03/07/2026
குடும்ப ஜெபம் [Family Prayer]
குறிப்பாய்த் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், கணவனும், மனைவியும் தேவனைத்தொழுதுகொள்ளும் விஷயத்திலும், திவ்விய சித்தத்திற்குப் பணியும் விஷயத்திலும்... தங்கள் இருதயங்களை ஒருங்கிணைப்பதும், தங்கள் முழங்கால்களை முடக்கிடுவதும் ஏற்ற காரியமாய் இருக்கும். இது எவ்வளவாய் அந்த இருதயங்களையும், ஜீவியங்களையும் ஒன்றிணையப்பண்ணிட வேண்டும்.
இத்தகைய முன்மாதிரியானது குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாய் இருக்கும். சடங்காச்சாரமான, நீண்ட ஜெபங்கள் மூலமாய் இல்லாமல், கர்த்தர் ஜெபம்பண்ணினது போன்று
எளிமையான, உண்மையான, விசுவாசமுள்ள ஜெபங்களின் வாயிலாய்ப் பெற்றோர்கள் நன்மையான ஒவ்வொரு ஈவுகளை அருளுகிறவர்பாலுள்ள தங்கள் அன்பையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதன்
காரணமாய் - இந்தச்சிறு ஒலிவக்கிளைகளானது [பிள்ளைகள்] தங்களது வாலிப நாட்களில் சிருஷ்டிகரை நோக்கிப் பார்ப்பதற்குப் பயிற்றுவிக்கப்படுவது எத்தனை அருமையான காரியமாய் இருக்கும்.
பெற்றோர்கள் தங்கள் பரலோக பிதாவினுடைய உன்னதமான சித்தத்திற்கும், ஞானத்திற்கும் தலைவணங்கிடுவதையும், அதை அடையாளங்கண்டுகொள்வதையும் பிள்ளைகள் காணும்போது, தங்கள் சிருஷ்டிகரைப்பற்றி அறிந்துகொள்வதற்கும், அவரைத் தொழுதுகொள்வதற்கும் கற்றுக்கொண்டு வருகையில், பெற்றோரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது மற்றும் கீழ்ப்பட்டிருப்பதுபற்றிய பாடங்களையும் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.
பிள்ளைகள் சிந்தித்துச் செயல்படும் வயதிற்கு வருகையில் தினந்தோறும் உள்ள குடும்ப
ஜெபமானது, அது காலையிலோ அல்லது மாலையிலோ செய்யப்படுவதாக இருப்பினும் . . . அதைத் தேவன் நமக்கு முன் [ஜெபம் ஏறெடுத்தல் எப்படி இருக்க வேண்டுமென்று] எப்படி முன்வைத்தாரோ அப்படியே, பிள்ளைகளின் பார்வையிலும் காணப்பட வேண்டும்.
அதாவது கட்டாயத்தின்பேரில் இல்லாமல், மாறாக
விருப்பமுள்ள மனதினால், நன்றியுள்ள, அன்புள்ள இருதயங்களினால் ஏறெடுக்கப்பட வேண்டும். இத்தகைய செல்வாக்கும், முன்மாதிரியும் பிள்ளைகளுடைய எதிர்க்கால வாழ்க்கையில்... இல்லத்தையும், பெற்றோர்களையும், பரிசுத்தமான காரியங்களையும் ... அவர்களுக்கு
அருமையானவைகளாக்கிடும்.
தேவனை உண்மையாய்த் தொழுதுகொள்வது என்பது தற்கால மற்றும் எதிர்க்காலஜீவியத்திற்கும் நன்மை பயக்கின்றதாயிருக்கும்.
குடும்பத்திலும் சபையிலும் கிறிஸ்துவின் பிரமாணங்களை குடும்பத் தலைவன் அடையாளம் கண்டு கொள்பவராய் இருத்தல் வேண்டும்.
கிறிஸ்துவின் [நீதியின், அன்பின்] பிரமாணங்களை அடையாளம் கண்டுகொள்ளும் குடும்பத் தலைவன், [குடும்பத்தில்] ஒழுங்கின்மைக்கு, அக்கிரமத்திற்கு ஏதுவான அனைத்தையும் எதிர்த்திட வேண்டும்.
அன்பின் பூரண பிரமாணத்தினை குடும்பத்திற்கு முன்பும், தனக்கு முன்பும் குடும்பத் தலைவன் நிலைநிறுத்திட வேண்டும்; இந்த அன்பின் பூரண பிரமாணமானது, அவர்களின் இருதயங்களைப் பூரணமாயும், அழிவுக்கேதுவான சரீரங்களையும், அவர்களால் அனுமதிக்க முடிகிற மட்டும் ஆளத்தக்கதாக, இந்த பிரமாணத்தினை அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் கர்த்தர் முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் [நீதியின், அன்பின்] பிரமாணத்தினுடைய ஆளுகையானது, வார்த்தையினாலும், மாதிரியினாலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது ஒருபோதும் மறந்துபோகப்படக்கூடாது.
இதன் அர்த்தமென்னவெனில், கிறிஸ்துவைத் தனது தலையாக அடையாளம் கண்டுகொண்டுள்ள சபையின் ஒவ்வொரு அங்கத்தினனும், கூடுமான மட்டும் தன் குடும்பத்திலும் தேவனுடைய சித்தத்தைச் செய்திட நாடிட வேண்டும்.
இன்னுமாக ஒருவேளை அவன் ஏற்கெனவே குடும்ப ஜெப ஒழுங்கினை ஏற்படுத்திக்கொள்ளவில்லையெனில், கூடுமானமட்டும் விரைவாய் அதைச் செய்திடுவானாக.
ஒருவேளை வேலை அல்லது தொழில் காரணமாக தினந்தோறும் குடும்ப ஜெபங்களை அவனால் பெற்றிருக்க முடியவில்லையெனில், அவற்றை வாரம் ஒருமுறை அவன் பெற்றிருக்கலாம் மற்றும் இப்படியாய் வெளிப்படும் நல்நோக்கங்களையும், சிறந்த பிரயாசங்களையும் கர்த்தர் ஏற்றுக்கொள்வார்.
ஒருவேளை தேவனால் குடும்பத்தின் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ள புருஷன், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினனாய் [கிறிஸ்தவனாக] இல்லையெனில். . . கிறிஸ்தவளாய் இருக்கும் மனைவியானவள் இது விஷயத்திலுள்ள திவ்விய பிரமாணத்தினை - அதாவது புருஷனே, மனைவி மற்றும் குடும்பத்திற்கான தலைவனாக இருக்கின்றார் என்றும், தனது கணவன் வெளிப்படுத்தியுள்ளதான விருப்பத்திற்கு எதிராக எந்த விதத்திலும் குடும்ப ஜெபத்தினை ஒழுங்குப்படுத்திடக்கூடாது என்றுமுள்ள திவ்விய பிரமாணத்தினை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
தனது கணவன், ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொள்வதற்கென, அவள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தினையும், வழிநடத்துதலையும் மற்றும் நன்மைக்கேதுவாய் மாற்றிடும் வழிநடத்துதலையும் நாடி எதிர்ப்பார்த்து, பலன்களுக்காய்க் காத்திருக்க வேண்டும்.
கிறிஸ்தவனாய் இராத கணவன், ஆனாலும் ஒழுக்க விஷயத்திலும், பக்தி விஷயத்திலும் ஈடுபாடுள்ள கணவன் இந்தச் சூழ்நிலைகளின் கீழ்த் தனது ஸ்தானத்தினுடைய பொறுப்பினை உணர்ந்துகொள்வார்.
மனைவியின் ஞானமுள்ள மற்றும் தன்னடக்கமுள்ள மற்றும் சிறந்த நடக்கையானது கணவனால் பெரிதும் மதிக்கப்படும்; காரணம் இது விஷயத்திலுள்ள அவளது தன்னடக்கமாகும். மேலும் இது அவளும், தானும் கீழ்ப்பட்டிருக்க வேண்டியதான மேலான பிரமாணத்திற்கும், நியாயப்பிரமாணிக்கருக்கும் அவள் கீழ்ப்பட்டிருக்கின்றாள் என்று கணவனுக்குக் கிடைத்திருக்கும் நிரூபணமாகும்.
புது சிருஷ்டியின் குடும்பமும், கடமைகளும்
[தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்]
தங்களுக்கு இருக்கும் கேள்விகள் குறித்து
சத்திய வேதாகமம் கூறுவது என்ன?
பதில் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?
தயக்கமில்லாமல் தொடர்புகொள்ளுங்கள்.
சத்திய வேதாகமத்தின் பாடங்கள்
ஆர்வமூட்டும் பல்வேறு தலைப்பின் கீழ்
இலவச வேதபாட வகுப்புகள்
+91 9797731432, +91 8800701432.