Alumini GHSS BSR News

Alumini GHSS BSR News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alumini GHSS BSR News, School, Bhavanisagar, Sathyamangalam.

21/01/2025

*இரங்கல் செய்தி*

*பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் திரு. நாகராஜ் PET அவர்களின் இல்வாழ்க்கை துணைவியார் இன்று உடல்நலமின்றி இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். 🙏🏻*

*2025ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - Model School, GHS, GH...
28/12/2024

*2025ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group - உறுப்பினர்கள் சந்திப்பில் கௌரவிக்கப்படும் - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் - அறிமுகம்.*

*மாணவர் #03*

*🌻திரு. ராஜேஷ்ரவி - அரசு மேல்நிலை பள்ளி - பவானிசாகர் 🌻*

*🌻2000 to 2007🌻*

*2025ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - Model School, GHS, GH...
26/12/2024

*2025ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group - உறுப்பினர்கள் சந்திப்பில் கௌரவிக்கப்படும் - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் - அறிமுகம்.*

மாணவர் #02

*🌻அரசு மேல்நிலை பள்ளி - பவானிசாகர் 🌻*
*🌻திரு. சந்திரன் கணேஷ்🌻*

*🌻1997-2003🌻*

*2025ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - Model School, GHS, GH...
24/12/2024

*2025ம் ஆண்டு ஜூலை மாதம் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group - உறுப்பினர்கள் சந்திப்பில் கௌரவிக்கப்படும் - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் - அறிமுகம்.*

மாணவர் #01

*🌻அரசு மேல்நிலை பள்ளி - பவானிசாகர் - 1971 to 2021🌻*

*🌻திரு. N. கரியப்பன் நஞ்சையா🌻*

*2025ம் ஆண்டு ஜூலை 04ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ள...
22/12/2024

*2025ம் ஆண்டு ஜூலை 04ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ள - பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி, பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி - ஆகிய பள்ளிகளில் முன்னர் பணிபுரிந்த ஆசிரியர் பெருமக்களை - கௌரவிக்கும் நிகழ்ச்சியில் இடம்பெறும் ஆசிரியர் பெருமக்கள் அறிமுகம்.*

*ஆசிரியர் #01*

*🌻தெய்வத்திரு. கணேசன்🌻*

*நவீன பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....கடந்த காலங்களில் பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி எப்படிப்பட்ட "ஜாம்பவான்களான" ஆசிரியப்பெருமக்களை தன்னகத்தே கொண்டிருந்ததென்று....*

*ஆம்...நவீன உலகின் எந்தவிதமான படோடபமுமின்றி.... எளிமையே உருவாய்...உலா வந்து.... வினாடிகளைக்கூட வீணடிக்காமல்....ஆக்கபூர்வமான கல்வியை... மிகவும் லாவாகமான முறையில் எங்களுக்களித்து... தன்னம்பிக்கையோடு எங்களை வாழ்வில் உயரச்செய்த ஆசிரியப்பெருமக்கள் எத்துனை எத்துனை பேர்...?!!!!*

*நாற்பது ஆண்டுகளை தாண்டிய பின்னும் அந்த ஆசிரியர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில் சூரியனின் கதிர்களைப்போல் பட்டொளிவீசி பறந்துகொண்டிருக்கிறதென்றால்.... அவர்கள் எங்களுக்களித்த அந்த கல்வியின் மகோன்னதம்தான் என்ன...?!!!!*

*அந்த வகையில் பவானிசாகர் பள்ளியின் வைரம் எங்களின் தன்னிகரில்லா ஆசிரியர் தெய்வத்திரு. கணேசன் அவர்கள்.*

*மின்னலின் வேகத்தை தாண்டிய சிந்திக்கும் திறன்.... கல்லூரி பேராசிரியர்களை விஞ்சும் அறிவாற்றல்....எண்ணி எண்ணி வியக்கவைக்கும் "ஆங்கிலப்புலமை" - இவைகளின் மொத்த உருவமே ஆசிரியர் தெய்வத்திரு. கணேசன் அவர்கள்.*

*இதற்கு மேல் எளிமையாக இருக்கமுடியாது என்று என்னும் வகையில் அமைந்த தோற்றம்...மிக வேகமான நடை...பொங்கிப்பெருகும் அருவியை போன்ற வார்த்தை பிரயோகங்கள்.... ஆம்... ஆசிரியர் அவர்களின் ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள் நிலை தடுமாறித்தான் போவோம்.... ஆசிரியரை வகுப்பில் பின்தொடருவது என்பதே எங்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் விடப்படும் மிகப்பெரிய சவால்.... அந்த சவாலை நாங்கள் போட்டி போட்டுகொண்டு சந்தோஷத்துடனே செய்வோம்.*

*அபார அறிவாற்றல் கொண்ட ஆசிரியர் அவர்கள் பாடப்பகுதியில் உள்ள விஷயங்களை விளக்குவதற்காக கொடுக்கும் உதாரணங்களை கண்டு மலைத்துப்போவோம்.... ஒவ்வொரு வகுப்பு ஆரம்பித்து முடியும்போதும் ஏறக்குறைய நாங்கள் உலகையே வலம் வந்திருப்போம்.*

*எண்ணற்ற உதாரணங்கள்...அதனுடன் கூடிய வர்ணனைகள்.... ஆங்கில வகுப்பே பிரகாசிக்கும் வகையில் "வண்ண வண்ண விண்மீன்களின் ஜொலிஜொலிப்பை" எங்களின் விழிகளுக்கு விருந்தாக படைத்திடுவார் ஆசிரியர் அவர்கள்.*

*ஆசிரியருடைய உருவத்தை வைத்து அவருடைய அறிவாற்றலை எடைபோடுவது மிக மிகக்கடினம்.*

*ஒரு உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி அவருடைய நடவடிக்கைகளை வைத்து நான் புரிந்துகொண்டேன்..... அறிவு ஞானமும், உலக அறிவும், மதி நுட்பமும் கொண்ட எவர் ஒருவரும் அது தன்னிடம் உள்ளது என்பதை தன்னுடைய வெளிப்புற நடவடிக்கைகளின் வாயிலாக வெளிப்படுத்திக்கொள்ளமாட்டார் என்ற உண்மையை அவருடைய ஒவ்வொரு நாள் நடவடிக்கைளிலும் தெரிந்துகொண்டேன்.*

*ஆசிரியர் அவர்களை ஓரிரு முறை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த சந்திப்புகளில் அவர் என்னிடம் பிரத்தியேகமாக காட்டிய கனிவும், அன்பு கலந்த உரையாடலும் என்றென்றும் மறக்கமுடியாதவை.*

*ஆசிரியரின் புதல்வர் நீதிக்கண்ணன் எங்களது பள்ளி தோழர். புலிக்குப்பிறந்தது பூனையாகுமா என்னுமளவில் மிகுந்த திறமைசாலி. இனிமையாக பழகுவார். இன்றைய நாட்களிலும் எங்களுடன் தொடர்பில் உள்ளார்.*

*ஆசிரியர் தெய்வத்திரு. கணேசன் அவர்களை விடுமுறை நாட்களில் நான் அவ்வப்போது பவானிசாகர் மார்க்கெட்டில் பார்த்ததுண்டு. அப்போது கூட அவர் பேண்ட், சட்டையிலே கம்பீரமாக காட்சி கொடுப்பார். விடுமுறை நாள் என்பதற்காக வேறு உடைகளில் அவர் வெளியே வருவதில்லை. அவரை பார்த்து கற்றுக்கொண்ட அந்த நற்பழக்கங்கள் இன்றும் எங்களை அந்த நடைமுறைகளை பின்பற்ற வைத்துக்கொண்டிருக்கிறது.*

*ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுப்பது கல்வியை மட்டும் அல்ல. தன்னுடைய அன்பான அணுகுமுறையாலும், நாகரீகமான நடை, உடை, பாவனைகளாலும் - சமுதாயத்தில் எம்மாதிரியான மதிப்பிற்குரிய வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்துவிடுகிறார்.*

*அந்த வகையில் எங்களின் இதயத்தில் பதிந்த ஆசிரியர் தெய்வத்திரு. கணேசன் அவர்களின் ஒவ்வொரு நற்கருத்துகளும், நற்சிந்தனைகளும், அறிவுக்கூர்மையும் - யதார்த்த உலகில் இன்றும், நாளையும், என்றென்றும் எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.*

Author
J. Anbarasu
Alumnus of Model School BSR
1973 to 1975
Alumnus of GHSS BSR
1979 to 1982

*Outstanding Students of GHSS BSR  #04**திரு. செந்தில்குமார்*பள்ளிப்பருவத்து செயலாக்கங்களை சுமார் 35 வருடங்களுக்கும் மேல...
09/10/2024

*Outstanding Students of GHSS BSR #04*

*திரு. செந்தில்குமார்*

பள்ளிப்பருவத்து செயலாக்கங்களை சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக இன்றுவரை நடைமுறை படுத்தி வரும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் திரு. செந்தில்குமார். எனக்கு நேரிடையாக இவரிடம் பரிச்சயம் உண்டு. திரு. செந்தில் அவர்களை பள்ளி காலத்திற்கு பிறகு (1982) இன்னும் நான் நேரில் சந்திக்கவில்லை எனினும் இந்த பதிவில் திரு. செந்தில் அவர்களை குறித்து நான் எழுதப்போவது அனைத்தும் சுமார் 42 வருடங்களுக்கு முந்தைய என் நினைவுகளே.

திரு. செந்தில் அவர்கள் என்னுடைய வகுப்பு தோழர் இல்லை எனினும் சமகாலத்தில் பள்ளியில் பயின்ற நண்பர். ஒரு பள்ளி நண்பர் சுமார் 42 வருடங்களுக்கு பிறகும் உங்களது நினைவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் எனில் - நிச்சயம் அவருடைய சில சிறப்பான குணாதிசயங்கள் உங்களை கவர்ந்திருக்கவேண்டும் என்பது உண்மை. அந்த வகையில் திரு. செந்தில் அவர்களின் சில அல்ல பல குணாதிசயங்கள் இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.

திரு. செந்தில்…. என்னுடைய பார்வையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு மாணவர் அப்போது. தமிழில் “அர்ப்பணிப்பு உணர்வு” என்ற ஒரு வார்த்தை உண்டு. அதனை இவருடைய செயல்பாடுகள் வாயிலாக நான் நன்கு உணர்ந்துள்ளேன். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களும் கிடையாது. என்னுடைய சுபாவப்படி எனது பள்ளி வாழ்க்கையில் ஒரு மாணவர் தன்னுடைய செயல்பாடுகளில் - உத்வேகத்தையும், உற்சாகத்தையும், சிரத்தையையும் காண்பிக்கிறார் எனில் - தொலைவில் இருந்தே அவரை நன்கு கவனிக்க துவங்கிவிடுவேன். அதற்கு உதாரணமாக பல மாணவர்களை கூறமுடியும் என்றாலும் - இங்கு திரு. செந்தில் அவர்களைப்பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.

பள்ளிப்பருவத்தில் இருக்கும்போது - தன்னுடைய பெற்றோர்களுக்கு தொழில் முறையில் உதவி செய்வது என்பது - எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல. ஆயினும், நிறைய மாணவர்கள் அதற்கு விதிவிலக்காக இருந்துள்ளார்கள். இப்போதும் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் திரு. செந்தில் அவர்கள் தன்னுடைய பள்ளி படிப்பு நேரம் போக - எப்போதெல்லாம் அவருக்கு ஓய்வு கிடைக்கிறதோ - அப்போதெல்லாம் அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு உதவிக்கரமாக இருந்துள்ளார். இது எவ்வளவு உன்னதமான செயல் என்பது நான் பள்ளி மாணவனாக இருந்தபோது சிறிது மட்டும் உணர்ந்தேன். ஆனால், இப்போது வாழ்க்கையை ஓரளவுக்கு வாழ்ந்து பார்த்துவிட்ட பிறகு புரிகிறது - அவர் அன்று செய்த செயல் எவ்வளவு உன்னதமானது என்று. ஆம், அவருடைய பெற்றோர்கள் - நிஜ வாழ்க்கையின் உண்மையை அவரை உணரும்படி செய்ததாலேயே - திரு. செந்தில் அவர்கள் ஒரு ஆரோக்கியமான மாணவராக தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

திரு. செந்தில் அவர்களின் பெற்றோர், அவருடைய சகோதரர் அனைவரையும் நான் அறிவேன். ஓரளவுக்கு அவர்களிடம் பழகியும் உள்ளேன். பள்ளி படிப்பில் அவர் ஒரு சராசரி மாணவருக்கு உண்டான உத்வேகத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதையும் தாண்டி - விளையாட்டு துறையில் அவர் கொடுத்த உச்ச கட்ட பரிமளிப்பு என்பதே - அவர் காலத்திய அனைத்து மாணவர்களின் மனதில் திரு. செந்தில் அவர்கள் இன்றும் நீக்கமற நிறைந்திருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

திரு. செந்தில் அவர்கள் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற காலத்தில் - *தடகள விளையாட்டுக்களில்* செய்த சாதனைகள் அளப்பறியது. அது தவிர, பூப்பந்து விளையாட்டிலும் பாராட்டிற்குரிய பரிமளிப்புகளை நிறைய கொடுத்துள்ளார். நேர பராமரிப்பில் மிகுந்த திறமைசாலி. ஒரு நாளின் 24 மணி நேரத்தை மிகச்சரியாக திட்டமிட்டு - படிப்பிற்கு, விளையாட்டிற்கு, வீட்டிற்கு - என்று சரியான விகிதத்தில் பிரித்துக்கொண்டு செயல்படுவார்.

ஹாஷ்ய உணர்வு மிக்கவர். தன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் வல்லவர். நல்ல மரியாதை தெரிந்தவர். நாங்கள் இருவரும் அதிகம் பழகியிராவிட்டாலும் - நினைத்தவுடன் மனதில் மரியாதை தோன்றும் அளவிற்கு தன்னுடைய சுபாவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டவர். எங்களுடைய சந்திப்பு பெரும்பாலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். எங்களை மறந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட நாட்கள் அவை. நாங்கள் இருவருமே விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று கோப்பையை நமது பள்ளிக்கு பெற்று கொடுத்துள்ளோம். இதில் திரு. செந்தில் அவர்கள் - தடகள விளையாட்டில் தனி விளையாட்டு வீரராகவும், பூப்பந்து விலையாட்டில் சக அணி வீரர்களுடன் இணைந்தும் அந்த வெற்றியை பெற்றுள்ளார். நான் பூப்பந்து விளையாட்டு அணியுடன் இணைந்து அந்த வெற்றியை பெற்றேன். இந்த பெருமையும், புகழும் - நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் திரு. தர்மசகாயம், உடற்பயிற்சி ஆசிரியர் திரு. நாகராஜ், உடற்பயிற்சி ஆசிரியை ஸ்ரீ. பார்வதி ஆகிய அனைவருக்கும் சேரும்.

திரு. செந்தில் அவர்கள் - தடகள விளையாட்டில் ஒரு தேர்ந்த விளையாட்டு வீரராக தன்னை உருவாக்கி கொள்வதற்கு எடுத்த பயிற்சிகள் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. திரு. செந்தில் அவர்களை நான் பள்ளி சீருடையில் பார்த்ததை விட அவருடைய தடகள பயிற்சி உடுப்பிலேயே அதிக முறை பார்த்துள்ளேன். பவானிசாகர் அண்ணா சிலை மைதானத்தில் அவர் எடுத்துக்கொண்ட அதி அற்புதமான பயிற்சிகளே பின்னாளில் அவரை ஒரு மிகச்சிறந்த தடகள விளையாட்டு வீரராக உருவாக்கியது.

பள்ளி படிப்பிற்கு பின் கல்லூரி படிப்பினை நிறைவு செய்த திரு. செந்தில் அவர்கள் தொழில்துறையில் மிகவும் சிறப்பான நிலையினை எட்டியுள்ளார். இந்த பதிவின் துவக்கத்தில் நான் எழுதியுள்ளது போல் இன்றும் விளையாட்டு துறையில் ஒரு பள்ளி மாணவரைப்போல் பரிமளிப்பை கொடுத்து வருகிறார். அவர் கடைபிடிக்கும் எளிமையும், வெளிப்படை தன்மையும் - இன்றளவும் அவரது நட்பு வட்டத்திலும், மக்கள் மத்தியிலும் ஒரு நல்ல ஆளுமையாக வலம் வர செய்துள்ளது.

காலம் கொடுத்த அனுபவங்களில் தன்னை ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக உருவாக்கிக்கொண்ட திரு. செந்தில் அவர்கள் மிக நீண்ட வருடங்களாக மேடைகளில் தன்னம்பிக்கை கொடுக்கும் உரைகளை நிகழ்த்தி வருகிறார். பிரபலமான பட்டி மன்ற பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
தொழில்துறை, விளையாட்டு துறை, இலக்கிய துறை - ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் திரு. செந்தில் அவர்கள் - இன்றும் தன்னுடைய பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் ஆரோக்கியமான நட்பை பராமரித்து வருகிறார். நண்பர் திரு. செந்தில் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை பாதையில் மென்மேலும் பல வெற்றிகள் பெற்றிட வாழ்த்தி வணங்குகிறோம்.

Author
J. Anbarasu
Admin
Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group
Alumnus of GHSS BSR
1979 to 1982

*Outstanding Students of GHSS BSR  #03**திரு. சார்லஸ் கிருபாகரன்*ஒரு பள்ளி மாணவன் இவ்வளவு மெதுவாக நடந்துவரகக்கூடாது. இன்...
04/10/2024

*Outstanding Students of GHSS BSR #03*

*திரு. சார்லஸ் கிருபாகரன்*

ஒரு பள்ளி மாணவன் இவ்வளவு மெதுவாக நடந்துவரகக்கூடாது. இன்னும் சற்று வேகமாக நடக்கவேண்டும். இது
திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் சுமார் 44 வருடங்களுக்கு முன்பு பவானிசாகர் அண்ணா சிலை மைதானத்தில் என்னிடம் கூறியது. அப்போது நான் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன். திரு. இரத்தினசபாபதி ஆசிரியர் அவர்களிடம் தனிப்பாடம் பயின்று விட்டு எனது வீட்டிற்கு பவானிசாகர் அண்ணா சிலை மைதானம் வழியாக திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் என்னை பார்த்து கூறிய வார்த்தைகளே இவை. உண்மையில் நான் மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தது உண்மை. அதனை கூர்மையாக கவனித்து என்னை அழைத்து அவர் கூறியதும் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இருப்பினும் அப்போது எனக்கு அவர் சீனியர். அவர், திருமதி. டெல்சி ஆசிரியை அவர்களின் புதல்வர் என்பதும் எனக்கு தெரியும். ஆகவே, சரிங்க அண்ணா என்று கூறிவிட்டு விரைவாக அந்த இடத்தை கடந்தேன். பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி - பள்ளி வாழ்க்கையில் என்னிடம் திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் நேரிடையாக பேசிய ஒரே ஒரு தருணம் இதுவே.

திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் - தன்னுடைய பள்ளி கல்வியை முடித்தவர். பள்ளியில் சாரணர் இயக்கத்தில் இருந்தவர். அவரை சாரணர் (Scout) உடையில் பார்த்த நினைவு உண்டு. இவரும், திருமதி. கனியம்மா ஆசிரியை அவர்களின் புதல்வர் திரு. லைனல் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள் என்பது என்னுடைய கணிப்பு. இதனை நான் எப்படி உணர்கிறேன் எனில், இருவருமே ஒரு பள்ளி மாணவன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுக்கோப்பான பல விதிகளை பின்பற்றியவர்கள். இதனை திரு. லைனல் அண்ணா அவர்களிடம் பல முறை நான் கண்டதுண்டு. இவரும் அதனையே வெளிப்படுத்துவார்.

காலங்கள் பல கடந்தும் நமது பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி - ஆகிய பள்ளிகளில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் பெருமக்களை குறித்தும், பயின்ற முன்னாள் மாணவ, மாணவியரை குறித்தும் நாம் தொடர்ந்து எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதற்கு பல்வேறு அர்த்தம் பொதிந்த காரணங்கள் உண்டு. ஏறக்குறைய 75 ஆண்டுகளை கடந்து - இன்றும் இந்த பள்ளிகள் *வெற்றி பாதையில் பவனி வந்துகொண்டிருப்பதற்கு* - அன்றைய காலத்தில் *கற்றுக்கொடுப்பதிலும்,* *கற்றுக்கொள்வதிலும்* - இவர்கள் அனைவரும் அமைத்துக்கொடுத்த பலம் வாய்ந்த, வலிமை மிக்க அஸ்திவாரமே காரணம் என்று கூறினால் - அது மிகை அல்ல.

திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்களின் இன்னும் ஒரு விசேஷமான குணாதிசயம் - கடந்த 40, 45 ஆண்டுகளுக்கும் மேலாக - நமது பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி - முன்னாள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களோடு - *நட்பு ரீதியிலான* தொடர்பினை பராமரித்து வருவது. இது உள்ளபடியே ஒரு பாராட்டுதலுக்குரிய குணாதிசயமே. நவீன காலத்தில் நேற்று நடந்தது இன்றைக்கு மாறிகொண்டிருக்கும் உலகத்தில் - தான் பயின்ற பள்ளி கால தொடர்புகளை இன்றளவும் பேணி காத்து வருவது நிச்சயம் ஒரு கொடுப்பினையே. *நிஜ வாழ்வின் நிதர்சனத்தை* புரிந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்களின் சகோதரி திருமதி. கேத்தரின் மங்களவதனி அவர்கள் எனது காலத்தில் நம் பள்ளியில் பயின்ற என்னுடைய சக வகுப்பு தோழி ஆவார். படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர். 1980 களில் நமது பள்ளி மாணவியர் மாவட்ட அளவில் டெனிகாயிட் (Ring Ball) போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை பெற்று வந்த அணியில் இடம் பெற்றவர்.

திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் தான் இங்கு பயின்ற காலத்தில் அனைத்து துறைகளிலும் மிகவும் சிறப்பான பரிமளிப்பை கொடுத்தவர். குறிப்பாக - கால்பந்து, soft ball, volleyball ஆகிய விளையாட்டுக்களில் சிறந்து விளங்கியவர். அதேபோல் தடகள போட்டிகளிலும் அற்புதமான பரிமளிப்பை கொடுத்தவர்.

இன்னும் ஒரு மிகவும் சிறப்பான செய்தி - திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்களின் தாயார் திருமதி. டெல்சி ஆசிரியை அவர்களும், திரு. லைனல் அவர்களின் தாயார் திருமதி. கனியம்மா அவர்களும் - மிகவும் நெருங்கிய தோழிகள் என்பது சிறப்பு. இந்த இரண்டு ஆசிரியர் பெருமக்களும் தங்களுடைய *அர்ப்பணிப்பு உணர்வு* நிறைந்த கல்வி போதிக்கும் திறனால் பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி, பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி - ஆகிய பள்ளிகளுக்கு *அழியாப் புகழ்* சேர்த்தனர் என்பது வரலாறு.

திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் ஒரு straight forward - person. நமது வாட்சாப் குழுவில் அவரை பெரு முயற்சிக்கு பிறகே அவரை இணைக்க முடிந்தது. தனக்கு சரி என்று படும்வரை அவ்வளவு எளிதில் ஒரு விஷயத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தற்போது அவர் நம் குழுவில் இணைந்து நம்முடன் பயணப்பட்டு வருவதை பெருமையாக கருதுகிறேன்.

தற்போது சென்னை நகரில் வாழ்ந்து வரும் திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பவானிசாகர் வந்து தன்னுடைய நட்பு வட்டங்களை பார்த்து உரையாடிவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நமது பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்துவரும் திரு. சார்லஸ் கிருபாகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

Author
J. Anbarasu
Admin
Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group
Alumnus of GHSS BSR
1979 to 1982

*Outstanding Students of GHSS Bhavanisagar  #02**திரு. தேவஜெயசீலன்*அன்புடன் நான் தேவா என்று அழைக்கும் திரு. தேவஜெயசீலன் ...
02/10/2024

*Outstanding Students of GHSS Bhavanisagar #02*

*திரு. தேவஜெயசீலன்*

அன்புடன் நான் தேவா என்று அழைக்கும் திரு. தேவஜெயசீலன் அவர்கள் - சுமார் 45 வருடத்திருக்கும் மேலான என்னுடைய நண்பர். பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்.

நம்முடைய வாழ்க்கை பாதையில் ஒரு சிலர் நம்மை மனதளவில் நெருங்குவதற்கு ஒவ்வொரு சிறப்பான காரணம் இருக்கும். அந்த வகையில் திரு. தேவஜெயசீலன் அவர்கள் வருடங்கள் பல கடந்தும் இன்றும் என்னுடைய இணைபிரியா நண்பராக இருப்பதற்கு ஒரே ஒரு முக்கியமான காரணம் அவருடைய *எளிமை.*

பள்ளியில் எனக்கு அவர் சீனியர். எங்கள் இருவரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தது *பூப்பந்து* விளையாட்டு. ஆம், திரு. தேவஜெயசீலன் அவர்கள் பூப்பந்து விளையாடுவதில் மிகச்சிறந்த வீரர். இந்த விளையாட்டை பொறுத்தவரையில் - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு placement இருக்கும். அதாவது Front Player, Back Player, Center Player - என்று Placement இருக்கும். ஆனால், திரு. தேவஜெயசீலன் அவர்களை பொறுத்தவரையில் - இவர் அனைத்து Placement களிலும் மிகச்சரியாக பொருந்தக்கூடியவர். இவருடைய விளையாட்டு நுணுக்கங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

பூப்பந்து விளையாட்டில் Drop Service எனப்படும் நெட்டை (Net) ஒட்டி போடும் ஒரு வகை சர்வீஸ் உண்டு. இந்த சர்வீஸ் போடுவதற்கு ஒரு அபார நுட்பமும், திறமையும் வேண்டும். ஏனென்றால், இந்த சர்வீஸ் எதிரில் விளையாடுபவரை திணற அடித்துவிடும். இந்த சர்வீஸ் போடுவதில் திரு. தேவஜெயசீலன் அவர்கள் மிகவும் வல்லவர். அதேபோல், பூப்பந்து விளையாட்டில் “டாஸ்” சர்வீஸ் என்று ஒரு முறை உண்டு. மிக உயரத்தில் சென்று - மிகச்சரியாக எதிர் அணியின் எல்லைக்கோட்டிற்கு அருகில் விழும். இப்படியாக இந்த சர்வீஸ் போடுவதிலும் இவர் வல்லவர்.

திரு. தேவஜெயசீலன் அவர்களின் விளையாட்டு நுணுக்கம் என்பது முற்றிலும் வித்தியாசமானது. ஆம், அதிக அலட்டல், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி - நுட்பமான முறையில் பந்துகளை எதிர் அணியினர் தொடமுடியாத இடங்களில் தொடர்ந்து போட்டு பாயிண்டுகளை அள்ளுவதில் வல்லவர். அதேபோல், எதிர் அணியினரை கட் (cut) அடிக்கவைத்தே சோர்வடைய செய்வதிலும் அபார திறமை கொண்டவர். 20 நிமிடங்கள் ஆனாலும் கூட தொடர்ந்து பந்தினை Floating செய்துகொண்டிருப்பார்.

நிச்சயம் அந்த காலகட்டத்தில் இவருடைய விளையாட்டு நுணுக்கங்களை பதிவு செய்திருந்தால் அது இப்போதைய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு நல்ல உந்துதலாக இருந்திருக்கும் என்பது உண்மை. திரு. தேவஜெயசீலன் பவானிசாகர் நகரில் உள்ள கூலீஸ் லைன் பகுதியில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வார். அவருடைய வீடு அங்கே இருந்தது. அதேபோல், அந்த காலகட்டத்தில் (1980கள்) கூலீஸ் லைனில் அற்புதமான பூப்பந்து விளையாட்டு மைதானங்கள் இருந்தன.

திரு. தேவஜெயசீலன் அவர்களிடம் நான் மிகவும் நெருங்கி பழகியது என்னுடைய பள்ளி காலத்திற்கு பிறகே. 1985ம் ஆண்டு நான் கல்லூரி படிப்பை நிறைவு செய்தபின் - பவானிசாகர் நகரில் உள்ள பகுடுதுறை நண்பர்களுடன் இணைந்து “நிக்கா டர்பினா சில்ட்ரன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்” என்னும் விளையாட்டு குழுவினை துவக்கினோம். அந்த குழு துவங்கிய நாளில் இருந்து அந்த குழு நடைமுறையில் இருந்த 1985 to 1992 வரை 07 வருடங்களும் அதனுடைய நிர்வாக பொறுப்பினை பார்த்துக்கொண்டவர் திரு. தேவஜெயசீலன் ஆவார். இவருடைய வழிகாட்டுதல் மற்றும் யோசனையின் பேரில் NTCSC கிளப் பல்வேறு வெற்றிகளை ஈட்டியது. மேலும், விளையாட்டு வீரர்களின் அறிவாற்றலை அபிவிருத்தி செய்வதற்காக பகுடுதுறை பகுதியில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி அதனை தலைமை பொறுப்பேற்று நடத்தியவர் திரு. தேவஜெயசீலன் அவர்கள்.

எங்களுடைய NTCSC கிளப் துவக்கவிழாவிற்கு நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் ஆசிரியை திருமதி. வனஜா அவர்களை அழைப்பதற்கு யோசனை கூறி அதனை செயல்படுத்தியதும் திரு. தேவஜெயசீலன் அவர்களே. மேலும், 1992 ம் ஆண்டு - பவானிசாகர் அண்ணா சிலை மைதானத்தில் NTCSC கிளப் நடத்திய மாபெரும் 07 நாள் கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தியவரும்
திரு. தேவஜெயசீலன் அவர்களே. அந்த போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் ஆசிரியை திருமதி. கனியம்மா மற்றும் பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் மருத்துவர் திரு. குருசாமி ஆகியோரை அழைத்து விழாவினை சிறப்புற செய்தவரும் திரு. தேவஜெயசீலன் அவர்களே.

வருடங்கள் இவ்வளவு கடந்தபின்னும் இப்போதும் தொலைபேசியில் அழைத்து அவ்வப்போது உரையாடுவார். பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்வார் திரு. தேவஜெயசீலன் அவர்கள். என்றும் மாறா நினைவுகளை எங்களுக்கு பரிசளித்து எளிமையின் உன்னதத்தை தன்னுடைய செயல்கள் வாயிலாக புரியவைத்து - இன்று சமுதாயத்தில் மதிப்பிற்குரிய வாழ்க்கை வாழ்ந்து நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளிக்கு பெருமையும், புகழும் சேர்த்து வரும் அன்பு நண்பர் திரு. தேவஜெயசீலன்
அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

Author
J. Anbarasu
Admin
Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group
Alumnus of GHSS BSR
1979 to 1982

*Outstanding students of GHS Bhavanisagar  #01**டாக்டர். திரு. குருசாமி*பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர், பவானிசாகர்...
28/09/2024

*Outstanding students of GHS Bhavanisagar #01*

*டாக்டர். திரு. குருசாமி*

பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர், பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்
டாக்டர். திரு. குருசாமி அவர்கள்.

பவானிசாகர் நகரில் உள்ள பகுடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்
டாக்டர். திரு. குருசாமி. தன்னுடைய பள்ளி படிப்பு முழுவதையுமே - பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளியிலும், பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளியிலும் நிறைவு செய்தவர். எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய ஊக்கம் நிறைந்த கல்வியாலும், உற்சாகம் நிறைந்த உழைப்பாலும் தான் பயின்ற பள்ளிகளுக்கு பெரும் புகழும், பெருமையும் சேர்த்தவர்.

பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளியில் பயின்றபோது - பள்ளி இறுதி தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று தனக்கு கற்று கொடுத்த ஆசிரியர் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தவர். பள்ளி இறுதி வகுப்பிற்கு பின் கோயமுத்தூர் நகரில் PUC படிப்பினை நிறைவு செய்து - கோயமுத்தூர் மருத்துவ கல்லூரியில் - மருத்துவம் பயின்று - மருத்துவரானார். இது அவர் தன்னுடைய பள்ளிக்கு மேலும் சேர்த்த புகழ் என்று கூறினால் அது மிகையாகாது.

மருத்துவ படிப்பை நிறைவு செய்த டாக்டர் திரு. குருசாமி அவர்கள் - கோயமுத்தூர் நகரிலேயே - தன்னுடைய மருத்துவ தொழிலை துவங்குவதற்கு பல வாய்ப்புகள் இருந்தும் - தன்னுடைய சொந்த ஊரான பவானிசாகர் நகரிலேயே தன்னுடைய மருத்துவர் தொழிலை துவக்கினார். இது அவருக்கு தன்னுடைய சொந்த ஊர் மீது இருந்த முழுமையான அபிமானத்தை வெளிப்படுத்துகிறது. பின்னாளில், அரசு மருத்துவ பணியில் இணைந்து - பவானிசாகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக - பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார். இது உள்ளபடியே ஒரு மகத்தான சாதனை ஆகும்.

மேலும், பவானிசாகர் நகரில் தன்னுடைய நட்பு வட்டத்துடன் இணைந்து பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். இது அவர் மனதில் இருந்த சேவை மனப்பான்மையை பிரிதிபலிக்கிறது. ஒவ்வொரு மருத்துவ முகாமிலும் தன்னுடன் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற சக மருத்துவர்களை பவானிசாகர் நகருக்கு வரவழைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார் என்பது பாராட்டிற்குரியது.

தன்னுடைய தொழில்துறை பரிமளிப்புகளை தாண்டி உள்ளூர் விளையாட்டு துறையிலும் ஈடுபட்டு சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். தான் உறுப்பினராக இருந்த பவானிசாகர் டென்னிஸ் கிளப் - செயல்பாடுகளை தன்னுடைய பங்களிப்பின் மூலம் மிகச்சிறந்த நிலைக்கு எடுத்து சென்றார். இது தவிர, உள்ளூர் விளையாட்டு போட்டிகளான கபாடி மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகள் வளர்ச்சி பெற பெருமளவில் உதவி புரிந்துள்ளார்.

தான் பயின்ற பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியாக மாற்றம் பெற்ற பின் - அங்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். இவரது தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மிகவும் சிறப்புடன் செயல்பட்டு - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியின் நிர்வாக செயல்பாடுகளை சிறந்த நிலைக்கு எடுத்து சென்றது.

அரசு பணி ஓய்வுக்கு பின் - பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை இன்றுவரை தொடர்ந்து வழங்கி வரும் டாக்டர். திரு. குருசாமி அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய - Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group - ல் நம்முடன் கரம் கோர்த்து - பயணித்துவருகிறார். டாக்டர். திரு. குருசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

Author
J. Anbarasu
Admin
Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group
Alumnus of GHSS BSR
1979 to 1982

https://chat.whatsapp.com/CyCRqdsvwmW2MwosApIkX5*Outstanding Students of GHSS - Bhavanisagar #01**பவானிசாகர் பேரூராட்சி ...
27/09/2024

https://chat.whatsapp.com/CyCRqdsvwmW2MwosApIkX5

*Outstanding Students of GHSS - Bhavanisagar #01*

*பவானிசாகர் பேரூராட்சி தலைவர்
திரு. மோகன்*

திரு. மோகன்…. இன்றைய பவானிசாகர் பேரூராட்சி தலைவர்…முன்னாள் பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர், முன்னாள் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்.

திரும்பி பார்க்கிறேன் கடந்த காலத்தை….

பல வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்…பவானிசாகர் அணைக்கட்டின் மேல்பகுதி…கோட்டை கோவில் தாண்டி வலது புறம் திரும்பி அணைக்கட்டிற்கு மேல் ஏறும் வழியில் - அணைக்கட்டிற்கு மேலே ஏறி - இடது புறம் திரும்பினால் அங்கிருந்து ஒரு 05 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். அந்த பாதையில் 03வது கிலோமீட்டரை நான் நடந்து சென்று (நடைப்பயிற்சிக்காக) கடந்து கொண்டிருக்கும்போது - அங்கிருந்த ரவுண்டானாவை ஓட்டி ஒரு ஜீப் மிதமான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் இருந்தவர் திரு. மோகன் அவர்கள். என் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்திய அவர் என்னை பார்த்து புன்முறுவலுடன்…என்ன அன்பு…இவ்ளோ தூரம் என்று கேட்க…நானும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு…நடைப்பயிற்சி வந்த விபரத்தை கூற…சரி என்று கூறி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றார். அப்போது நிச்சயம் எனக்கு தெரியாது…பின்னாளில் இவர் இப்படிப்பட்ட மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய பவானிசாகர் பேரூராட்சி தலைவராக பரிமாணம் எடுப்பார் என்று. இப்போது மனதிற்குள் அந்த சம்பவத்தை நினைத்து பார்த்து மகிழ்கிறேன். ஆம்…அவர் என்னை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் சென்றிருருக்கலாம். அல்லது வண்டியை ஓட்டிக்கொண்டே புன்னகைத்து விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அவர் செய்தது வண்டியை நிறுத்திவிட்டு என்னிடம் பேசி சென்றது. மேலோட்டமாக பார்க்கும் போது…இந்த சம்பவம் ஒரு சாதாரண விஷயமாக பட்டாலும் - நண்பர்களின் தொடர்பில் அவர் எத்தகைய நளினமான முறையினை கையாண்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

நாங்கள் இருவரும் ஒரே ஊர் என்பதால் சிறு வயது முதலே ஒருவரை ஒருவர் நன்றாக அறிவோம். ஆயினும், நெருக்கமான நண்பர்கள் என்று கூற முடியாது. சிறு வயது முதல் அவ்வப்போது சந்திக்கும்போது மரியாதை நிமித்தம் ஓரிரு வார்த்தைகளை பரிமாறிக்கொள்வதுடன் சரி. திரு. மோகன் அவர்களின் எளிமையும், வெளிப்படை தன்மையும், தன்னுடைய தொழில் மீது அவர் வைத்துள்ள பக்தியும், மக்களை மதிக்கும் தன்மையும் - ஆகிய இந்த குணங்கள் இன்று அவர் அடைந்துள்ள உயரத்திற்கு முக்கிய காரணங்கள்.

பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் திரு. மோகன் அவர்கள் பயின்றபோது படிப்பில் சிறந்து விளங்கினார். விளையாட்டிலும் ஆர்வத்துடன் பங்கு பெற்றார். குறிப்பாக பூப்பந்து விளையாட்டில் நல்ல ஆர்வம் கொண்டவர்.

தன்னுடைய தந்தையார் திரு. அங்கப்பன் அவர்கள் மீது அபார பக்தி கொண்டவர். அவருடைய வழிகாட்டுதலில் தான் ஈடுபட்டுள்ள தொழில்துறை நுட்பங்களை கற்று தேர்ந்தார். அதேபோல் தன்னுடைய சகோதரர் இடத்திலும் பேரன்பு கொண்டவர். சிறு வயது முதல் திரு. மோகன் அவர்கள் தொழில்துறையில் கொடுத்த உழைப்பை பல முறை நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவருடைய தந்தையாரிடம் நான் தொழில் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது - இவர் “கருமமே கண்ணாக” தன்னுடைய வேலையில் முழுமையாக ஈடுபட்டிருப்பார்.

நாம் வாழ்க்கையில் பெறக்கூடிய உயரங்கள் - எப்போதும் ஒரு நாள், ஒரு பொழுதில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. அது கண்ணுக்கே புலப்படாத ஒரு பயணம். நம்முடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்பு என்பது சிறுக, சிறுக நம்மை முன்னே தள்ளி - ஒரு கட்டத்திற்கு பிறகு நாமே நினைத்து பார்க்க முடியாத உயரத்திற்கு நம்மை எடுத்து சென்றுவிடும். அதற்காக நாம் கொடுக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, பொறுமை, விடாமுயற்சி - ஆகியவையே இந்த உயரத்தை தொடுவதற்கு நமக்கு பக்க பலமாய் இருப்பவை. அந்த வகையில் பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் திரு. மோகன் அவர்கள் - *பவானிசாகர் பேரூராட்சி தலைவராக* பரிமாணம் எடுத்திருப்பதோடு மட்டுமன்றி - தான் பதவி ஏற்ற நாள் முதல் மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வருகிறார். நமது பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி - தொடர்பான அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்று தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். இது உள்ளபடியே நம் பள்ளிகளின் பெருமையை இன்றைய நவீன உலகிற்கு எடுத்து செல்லும் நிகழ்வுகள் ஆகும்.

திரு. மோகன் அவர்கள் சமீபத்தில் மறைந்த எனது தந்தையார் தெய்வத்திரு. எஸ். வி. ஜெயப்பிரகாஷ் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் நன்கு அறிவேன். தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எங்களது இல்லம் வந்து எனது தந்தையாரிடம் வாழ்த்தினை பெற்று சென்றார். அதேபோல், என் தந்தையார் மறைந்த நாளன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.

சில ஆண்டுகள் முன்பு கோயமுத்தூர் நகரில் மறைந்த பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தெய்வத்திரு. பொன்னுசாமி அவர்களின் பேரனும், பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் திரு. பொன். செந்தில்நாதன் அவர்களின் மகனின் திருமண நிகழ்வில் திரு. மோகன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. குறிப்பிட்ட அந்த சந்திப்பில் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் ஆசிரியர் பெருமக்கள் திரு. பழனிசாமி தமிழ் ஐயா மற்றும் திரு. இலியாஸ்கான் ஆசிரியர் மற்றும் பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் திரு. ஷாஜு ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது திரு. மோகன் அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இப்படியாக நமது பள்ளியின் முன்னாள் மாணவர், பவானிசாகர் பேரூராட்சி தலைவர் திரு. மோகன் அவர்கள் நம் பள்ளியின் பெருமையை தன்னுடைய உழைப்பின் மூலம் உலகறிய செய்துவருகிறார். பவானிசாகர் பேரூராட்சி தலைவர்
திரு. மோகன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

Author
J. Anbarasu
Admin
Model School, GHS, GHSS Bhavanisagar Alumini Association WhatsApp Group
Alumnus of GHSS BSR
1979 to 1982

Address

Bhavanisagar
Sathyamangalam
638451

Alerts

Be the first to know and let us send you an email when Alumini GHSS BSR News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alumini GHSS BSR News:

Shortcuts

Share

Category