Thiru Arul Hr.Sec School - Kulasai

Thiru Arul Hr.Sec School - Kulasai திரு அருள் நோக்கம்... அக இருள் போக்கும்...

நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளியில்  #தமிழக_அரசின்_மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்க...
14/01/2026

நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் #தமிழக_அரசின்_மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நமது பள்ளி வளாகத்தில் நேற்று (13-01-2026) நடைபெற்றது.
விழாவில் நமது பள்ளியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திரு. கமலா சங்கர் அவர்களின் துணைவியார் மருத்துவர்
#திருமதி_விஜயபாரதி_கமலா_சங்கர் அவர்கள் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு 60 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சின்னத்துரை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் (13-01-2026) அன்று நமது பள்ளியின் பசுமைப்படை இயக்கத்தின் சார்பாக சுற்ற...
14/01/2026

நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் (13-01-2026) அன்று நமது பள்ளியின் பசுமைப்படை இயக்கத்தின் சார்பாக சுற்றுசூழலுக்கு மாசில்லாத வகையில் பனை ஓலை கொண்டு பொங்கல் வைத்து #பசுமை_பொங்கல் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் நமது பள்ளியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திரு.கமலா சங்கர் அவர்களின் துணைவியார் மருத்துவர் #திருமதி_விஜயபாரதி_கமலா_சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாணவ மாணவியருக்கு பாலீதின் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர், அலுவலக நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தினர்...
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

குலசேகரன்பட்டினம் திரு அருள் மேல் நிலைப் பள்ளி மாநில அளவிலான கபடி, வாள் வீச்சு மற்றும் சிலம்பாட்டத்தில் சாதனை.பள்ளிக்கல்...
12/12/2025

குலசேகரன்பட்டினம் திரு அருள் மேல் நிலைப் பள்ளி மாநில அளவிலான கபடி, வாள் வீச்சு மற்றும் சிலம்பாட்டத்தில் சாதனை.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக (RDS/BDS) மாநில அளவிலான கபடி மற்றும் வாள் வீச்சு போட்டிக்கு நமது பள்ளியில் இருந்து 32 மாணவர்கள் பங்கு பெற்றனர் அதில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்றது. அதில் நமது பள்ளி மாநில அளவில் வெள்ளி பதக்கம் வென்று நமது பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் 10ம் வகுப்பு மாணவி முத்துகௌரி அவர்கள் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பு சுற்றி சாதனை படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த மாணவர்களையும் அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு.Dr T. அழகுதுரை Phd ,NIS அவர்களையும் பள்ளி ஆட்சி மன்ற குழு தலைவர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறோம்...

தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் கலந்து கொண்ட நமது திரு அருள் மேல்நிலைப்...
09/10/2025

தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் கலந்து கொண்ட நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குரூப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குரூப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தனிநபர் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று பள்ளிக்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் நமது குலசேகரன்பட்டினம் திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்...
08/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் நமது குலசேகரன்பட்டினம் திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவி #முத்து_கௌரி அவர்கள் தொடர்ந்து 3மணி நேரம் தொடர்ந்து சிலம்பு சுற்றி சாதனை படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

11/09/2025
10/09/2025

மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் முதலிடம்

கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நமது குலசேகரப்பட்டினம்  #திரு_அருள்_மேல்நிலைப்பள்ளி யிலிருந்து ச...
10/09/2025

கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நமது குலசேகரப்பட்டினம் #திரு_அருள்_மேல்நிலைப்பள்ளி யிலிருந்து சென்ற சூப்பர் சீனியர் மாணவர் அணியும், சீனியர் மாணவர் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி கோப்பையை நம் பள்ளிக்கு வாங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். அத்துடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நமது பள்ளியின் மாணவர் #மணிகண்டன் அவர்கள் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் ரைடருக்கான விருதினை வென்றுள்ளார்...

கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நமது குலசேகரப்பட்டினம்  #திரு_அருள்_மேல்நிலைப்பள்ளி யிலிருந்து ச...
10/09/2025

கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நமது குலசேகரப்பட்டினம் #திரு_அருள்_மேல்நிலைப்பள்ளி யிலிருந்து சென்ற சூப்பர் சீனியர் மாணவர் அணியும், சீனியர் மாணவர் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி கோப்பையை நம் பள்ளிக்கு வாங்கி பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேற்படி மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்து அல்லும் பகலும் செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அழகுதுரை அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்...

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...திரு அருள் நோக்கம்அக இருள் போக்கும்
05/09/2025

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
திரு அருள் நோக்கம்
அக இருள் போக்கும்

நமது குலசேகரப்பட்டினத்தில் நேற்று(03.09.2025) விவேகானந்தா கேந்திரம் நடத்திய உடன்குடி ஒன்றிய அளவிலான பல்வேறு போட்டிகளில் ...
04/09/2025

நமது குலசேகரப்பட்டினத்தில் நேற்று
(03.09.2025) விவேகானந்தா கேந்திரம் நடத்திய உடன்குடி ஒன்றிய அளவிலான பல்வேறு போட்டிகளில் நமது #திரு_அருள்_மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்று நமது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்...

 #கபாடி_போட்டியில்_சாதனைதூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழக  #முதலமைச்சர்_கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில்  #கப...
03/09/2025

#கபாடி_போட்டியில்_சாதனை
தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழக #முதலமைச்சர்_கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் #கபாடி போட்டியில் நமது திரு அருள் மேல்நிலைப்பள்ளியின்‌ கபாடி அணி மாவட்ட அளவில் #இரண்டாம்_இடம் பெற்று நமது பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இப்போட்டியில் மொத்தம் 113 அணிகள் பதிவு செய்திருந்தன. பதிவு செய்த அணிகளில் 94 அணிகள் பங்கு பெற்று விளையாடின.
அதில் நமது பள்ளி அணி இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது...

சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்கள், பள்ளியின் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி...

Address

Kulasekharapattinam
Tuticorin
628206

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Arul Hr.Sec School - Kulasai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category