27/12/2025
கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை அறிய(www.kalvikkuyil.blogspot.com)
It's Education and Employment News website. education and employement news website
27/12/2025
கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை அறிய(www.kalvikkuyil.blogspot.com)
https://www.blogger.com/blog/post/edit/5280235536546998063/7321730384888578787
Blogger Weblog publishing tool from Google, for sharing text, photos and video.
30/04/2023
டாக்டர்களின் எதிரி யார்???
* #நிலக்கடலை* தான்...
சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!
#நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!!
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
★ நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
★ இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
★ இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
★ மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
★ கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.
நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.
எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*
★ பாதாம், பிஸ்தா எந்த மூலைக்கு ஈடானது கடலைக்கு.
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது முற்றிலும் தவறானது. TV ல் வரும் வெற்று #விளம்பரங்களை நம்பி மோசம் போகாதீர்கள்..
நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...
எளிதாக கிடைப்பதனை அடுத்தவருக்கு சத்தான கடலையை தாரை வார்க்கிறோமே ஏன்???
27/06/2019
Pls visit www.kalvikkuyil.blogspot.com
கல்விக்குயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை அறிய(www.kalvikkuyil.blogspot.com)
[email protected]
Friday, November 2, 2018
T.R.B., தேர்வு - அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
'டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்.தற்போது நடந்து வரும், பகுதி நேர ஆசிரியர் பணி நியமனத்தில், போலி சான்றிதழ் புகார் எதுவுமில்லை. அவ்வாறு புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Happy Diwali wishes from kalvikkuyil
புதிய பாடத்திட்டத்தில் வருமா? செமஸ்டர் முறை! அழுத்தம் தீர்க்க எதிர்பார்ப்பு.
புதிய பாடத்திட்டத்தில் வருமா? செமஸ்டர் முறை! அழுத்தம் தீர்க்க எதிர்பார்ப்பு
பிளஸ் 1 வகுப்பில், பாடத்திட்டத்தில் அதிக பாடங்கள் உள்ளதால், மாணவர்கள் மிரள்வதாகவும், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், பாடத்திட்ட அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கலாம் எனவும், கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.மாநில கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு 'சிலபஸ்' மாற்றப்பட்டது. அடுத்த கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய சிலபஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது.மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், பல்வேறு தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. உயர்கல்விக்கு தயாராகும் வழிமுறைகளை, இப்பாடத்திட்டம் கற்று கொடுக்கிறது. ஆனால், அதிக பக்கங்கள் கொண்ட புத்தகத்தை கண்டாலே, மாணவர்கள் மிரளுவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். கலைப்பிரிவுக்கு மாற பல மாணவர்கள் தயாராகின்றனர்.பாடவேளைகள் பற்றாக்குறையால், ஆசிரியர்களுக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர்களே வகுப்பு எடுப்பதால், ஓய்வின்றி தவிக்கின்றனர். இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது, கல்வித்துறையின் தலையாய கடமையாகும்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுசெயலாளர் பிரபாகரன் கூறுகையில், '' மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் இப்பாடத்திட்டத்தில், சில குறைபாடுகள் களையப்பட வேண்டும். அறிவியல் பாடப்பிரிவு புத்தகத்தில், ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் உள்ளன. இதை படித்து, ஆண்டு இறுதித்தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு எழுதுவது சிரமம்.இது, சிறந்த பாடத்திட்டம். ஆகவே, பாடத்திட்டத்தை சுருக்காமல், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், மாணவர்கள் ஈடுபாட்டுடன் படிப்பர். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் இம்முறை மூலம், எளிதில் பரிசோதித்து மேம்படுத்த முடியும்.கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், முதல் செமஸ்டரில் மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிப்பர். இத்திட்டத்தை கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
29/09/2018
HI FRIENDS WELCOME TO KALVIKKUYIL WEBSITE PLS GO TO GIVEN THE WEBSITE LINK https://kalvikkuyil.blogspot.com/ FOR EDUCATIONS AND EMPLOYMENT NEWS