02/10/2022
ஐன்ஸ்டீன் 🏛 கல்லூரிகளின்
பட்டமளிப்பு 🎓 விழா!
அக்டோபர்' 1, 2022 மாலை 5.30 மணிக்கு நமது ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 14ஆவது பட்டமளிப்பு 👩🏻🎓 விழா மற்றும் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2ஆவது பட்டமளிப்பு 👨🏻🎓 விழா இனிதே நடைபெற்றது.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் 🙏🏽 திரு.N.சந்திரசேகர் இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து சுமார் 500 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றினார். தனது பேச்சில் கல்வியின் 📚 முக்கியத்துவம், பட்டதாரிகளின் சமுதாயக் கடமை மற்றும் பெற்றோரை 👨👨👧👦 கவனித்துக் கொள்ளவேண்டும் என சிறப்பாக எடுத்துரைத்தார்.
தாங்கள் படித்த கல்லூரிக்கு மீண்டும் வருகிறோம், அதுவும் பட்டம் 🎓 வாங்க வருகிறோம் என்ற உற்சாகத்தை மாணவர்களிடம் உணர முடிந்தது. முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் இளைய மாணவர்களுடன் 🤝 உரையாடியது நேற்றைய நாளின் சிறப்பு. குறிப்பாக சில மணிநேரமே அணியக்கூடிய பட்டமளிப்பு விழா 🧑🏽🎓 ஆடை அணிந்து கம்பீரமாக கல்லூரி வளாகத்தில் அவர்கள் வலம் வந்ததைப் பார்க்கப் பார்க்க 🤩 ஆனந்தம்.
ஐன்ஸ்டீன் கல்லூரிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் 👌🏾 சிறப்பாக நடக்கும். பட்டமளிப்பு விழாவில் பல பெற்றோர்கள் தங்கள் வாரிசு பட்டம் பெறுவதைப் பார்க்க ஆர்வமாக👏🏽 வருவர். இந்த ஆண்டும் பல பெற்றோர்கள் வந்து நெகிழ்ந்து மகிழ்ந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் சிறப்பு 🥘விருந்தளிக்கப்பட்டது.
குறிப்பாக 👉🏾 இந்த மாணவர்கள் தங்கள் இறுதியாண்டு கல்லூரி நாட்களை கொரோனா 🦠 பேரிடரால் இழந்தவர்கள். அவர்களை மீண்டும் கல்லூரியில் பார்த்து, மகிழ்ந்து, நட்பு 🤝 பாராட்டியதில் கல்வியாளராக மனநிறைவடைந்தேன்.
கல்விச்சோலை எனும் ⛅️ தெளிவான வானில் மாணவர்களாக இருந்து, 🎓 பட்டதாரிகளாக உயர்ந்து, நட்சத்திரமாக ✨ மின்னினர் எமது மாணாக்கர்கள்.
கல்வியாளர்
ஆலடி எழில்வாணன்