அவன் மிகப் பரிசுத்தமானவன்
*️⃣*️⃣*️⃣
"சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்."
{ فَسُبۡحَـٰنَ ٱلَّذِی بِیَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَیۡءࣲ وَإِلَیۡهِ تُرۡجَعُونَ }
[Surah Yā-Sīn: 83]
Thawaasi Dawa Center
"நலவின் பால்வழிகாட்டுபவர் அதைச் செய்தவரைப் போன்று நற்கூலியை பெறுகிறார்"
பெரும் பாக்கியம் என்பது...
*️⃣*️⃣*️⃣
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.
[Surah Āli-ʿImrān: 185]
நமது பேச்சுக்களும் எழுத்துக்களும்...
*️⃣*️⃣*️⃣
அல்லாஹ் கூறுகிறான்:
"(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என் அடியார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.)"
[Surah Al-Isrāʾ: 53]
26/05/2026
Share
அல்லாஹ் அல்லாது அழைக்கப்படுவோர் இத்துணை பலவீனமானவர்கள்!
*️⃣*️⃣*️⃣
"(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை."
[Surah Sabaʾ: 22]
'இத்தகைய அல்லாஹ் மரணித்தவர்களை உயிர்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்...'
*️⃣*️⃣*️⃣
"வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்."
[Surah Al-Aḥqāf: 33]
ஹஜ்ஜூக்கு அழைப்பீராக!
*️⃣*️⃣*️⃣
“ஹஜ்ஜூக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிவிப்பீராக! (அவர்கள்) உங்களிடம் கால்நடையாகவும் வருவார்கள். இளைத்த ஒட்டகைகளின் மீது ஏறி வெகு தொலை தூரத்திலிருந்தும் வருவார்கள்."
[Surah Al-Ḥajj: 27]
தேனும் தேனியும்
*️⃣*️⃣*️⃣
"உமது இறைவன் தேனீக்கு, ‘‘நீ மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்'' என அறிவூட்டினான். பின்னர் ‘‘நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளை இட்டான்). இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது."
[Surah An-Naḥl: 67, 69]
புகழனைத்தும், இத்தகைய உனக்கே உரியது...
*️⃣*️⃣*️⃣
(நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக!
[Surah Al-Isrāʾ: 111]
பொறுமையுடன் துதி செய்துகொண்டிருப்பீராக!
*️⃣*️⃣*️⃣
"ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தியடையலாம் "
[Surah Ṭā-Hā: 130]
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jleeb Al Shuyoukh