17/06/2023
Pay back to the Society அமைப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வு வகுப்புகள், சென்னை அசோக்நகர் பகுதியில் இருக்கும் நம் PBTS வகுப்பில், இன்று 12.06.2023, மாலை 6 மணி முதல் தொடங்கப்பட்டன. முதல் வகுப்பு PBTS தோழமை அம்பிகாபதி அவர்களால் நடத்தப்பட்டது. முதல் வகுப்பிற்கு வந்த தம்பிகள் மிக ஆர்வமுடன் இருந்தனர்.
வார நாட்களில் நாள்தோறும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வகுப்புகள், இப்போதைக்கு தோழர் அம்பிகாபதி மற்றும் தோழர் சண்முகப்பிரியா அவர்களால் முக்கியமாக நடத்தப்படும். மற்ற தோழர்களான மீனா சோமு, மேனகா சோமு, பத்மனாபன் ஆகியோரும் அவ்வபோது வகுப்பு எடுக்க உள்ளனர். இன்னும் பாடமெடுக்க ஆர்வமுடைய தோழர்களையும் வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யும் திட்டமிருக்கிறது. வகுப்பு எடுக்க விருப்பமிருக்கும் தோழமைகள், வகுப்பு எடுக்கலாம்.
மெட்டீரியல்ஸ் மற்றும் நோட் புத்தகங்கள் வாங்க உள்ளோம். இந்த முறையும் நம்மால் முடிந்த அளவு, ஜாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியல் தொகுப்பு மற்றும் பழங்குடியின இளையவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரவும் அதிகாரத்தில் அம்பேத்கரியத்தை உள்வாங்கிய இளைய தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்ட PBTS-இன் அடுத்தகட்ட முயற்சி இது.
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் SC/ST பிரிவை சேர்ந்த தம்பி, தங்கைகள் விருப்பமிருப்போர், பயிற்சியில் பங்கு பெற அழைக்கிறோம்.
ஜெய் பீம்.
Pay Back to the Society