23/04/2023
முன்னாள் அமைச்சர் எஸ் டி எஸ் நூற்றாண்டு விழா.
முன்னாள் அமைச்சரும் ,மூத்த திராவிட அரசியல் தலைவருமான திரு எஸ் டி சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 15 சனிக்கிழமை தஞ்சாவூர் ,கீழ உளூரில் காலையில் விளையாட்டுப் போட்டிகளுடன் தொடங்கப்பட்டு மாலையில் நினைவு கூட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் திரு. எஸ் டி எஸ் செல்வம், தாளாளர் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, திரு கு. ராஜமாணிக்கம், MGR மன்ற இணை செயலாளர் தஞ்சை தெற்கு, வழக்கறிஞர் திரு.அழகு. சிவானந்தம், திரு. வீ.முத்துவேலு, முன்னாள் முதல்வர் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, திரு.
ரா .வீரமணி Retired Deputy General Manager ONGC மற்றும் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் அரசியல் புரட்சிக்கு வித்திட்ட திராவிட அரசியலின் வளர்ச்சிக்கு காரணமான, திராவிட மாணவர் அமைப்பை நிறுவி பெரியார் மற்றும் அண்ணாவின் பேரன்பை பெற்றவர். திராவிட கொள்கைகளில் பற்று கொண்டவர், திராவிட அரசியலில் அடிநாதமான சமூக நீதியை நிலைநாட்ட 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர முக்கிய பங்காற்றியவர்.
அதிமுக தமிழகத்தில் மாபெரும் கட்சியாக வேரூன்ற தம் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெருமதிப்பை பெற்றவர். எளிமையான, நேர்மையான தன்னலமற்ற, அப்பழுக்கற்ற அரசியலுக்கு சொந்தக்காரர். தான் பிறந்த தஞ்சை மண்ணில் உலகம் போற்றும் எட்டாம் உலக தமிழ் மாநாட்டை நடத்தி தஞ்சைக்கு பெருமை சேர்த்தவர். தரணி போற்றும் தஞ்சைக்கு தமிழ் பல்கலைக்கழகத்தை பெற்றுத் தந்தவர். இவ்வாறு எண்ணிலடங்கா பல சமூக தொண்டாற்றிய பொன்னியின் செல்வரை நாம் என்றென்றும் நினைவு கூற வேண்டும் என்று சிறப்பு விருந்தினர்கள் நினைவு கூட்டத்தில் பதிவு செய்தனர்.