின்ற போதுதான் நாம் விழிப்படைகின்றோம். இது துரதிஸ்டமானதும் ஒரு அபாயகரமானதுமானதும் நிலையாகும். எனவே தான் அந்தந்த ஊர்களிலுள்ள முழு சமூகமும் இதற்கான தயாரிப்புகளை செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
எமது பிள்ளைகள் எமது எதிர்காலம்
எமது பிள்ளைகள் எமது ஊரின் எதிர்காலம்
எமது பிள்ளைகள் எமது நாட்டின் எதிர்காலம்.