29/04/2014
ஒரு தந்தையின் வலி"
திருமணம் ஆகாத இளைஞராக இருந்து, ஒருவரின் பேட்டியை பார்த்தால், "நல்லா நடிக்கிறான்யா" என்றுதான் தெரியும்..ஆனால், ஒரு நிமிடம், ஒரு பெண்ணின் தந்தையாக, நடுத்தர வர்க்கத்தின் முகமூடியை அணிந்து கொண்டு பாருங்கள்..அது ஒரு பேட்டி அல்ல, "ஒரு தந்தையின் வலி".
அப்பா, ஏதாவது ஒரு ஆசிரியராகவோ, அரசு அலுவகலத்தில் ஒரு இடைநிலை ஊழியராகவோ இருப்பார்..எல்லா ஆசைகளையும் அடக்கி கொண்டு, மாதத்திற்கு ஒரு சினிமா என்று கணக்குபோட்டு கொண்டு, வங்கியில் லோன் போட்டு, மேனேஜர்களின் திட்டுகளை வாங்கிகொண்டு, முகத்தில் அனைத்தையும் மறைத்துகொண்டு, வீட்டுக்கு வந்து "செல்லக்குட்டி.." என்று மகள்களை அணைத்துக்கொண்டு முத்தமிடும்போது, அந்த வலி, மகள்களுக்கு தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி.
தன் மகள்கள் நல்ல துணி உடுத்தவேண்டும் என்று காசை கணக்கு பார்த்து காலத்திற்கே ஒவ்வாத கட்டம்போட்ட சட்டையுடனேயே இன்னமும் சுத்தி கொண்டிருக்கும் அப்பாக்களை காட்டிலும், "அய்யோ..என் மவளை என்ன பண்ணிருப்பானோ" என்று மனதுக்குள் அழுதுகொண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமலும், மனைவியை கட்டிகொண்டு அழும் அப்பாக்களை காட்டிலும், "எம்மவ, இங்க்லீசு என்னமா பேசுறா தெரியுமா சார், ராணி மாதிரி ஆக்குவேன் சார்..பெரிய படிப்பெல்லாம் படிச்சு, தங்கமா வாழப்போறா சார்" என்று ஆயிரம் தடவை அலுவகத்தில் அலுக்காமல் சொல்லாமல் அப்பாக்களாய் காட்டிலும், "மவளை ரொம்ப நேரம் கண்முழிச்சு படிக்கவேணாம்னு சொல்லு..உடம்பு கெட்டுபோகும்..முதல்ல அவளுக்கு ஒரு டீ போட்டு கொடுக்காம என்ன புடிங்கிட்டு இருக்க" என்று மனைவியிடம் கோபம் காட்டும் அப்பாக்களை காட்டிலும் , "என் மவ வயசுக்கு வந்துட்டா சார்..ரெண்டு நாள் லீவுவேணும்" என்று அலுவலகத்தில், தன்னை விட இளவயதான மேனேஜர் முன்னால் கைகட்டி குறுகி நிற்கும் அப்பாக்களை காட்டிலும், ரெண்டு வருடம் பல்லைக் காட்டி பின்னாடியே சுற்றி "ஹே..நீ ரொம்ப அழகா இருக்க" என்றும் "ஐ.லவ்.யூ டியர்" என்று எஸ்.எம்.எஸ் விடும் அழகன்கள் தான் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரே வரியில் சொல்வேன்..
"போங்கடி..நீங்களும் உங்க இழவெடுத்த புண்ணாக்கு காதலும்...