30/04/2026
மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உயர்தர வணிகப்பிரிவு ஆரம்பம்
பு/ மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இந்த கல்வியாண்டிற்கான உயர்தர வணிகப்பிரிவு (Commerce Stream) இன்று (2026.04.29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசால அதிபர் ஜனாப் N.L. நஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலையின் கல்வி மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய நகர்வாக அமைந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பு/ திஹலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருவாளர் ஹக்மான் ஆசிரியர் அவர்களும் கம்மந்தொளுவ பெரிய பள்ளிவாயலின் பேஷ் இமாம் ஸல்மான் (நூரானி) அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களுக்குத் தேவையான ஊக்கமளிக்கும் உரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
பாடசாலை அதிபர், (Principal) வணிகப்பிரிவு குழு, (Commerce Committee) அர்ப்பணிப்புள்ள பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் (OBA) & பழைய மாணவிகள் சங்கம் (OGA) மற்றும் நலன்விரும்பிகள்
உங்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியே இன்று எமது மாணவர்கள் வணிகத்துறையில் தடம் பதிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
மாணவர்களை நேர்த்தியான முறையில் வழிநடத்தி, சமூகத்திற்குப் பயனுள்ள சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதில் பு/மதவாக்குளம் முஸ்லிம், மகா ,வித்தியாலயம் - தேசிய பாடசாலை என்றும் சளைக்காமல் வெற்றி நடை போடுகிறது. எமது மாணவர்கள் வணிகத்துறையில் பல சாதனைகளை படைப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
26/04/2026
ஒரு சிறந்த மாணவத் தலைவர் (Prefect): வழிகாட்டியாக உருவெடுப்பது எப்படி? 🤝🌟
------------------------------------------
பாடசாலையில் ஒரு மாணவத் தலைவராக (Prefect) செயற்படுவது என்பது வெறும் பதவி சார்ந்தது மட்டுமல்ல, அது மிகுந்த பொறுப்பும் கௌரவமும் கொண்ட ஒரு பணியாகும். ஒரு மாணவத் தலைவருக்குரிய முக்கிய கடமைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:
1. முன்மாதிரியான ஆளுமையாகத் திகழ்தல்
ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதே ஒரு மாணவத் தலைவரின் பிரதான பொறுப்பாகும்.
* பாடசாலை ஒழுக்கவிதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுதல்.
* தூய்மையான மற்றும் நேர்த்தியான சீருடையை அணிதல்.
* ஆசிரியர்களுக்கும் பெரியோர்களுக்கும் மதிப்பளித்தல்.
* கால முகாமைத்துவத்தைப் பேணுவதோடு, கல்விச் செயற்பாடுகளைச் சீராக முன்னெடுத்தல்.
2. பாடசாலை ஒழுக்கத்தைப் பேணுதல்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு, பாடசாலையின் ஒழுக்கத்தைப் பாதுகாக்க உதவுதல்.
* காலைக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது மாணவர்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் இருப்பதை உறுதிசெய்தல்.
* இடைவேளை நேரம் மற்றும் பாடசாலை ஆரம்பமாகும்/முடிவடையும் நேரங்களில் மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்தல்.
* தேவையற்ற மோதல்கள் ஏற்படாமல் தடுத்தல்.
3. பாடசாலை நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்
பாடசாலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை (வருடாந்த விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா போன்றவை) வெற்றிகரமாக நடத்துவதற்கு மாணவத் தலைமைத்துவம் நேரடியாகப் பங்களிப்பு செய்தல்.
* ஒழுங்கமைப்புப் பணிகளில் தலைமைத்துவம் வழங்குதல்.
* விருந்தினர்களை வரவேற்பதுடன் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.
4. ஒரு பாலமாகச் செயற்படுதல்
மாணவர்களின் பிரச்சினைகள், தேவைகள் மற்றும் ஆலோசனைகளை உரிய முறையில் ஆசிரியர்களிடமோ அல்லது அதிபரிடமோ கொண்டு சேர்ப்பது ஒரு மாணவத் தலைவரின் பொறுப்பாகும். இது பாடசாலையில் சிறந்த தொடர்பாடலைப் பேண உதவும்.
5. தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளல்
பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்தல், குழுவாக இணைந்து பணியாற்றுதல் மற்றும் தீர்மானம் எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆளுமையை கட்டியெழுப்புதல்.
ஒரு சிறந்த மாணவத் தலைவர் என்பவர் கட்டளையிடுபவர் அல்ல, மாறாக ஏனையோரை வழிநடத்தும் ஒரு வழிகாட்டியாவார்.
#மாணவத்தலைவர் #தலைமைத்துவம் #மாணவர்ஆளுமை #ஒழுக்கம்
Copy paste
from 👇
SHM.THAHIR.
25/04/2026
*மாஷா அல்லாஹ்..
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
குறுகிய காலப் பகுதியில் பெரியதோர் தொகையை (845000) தேவையையும் விட அதிகமாக எமது ஊர்வாழ் மக்கள் வழங்கி இருக்கின்றார்கள்... அல்ஹம்துலில்லாஹ்..
இதற்காக உதவிய ஒவ்வொருவரையும் இறைவன் பொருந்திக்கொள்வானாக....!
அவர்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பானாக...! அவர்களுக்கு மறுமையில் இதற்கான கூலியை வழங்குவானாக..!
அவர்களின் பிள்ளைகளுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள கல்வியை வழங்குவானாக..! ஆமீன்
🤲🤲
பு/மதவாக்குளம் முஸ்லிம், மகா ,வித்தியாலயம் - தேசிய பாடசாலை
01/04/2026
பு/மதவாக்குளம் முஸ்லிம், மகா ,வித்தியாலயம் - தேசிய பாடசாலை 2025
31/03/2026
RESULTS RELEASED
GCE A/L -2025 பெறுபேறுகள் வெளியாகி உள்ளன.!!
பரீட்சை பெறுபேறுகளை
கீழ்க்காணும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்க்கலாம்..👇👇
https://www.doenets.lk/examresults
🌐 doenets.lk
🌐 results.exams.gov.lk
பரீட்சார்த்திகளுக்கு வாழ்த்துக்கள்!
Department of Examinations - Sri Lanka - Examination Results
User can select the required Examination from Results Published Examination list and view Exam results from this service.
31/03/2026
பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: SC/FR 461/2012
வழக்கின் பின்னணி
இந்த வழக்கு குருநாகல், சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்ற ஒரு மாணவன் (முதலாம் மனுதாரர்) மற்றும் அவரது தந்தை ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது.
2012 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி, அந்த மாணவன் தவணைப் பரீட்சைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது ஆங்கில பாட ஆசிரியர் (முதலாம் பிரதிவாதி) அவரை வழிமறித்து, தலைமுடியை வெட்டுமாறு அறிவுரை கூறுவதற்குப் பதிலாக, ஆவேசமடைந்து மாணவனின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலால் மாணவனின் இடது காது செவிப்பறை (Ear-drum) கிழிந்து, அவருக்குக் கடும் வலி மற்றும் கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டது. அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
முக்கிய பிரதிவாதிகள்
க.க.ல. ரம்யா டி சில்வா: தாக்குதலை நடத்திய வகுப்பு ஆசிரியை.
டபிள்யூ.எம். சமன் இந்திரரத்ன: பாடசாலை அதிபர்.
இவர் முறையான விசாரணை நடத்தத் தவறியதுடன், ஆசிரியரைப் பாதுகாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிமன்றத்தின் அவதானிப்புகள்
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஆராய்ந்தபோது பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியது:
1. அடிப்படை உரிமை மீறல்
ஆசிரியரின் செயல் அரசியலமைப்பின் 11 ஆம் உறுப்புரையின் கீழ் "சித்திரவதை, கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற தண்டனை" என்பதன் கீழ் அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படுகிறது.
2. அதிபரினது பொறுப்பு
அதிபர் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தத் தவறியதன் மூலம் மாணவனின் 12(1) உறுப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ள "சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு" எனும் உரிமையை மீறியுள்ளார்.
3. குற்றவியல் நடவடிக்கை
இந்தச் சம்பவத்திற்காக ஆசிரியைக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 6 மாத கால கடூழியச் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது.
தீர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் கட்டளைகள்
நீதிபதி யசந்த கோதாகொட தலைமையிலான நீதியரசர்கள் குழு வழங்கிய இந்தத் தீர்ப்பு, இலங்கையின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
1. உடல் ரீதியான தண்டனைக்குத் தடை பாடசாலைகளில் மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு வடிவத்திலான உடல் அல்லது உள ரீதியான தண்டனைகளையும் வழங்க முடியாது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
2. பூச்சிய சகிப்புத்தன்மை (Zero Tolerance)
மாணவர்களுக்குத் தண்டனை என்ற பெயரில் தீங்கு விளைவிப்பதை எவ்விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது.
3. புதிய சுற்றுநிருபம்
பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்து, அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கும் புதிய சுற்றுநிருபத்தை 9 மாதங்களுக்குள் வெளியிடுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.
4. நேர்மறையான ஒழுக்கக் கட்டுக்கோப்பு தண்டிப்பதற்குப் பதிலாக, மாணவர்களின் நடத்தையைச் சீர்செய்ய "நேர்மறையான ஒழுக்க முறைகளை" (Positive Discipline) பின்பற்றுமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இந்தத் தீர்ப்பு, "தண்டனை" என்பது மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஒன்றாக இருக்கக்கூடாது என்பதைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாகவே, கல்வி அமைச்சு 11/2026 என்ற புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடப்பட்டு, பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-ஜெஸார் ஜவ்பர்-
#வகுப்பறைநிர்வாகம் #குரல்கட்டுப்பாடு #அமைதியானஆசிரியர்
#ஆசிரியர்உத்தி #வகுப்பறைநிர்வாகம் #குரல்கட்டுப்பாடு #அமைதியானஆசிரியர்
18/03/2026
A/L பு/மதவாக்குளம் முஸ்லிம், மகா ,வித்தியாலயம் - தேசிய பாடசாலை
#குரல்கட்டுப்பாடு #அமைதியானஆசிரியர்
17/03/2026
ஜனாஸா அறிவித்தல்
17-03-2026
பு/மதவாக்குளம் முஸ்லிம், மகா ,வித்தியாலயம் - தேசிய பாடசாலை
மதவாக்குளம் அக்ஸா மஹல்லாவை சேர்ந்த எமது பாடசாலையின் கௌரவ அதிபர் என்.எல்.நஜீம் ஆசிரியர் அவர்களின் அன்பு மனைவி காலமானார்கள்.
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"
நல்லடக்கம் பற்றிய தகவல் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
யா அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை ஈடேற்றம் ஆக்கிவைப்பாயாக ஆமீன்!
-மதவாக்குளம் நியூஸ்
16/03/2026
“குழந்தைகளுக்காய் நேரம் ஒதுக்குதல்”
- ஒரு தாய் இன்னுமொரு தாய்க்கு எழுதிய அழகான பதிவு -
சின்னச் சின்னக் குறும்புகளோடும் சண்டைகளோடும் விவாதங்களோடும் மட்டுமல்ல, அப்போதெல்லாம் என் வீடு மிக உச்சக் கலகலப்போடும், கும்மாளங்களோடும், வயிறு குலுங்கச் சிரிக்கும் நகைச்சுவைகளோடும் புன்னகைகளோடுமே அதிகம் நிறைந்திருந்தது.
புத்தகங்கள் வீடு முழுவதும் ஆங்காங்கே எறியப்பட்டுக் கிடக்கும், பென்சில்களும் கொப்பிகளும் திரும்பும் இடமெங்கும் அலங்கோலமாய் வீசப்பட்டுப்போய்க் காட்சியளிக்கும். கடந்த வாரம் துவைத்திருக்க வேண்டிய துணிமணிகளும் இரண்டு வாரத்துக்கு முந்தி துவைத்தெடுத்த உடுப்புகளும் என் படுக்கையறைக் கட்டிலிலும் மேசைகளின் மீதும் குவிந்து கிடக்கும்.
அவர்களை எப்போதுமே நான் கடிந்துகொண்டிருந்தேன். அவர்கள் அலங்கோலமாக்கிய என் வீட்டினை ஒழுங்குபடுத்தும் வரை என் சத்தத்தால் அவர்களை சங்கடப்படுத்தியிருந்தேன்.
தினமும் எனது காலைகளில்,
“அம்மா எனக்கு தேவையான புத்தகம் ஒன்றை இங்கு வைத்தேன் காணவில்லை” என ஒரு பிள்ளை எழுந்து புலம்பும்.
“எனது வாசனைத் திரவியத்தை யார் எடுத்தது” என்று மற்றொன்று தொடங்கும்.
“அம்மா நான் செய்த வீட்டுப் பாடப் புத்தகத்தை கண்டீங்களா” அடுத்தது அலறும்.
“ஐயோ நான் வீட்டுப் பாடம் செய்ய மறந்துவிட்டேன்” என இன்னுமொன்று ஒப்பாரி வைக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தடவையும் தாம் தவறவிட்ட விடயங்கள் பற்றி என்னிடம் நச்சரிக்கும் போது நான் கூறுவது ஒன்றை மட்டும்தான்.
“நீங்கள் எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள் தானே. நீங்கள் தான் உங்களுடையவைகளை பொறுப்பாக கவனமாக எடுத்து வைக்க வேண்டும்”
இன்று
என் வீட்டு அறைக் கதவோரங்களில் நான் நின்று பார்க்கிறேன்.
என் கட்டில்களில் எந்த உடுப்புகளும் எறியப்பட்டிருக்கவில்லை அது மிக அழகாக ஒழுங்காக இருக்கின்றது. எனது அலுமாரிகளை ஒருசில துணிகள் மட்டும் வைக்கப்பட்டிருக்கின்றது.
வாசனைத் திரவியங்களின் மணம் மாத்திரம் என்னைச் சுற்றியுள்ள காற்றில் இப்போது படர்ந்து விரிந்து கிடக்கின்றது.
அவர்கள் எல்லோருக்கும் தனித்தனியான விசேட வாசனைத் திரவியங்கள் அப்போது இருந்திருந்தது.
இனி அந்த மணங்களின் நினைவுகள் மட்டுமே என்
வெறுமையான இதயத்தின் வலியை நிரப்பக் கூடியது என நம்புகின்றேன்.
இப்போதெல்லாம் என்னிடம் சில நினைவுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அது அவர்களின் சிரிப்பொலிகளின் நினைவுகளாகவோ, சின்னச் சின்ன சண்டைகளின் நினைவுகளாகவோ, மீளக் காணக்கிடைக்காத குறும்புகள் பற்றிய ஞாபகங்களாகவோ, அவர்கள் தந்த மிகக் கணகணப்பான கட்டி அணைத்தல்கள் பற்றிய எண்ணங்களாகவோ தொடர்கின்றன.
இந்த வீடு இப்போதெல்லாம் மிகச் சுத்தமாக இருக்கின்றது. ஒழுங்கு குலையாமல் வைத்தது வைத்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றது.
ஒரு தியான மண்டபத்தைப்போல் மிக அமைதியாக காட்சி தருகின்றது. ஆனால் மனிதர்கள் வாழாத ஒரு பாலைவனத்தைப் போல் உணர்வுகளால் கொல்லக்கூடிய வெளிகளால் எல்லாச் சுவர்களும் நிறைந்திருக்கின்றன. உன் குழந்தைகள் உன் வீட்டினை அலங்கோலம் செய்வதையிட்டு நீ ஒருபோதும் அவர்களைக் கடிந்து கொள்ளாதே.
ஒவ்வொரு தடவையும் அவர்கள் என்னைச் சந்திக்க என் வீட்டுக்கு வரும் போதும், என்னுடன் சிறிதளவு நேரம் செலவிடும் போதும், மீண்டும் புறப்படத் தயாராகி தமது கைப்பைகளை தோள்களில் போட்டுக் கொள்ளும் போதும் எனது மனது வலிப்பதை இப்போதெல்லாம் நான் உணர்ந்து கொள்கிறேன். கதவுகளைப் பூட்டியபடி அவர்கள் விடைபெற்றுச் செல்லும் ஒவ்வொரு தடவையும், பூட்டப்பட்ட கதவின் உட்புறமிருந்து கண்ணீருடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த கதவுகளைப் பூட்டிவிட்டு வெளியே போய்வரும்படி எத்தனை தடைவைகள் முன்பெல்லாம் நான் அவர்களைக் கடிந்து கொண்டேனென்று.
இன்று எனது கதவுகளை எல்லாம் நானே பூட்டிக் கொள்கின்றேன்.என் கதவுகளைத் திறந்துவிட இப்போதெல்லாம் என் அருகில் யாரும் இல்லை.
அவர்கள் எல்லோரும் வெவ்வேறு நகரங்களுக்கும் வெவ்வேறு நாடுகளுக்கும் தத்தமக்கான வெவ்வேறு வாழ்க்கை அமைத்துப் போய்விட்டார்கள்.
எல்லோரும் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோருமாக ஒன்றாக எப்போதும் இந்த வீட்டில் என்னோடு இருக்க வேண்டும் என என் மனம் இப்போது விரும்புகிறது.
என் இறைவனே!
அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள். அவர்கள் சந்தோசமாக வாழ வழி செய்.
உங்களுடைய குழந்தைகள் இப்போது அந்த சிறிய வயதில் இருந்தால், அதை அனுபவிக்க ஒருபோதும் தவறாதீர்கள். இந்த வீட்டை விட்டு அவர்கள் புறப்பட முன்னம் அவர்களுடன் சிரியுங்கள் மனசு கரையக் கரைய கதையுங்கள் கதைத்துக்கொண்டே இருங்கள். குதூகலங்களால் அவர்களை சீராட்டுவதை நிறுத்திக்கொள்ளாதீர்கள். அவர்களின் புன்னகைகளைப் புறக்கணிக்காதீர்கள். குறும்புகளோடு சந்தோஷிக்க தவறிவிடாதீர்கள்.
உங்கள் வீட்டை மிக விரைவாக அவர்கள் உங்களிடம் மீளக் கொடுத்துவிடுவார்கள்.
ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
உங்கள் மண வாழ்வின் ஆரம்பத்தில் அவர்கள் உங்களோடு இருந்திருக்கவில்லை. இப்போது தான் உங்களுடன் வந்து இணைந்திருக்கிறார்கள். அவர்களை சந்தோசப்படுத்துங்கள்.
Copy paste
பு/மதவாக்குளம் முஸ்லிம், மகா ,வித்தியாலயம் - தேசிய பாடசாலை
#வகுப்பறைநிர்வாகம் #குரல்கட்டுப்பாடு #அமைதியானஆசிரியர்
#ஆசிரியர்உத்தி #வகுப்பறைநிர்வாகம் #குரல்கட்டுப்பாடு #அமைதியானஆசிரியர்