Arulmigu Arthanareeswarar Arts & Science College, Tiruchengode

Arulmigu Arthanareeswarar Arts & Science College, Tiruchengode It is established by Arulmigu Arthanareeswarar Temple, Hindu Religion & Charitable Endowment Department, Government of Tamilnadu.

It's aim is to provide higher education to all the students and provides Hindu Religion Diploma Courses.

இந்திய தாய் திருநாட்டின் 80- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு (15.08.2026) சனிக்கிழமை  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவி...
15/08/2026

இந்திய தாய் திருநாட்டின் 80- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு (15.08.2026) சனிக்கிழமை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து சமபந்தி நடைபெற்றது. அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் திரு .மா. சின்னதுரை அவர்களது தலைமையில். அறங்காவலர் குழுத்தலைவர் திரு.செ.தங்கமுத்து மற்றும் அறங்காவலர்களான திரு.டி.சி. பிரபாகரன், திருமதிப.சித்ரா வண்ணகண்ணன், திரு.தி.இ.அர்த்தநாரி, திரு.ப.பச்சியப்பன், கல்லூரி முதல்வர் முனைவர்.கி. வெங்கடாசலம் அவர்களது முன்னிலையில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் தன்னார்வ மாணவர்கள் சிறப்பு வழிபாட்டில் பக்தர்களுக்கு இறைத்தொண்டாற்றி, சமபந்தியில் உணவுகளை பரிமாறினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர்.ர.மோகன் 20 தன்னார்வ மாணவர்களை சிறப்பாக வழிநடத்தினார். இப்பொது சமபந்தியில் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

15.08.2026 அன்று திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தாநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா சி...
15/08/2026

15.08.2026 அன்று திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தாநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அருள்மிகு அர்த்தாநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் கல்லூரியின் செயலருமாகிய திரு. மா.சின்னதுரை அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ/ மாணவிகளுக்கு பரிசுகளையும் நேர்முகத் தேர்வில் தேர்வாகியுள்ள மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. செ. தங்கமுத்து மற்றும் அறங்காவலர்களான திரு. டி.சி. பிரபாகரன், திருமதி ப. சித்ரா வண்ணகண்ணன், திரு. தி.இ. அர்த்தநாரி, திரு. ப. பச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இந்நிகழ்வில் வரவேற்புரையினை கல்லூரி முதல்வர் முனைவர் கி. வெங்கடாசலம் அவர்கள் வழங்கினார். நன்றி உரையை கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் செ.பிரேமா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் வெ.சித்ரா, வணிக நிர்வாகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ந.பூர்ணிமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் துறைத்தலைவர்கள், உதவிப்பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ/மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Anti Drug Awareness Pledge Programme 11.08.2026
14/08/2026

Anti Drug Awareness Pledge Programme 11.08.2026

தேசிய நூலகர் தின விழா அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.திருச்செங்கோடு, அர...
14/08/2026

தேசிய நூலகர் தின விழா அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூலகத்துறை, வாசகர் வட்டம் மற்றும் நிறுவன புத்தாக்கச் சபையும் (IIC) இணைந்து தேசிய நூலகர் தின விழாவானது 12.08.2026 அன்று கல்லூரிக் கருத்தரங்கக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தையாகப் போற்றப்படும் பத்மஸ்ரீ பேராசிரியர் முனைவர் எஸ். ஆர். ரங்கநாதனின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, “Connecting Knowledge Digitally: E-Resources and the Future of Libraries in the AI Era” என்னும் தலைப்பில் கருத்தரங்கு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும், கல்லூரியின் செயலருமான திரு. மா. சின்னதுரை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர்
கி. வெங்கடாசலம் தலைமை உரையாற்றினார்.
வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளரும்,
நிறுவன புத்தாக்கச் சபையின் தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி நூலகருமான முனைவர் பா.ஜெகன் வரவேற்புரை
ஆற்றினார்.வாசகர் வட்டச் செயலரும்,
நிறுவன புத்தாக்கச் சபையின் அறிவுசார் சொத்துரிமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் மா. வசந்தகுமாரி, நிறுவன புத்தாக்கச் சபைத் தலைவரும், கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவருமான முனைவர் செ. பிரேமா,
நிறுவன புத்தாக்கச் சபை ஒருங்கிணைப்பாளரும், கணிதத்துறைத் தலைவருமான முனைவர் சி.நளினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாசகர் வட்ட உறுப்பினரும், நிறுவன புத்தாக்கச் சபையின் தொழில்பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறைத் தலைவருமான முனைவர் பா.சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் நூலகர் முனைவர் ஜெ. ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் மின்னணு வளங்கள், டிஜிட்டல் அறிவு மற்றும் எதிர்கால நூலகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.விழாவின் நிறைவாக, வாசகர் வட்ட உறுப்பினரும், நிறுவன புத்தாக்கச் சபையின் துணைத் தலைவரும், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவருமான முனைவர்
மோ. மெய்ஞானம் நன்றியுரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் மாணவ, மாணவியர்கள், அனைத்துத்
துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழா, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், மின்னணு வளங்களைப் பயன்படுத்தும் திறன் மற்றும் நவீன நூலகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

01.08.2026 அன்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வ...
10/08/2026

01.08.2026 அன்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் விழிப்புணர்வு முகாம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ/மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறும் நடைமுறைகள், வங்கிகள் வழங்கும் கல்வி நிதி உதவிகள், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உயர்கல்விக்கான நிதி ஆதரவு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதது.மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களுக்கு வங்கி அலுவலர்களிடம் விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வு, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில் பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தியது.கணினி பயன்பாட்டியல் துறையின் கௌரவ விரிவுரையாளர் திருமதி மா. மேனகா அவர்களும், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் மோ மெய்ஞானம் அவர்களும் மாணவ மாணவியர்களை உடன் அழைத்துச் சென்றார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்பு...
10/08/2026

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டம், பாச்சலில் அமைந்துள்ள பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இம்முகாமில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியும் திறமையும் கொண்ட இளைஞர்களைத் தேர்வு செய்து வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன.இம்முகாமில் திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மூன்றாம் ஆண்டு பி.காம் மாணவர்களான திவாகர், மருதவேல், ராஜேஷ் மற்றும் பி.பி.ஏ. மாணவர் சதீஷ்ஆகிய 4 மாணவர்கள் தங்களது திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்கும் வகையில், கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளரும் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவருமான முனைவர் மோ. மெய்ஞானம் அவர்கள் மாணவர்களை வழிநடத்திச் சென்றார்.வேலைவாய்ப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாகவும், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் இக்கல்லூரியின் செயலருமான திரு. மா. சின்னதுரை அவர்களின் சார்பாகவும், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. செ. தங்கமுத்து மற்றும் அறங்காவலர்களான திரு. டி.சி. பிரபாகரன், திருமதி ப. சித்ரா வண்ணகண்ணன், திரு. தி.இ. அர்த்தநாரி, திரு. ப. பச்சியப்பன் ஆகியோரின் சார்பாகவும், கல்லூரி முதல்வர் முனைவர் கி. வெங்கடாசலம் அவர்களின் சார்பாகவும், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சார்பாகவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

07.08.2026 அன்று கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியின் அகத்தர உறுதிப் பிரிவு (IQAC) மற்றும் ...
09/08/2026

07.08.2026 அன்று கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியின் அகத்தர உறுதிப் பிரிவு (IQAC) மற்றும் தமிழ்த்துறை இணைந்து நடத்திய “இலக்கியம் கூறும் தமிழர் அறம்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராகக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா.வசந்தகுமாரி அவர்கள் கலந்து கொண்டு, “இலக்கியம் கூறும் தமிழர் அறம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அவர் தனது சிறப்புரையில், தமிழர் வாழ்வியலில் அறத்தின் முக்கியத்துவம், தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் அறக்கருத்துகள் மற்றும் அவை இன்றைய தலைமுறைக்கு வழங்கும் வாழ்வியல் நெறிகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கல்லூரி, ஆங்கிலத் துறை மற்றும் நிறுவன புத்தாக்க சபை இணைந்து, 07.08.2026 அன்று 2026–2027 கல்வியாண்டிற்கான ஆங்கில இலக்கிய ...
09/08/2026

கல்லூரி, ஆங்கிலத் துறை மற்றும் நிறுவன புத்தாக்க சபை இணைந்து, 07.08.2026 அன்று 2026–2027 கல்வியாண்டிற்கான ஆங்கில இலக்கிய மன்ற (ELPF) துவக்க விழாவை கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடத்தினர்.கல்லூரிச் செயலாளர் திரு. மா. சின்னதுரை மற்றும் முதல்வர் முனைவர் கி. வெங்கடாசலம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிறுவன புத்தாக்க சபை தலைவர் மற்றும் பி.சி.ஏ. துறைத் தலைவர் முனைவர் செ. பிரேமா வாழ்த்துரையாற்றினார். நாமக்கல் என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் செ. அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.அவர் தனது உரையில், அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஐந்து முக்கிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் ப.சரவணன் வரவேற்புரையாற்றினார். திரு.செ.ராமசாமி ஆங்கில இலக்கிய மன்றத்தின் நோக்கங்களை அறிமுகப்படுத்தினார். திருமதி பூ.காயத்ரி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில், “MATH X-Change Forum” மன்றத்தின் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு செயல்பாடுகள் த...
09/08/2026

கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில், “MATH X-Change Forum” மன்றத்தின் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு செயல்பாடுகள் தொடக்க விழா கல்லூரிக் கருத்தரங்கக் கூடத்தில் 06.08.2026 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிக் கணிதவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் வி. கணேசன் கலந்துகொண்டு, “நிஜ வாழ்வில் வகைக்கெழுச் சமன்பாடுகளின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.அவர் தனது உரையில், இயற்பியல், பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கணிதமும் வகைக்கெழுச் சமன்பாடுகளும் எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், கணிதக் கோட்பாடுகளை அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி அறிந்துகொள்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.கல்லூரிச் செயலாளர் திரு. மா. சின்னதுரை மற்றும் முதல்வர் முனைவர் கி. வெங்கடாசலம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கணிதவியல் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான முனைவர் சி. நளினி வரவேற்புரை வழங்கினார்.மேலும் சிறப்பு விருந்தினர் பேசுகையில், “Share, Discuss and Solve Together” என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள கணிதவியல் மன்றத்தின் மூலம் மாணவர்களின் தர்க்கச் சிந்தனை, கணிதத் திறன், சிக்கல் தீர்க்கும் ஆற்றல், குழுப்பணி மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்விசார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கான எண்ணளவுத் திறன் சார்ந்த பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.சிறப்பு விருந்தினரை மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவி கனிஷா ஸ்ரீ அறிமுகம் செய்து வைத்து, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான முனைவர் செ. பிரேமா வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்களின் கருத்துப் பகிர்வு நடைபெற்றது. கணிதவியல் துறை உதவிப் பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புச் செயலருமான முனைவர் எஸ். சரண்யா நன்றியுரை வழங்கினார்.

கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் (BCA) துறை மற்றும் நிறுவன புத்தாக்கச் சபை (IIC) இணைந்து, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, ...
04/08/2026

கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் (BCA) துறை மற்றும் நிறுவன புத்தாக்கச் சபை (IIC) இணைந்து, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, நிரலாக்கத் திறன் மற்றும் புதுமைச் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் "Mentorship Support on Data Structures and Algorithms for Innovation" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கை 04.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடத்தின.இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவரும், உதவி பேராசிரியருமான திரு.A.வேணுகோபால் அவர்கள் வளமுனைவராகக் கலந்து கொண்டு, தரவு கட்டமைப்புகள் (Data Structures) மற்றும் நெறிமுறைகளின் (Algorithms) முக்கியத்துவம், புதுமையான மென்பொருள் உருவாக்கத்தில் அவற்றின் பங்கு, மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் திறன் மேம்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்பார்ப்புகள் மற்றும் நவீன மென்பொருள் உருவாக்கத்தில் நெறிமுறைகளின் பயன்பாடு குறித்து பயனுள்ள விளக்கங்களை வழங்கி, மாணவர்கள் புதுமையான சிந்தனையுடன் வளர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும், இக்கல்லூரியின் செயலருமான திரு. மா. சின்னதுரை அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் திரு. கி. வெங்கடாசலம் அவர்கள் தலைமை உரையாற்றினார்.நிகழ்ச்சிக்கு கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவரும், நிறுவன புத்தாக்கச் சபை (IIC) தலைவருமான முனைவர் செ. பிரேமா அவர்கள், கௌரவ விரிவுரையாளரும், நிறுவன புத்தாக்கச் சபை உறுப்பினருமான திருமதி. மா. மேனகா அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். பி சி மூன்றாம் ஆண்டு மாணவி மது ஸ்ரீ வரவேற்புரையாற்றினார். பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி.மீனகா நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தரவு கட்டமைப்புகள், நெறிமுறைகள் மற்றும் புதுமைச் சிந்தனை சார்ந்த பல பயனுள்ள தகவல்களை அறிந்து பயனடைந்தனர். இவ்விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Address

Tiruchengode
Tiruchengodu
637201

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Arthanareeswarar Arts & Science College, Tiruchengode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Arulmigu Arthanareeswarar Arts & Science College, Tiruchengode:

Shortcuts

Share