11/05/2020
நம் பள்ளி
R.C உயர்நிலை பள்ளி, ரத்தினபுரம்
ஒழுக்கம், கல்வி, விளையாட்டு (உடற்கல்வி) இந்த மூன்றினையும் சிறப்பாக கொண்டு முத்து மாநகரில் முத்துகிருஷ்ணாபுரம், எஸ்.எஸ்.பிள்ளை தெரு, முகமதுசாதலிபுரம், யாதவர் தெரு போன்ற சுற்றுவட்டார குழந்தைகளுக்கு கல்வியறிவினை புகட்டிய பள்ளி..
நடுநிலைப்பள்ளியாக இருந்து தற்போது உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை/எளிய மாணவர்களே!!
கொரோனா ஊரடங்கு காலத்தில் இம்மாணவர்களின் பெற்றோர்களின் நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு அப்பள்ளி ஆசிரியர்கள், கருணையுள்ளம் கொண்டு மனமுவந்து தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியினை ஒதுக்கி மிகவும் வறிய நிலையில் உள்ள குழந்தைகளின் குடும்பத்திற்கு சுமார் ஒரு லட்சம் மதிப்பில் 270 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர்.
இந்த நல் நிகழ்வில் பழைய மாணவர்களின் பங்களிப்பையும் ஏற்று கொண்டு இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளி தாளாளர் , அருட்திரு.ரோலிங்டன்,
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.அமல்ராஜ்,
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.அருள்ஜோசப்பிரபு, மற்றும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்த சுகாதார ஆய்வாளர் திரு.என்.வெங்கடேசன், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.செல்வகுமார், மற்றும் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் திரு.சங்கர் அவர்களுக்கும் நன்றிகள்!!...
பள்ளியின் திருப்பணி தொடர வாழ்த்துகள்!!!!