GHSS Melapulam

GHSS Melapulam அரசு மேல்நிலைப்பள்ளி மேலபுலம்

வாக்காளர் எழுத்தறிவு மற்றும் இன்று நம் பள்ளியில் தலைமை ஆசிரியர் டிஜி சீனிவாசன் ஐயா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது இந்த ...
22/11/2025

வாக்காளர் எழுத்தறிவு மற்றும் இன்று நம் பள்ளியில் தலைமை ஆசிரியர் டிஜி சீனிவாசன் ஐயா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் தேர்தல் நடைமுறைகள் பற்றியும் வாக்காளர்கள் அதிகமாக சேர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இதில் இருப்பால் ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக மத்திய...
27/08/2025

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
💐💐💐💐💐💐💐💐💐💐💐🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் அடல் இன்னோவேஷன் மிஷன் பாராட்டுச் சான்று வழங்கி கௌரவித்துள்ளது

மத்திய அரசின் அடல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் நிதி ஆயோக் சார்பில் இந்தியா முழுவதும் பள்ளிகளில் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் மூலமாக கடந்த 12/08/2025 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரையில் மெகா டிங்கரிங் டே என்ற தினம் கொண்டாடப்பட்டது. இது தேசிய அளவில் ஒரே நேரத்தில் ஆய்வகத்தின் வழியாக மாணவர்கள் மூலம் மாதிரிகள் உருவாக்க முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 10000 அடல் டிங்கரிங் ஆய்வகம் செயல்பட்டு வந்திருந்த நிலையில் அதில் 9467 அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் மட்டும் இந்த நிகழ்வானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் சுமார் 4,73,350 மாணவர்கள் கலந்துக்கொண்டு இந்த நேரடி பணிமனையில் பங்கேற்று சிறப்பித்து தந்தனர். இந்நிகழ்வில் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் உள்ள மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இந்நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் சார்பாக 110 மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு மாதிரிகளை உருவாக்கி தங்களது படைப்பாற்றலையும் புதுமைகளையும் மற்றும் குழு ஒருங்கிணைப்பினையும் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டினர். இந்நிகழ்வினை சிறப்பாக செய்தமைக்காககவும்,கலந்து கொண்டமைக்காகவும் பள்ளிக்கு தேசிய அளவில் ஒரு மாபெரும் அங்கீகாரத்தை நிதி ஆயோக் மற்றும் அடல் இன்னோவேஷன் மிஷன் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு மடல்களையும் அனுப்பியுள்ளது.. இந்நிகழ்வினை சிறப்பாக வடிவமைத்து தந்த வழிகாட்டி ஆசிரியரும், ATL பொறுப்பாசிரியரும் மற்றும் பயிற்சியாளருமான திரு அ. கமலக்கண்ணன் அவர்களுக்கும் இந்நிகழ்வினை தலைமை ஏற்றி வழிநடத்தி சிறப்பித்து தந்த தலைமையாசிரியர் திரு டி ஜி சீனிவாசன் ஐயா அவர்களுக்கும் மற்றும் உடன் உதவிய இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளியின் சார்பாகவும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.*

அறிவியலை வளர்ப்போம்!

அறிவியலைப் பரப்புவோம்

புதுமையை படைப்போம்*

*நன்றி

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆💐💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

16/08/2025
Tomorrow our school students going to Participate Mega tinkering Day project in Atal Tinkering lab. I wish to everyone t...
11/08/2025

Tomorrow our school students going to Participate Mega tinkering Day project in Atal Tinkering lab. I wish to everyone to record break in this All india event to make it innovative and successful day. I hope all of your dreams to come true.
Happy Tinkering Day. 💐💐💐💐💐

மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 07/08/25 இன்று போதை எதிர்ப்பு மன்றத்தின் சார்பாக 11 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்...
08/08/2025

மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 07/08/25 இன்று போதை எதிர்ப்பு மன்றத்தின் சார்பாக 11 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு போதை மருந்து தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த விழிப்புணர்வை தலைமை ஆசிரியர் திரு டி ஜி சீனிவாசன் ஐயா அவர்களும், அவலூர் காவல்துறை ஆய்வாளர் திரு சௌந்தரராஜன் அவர்களும் போதை எதிர்ப்பு மன்ற பொறுப்பாளர் திரு கமலக்கண்ணன் அவர்களும் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உடன் இருபால் ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

இந்த மாதத்தின் தேன்சிட்டு இதழ் குழந்தைகள் சிறப்பு மலராக, மாணவப் படைப்பாளர்களின் படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. அதில் நம் ...
05/11/2024

இந்த மாதத்தின் தேன்சிட்டு இதழ் குழந்தைகள் சிறப்பு மலராக, மாணவப் படைப்பாளர்களின் படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. அதில் நம் பள்ளி மாணவர் பரணிதரன் வரைந்த நேருவின் ஓவியம் அட்டையில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நம் பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் குழந்தைகளைப் பாராட்டும் வகையில், மாணவர் பரணிதரனை, பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. சீனிவாசன், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சால்வை அணிவித்துப் பாராட்டினார். மாணவர்களை ஓவியம் வரைவதில் சிறப்பாக ஊக்குவித்துச் செயல்படும் ஓவிய ஆசிரியர் திரு. ஜெயராமனுக்குப் பாராட்டு 💐

இன்றைய தமிழ் இந்துவில் நம் பள்ளி 🌻
23/05/2024

இன்றைய தமிழ் இந்துவில் நம் பள்ளி 🌻

மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி +2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றமைக்காகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சீனிவாசன் அ...
22/05/2024

மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி +2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றமைக்காகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சீனிவாசன் அவர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, முதன்மைக்கல்வி அலுவலர் உஷா, மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன் நம் பள்ளிக்குப் பாராட்டு விருதும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் அளித்து வாழ்த்திய மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு.

இராணிப்பேட்டை மாவட்டம், மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அரசு பொதுத் தேர்வில் பள்ளியில் ...
12/05/2024

இராணிப்பேட்டை மாவட்டம், மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அரசு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடம்பிடித்து, மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் வகையிலும் மற்ற மாணவ-மாணவியர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்கிற நோக்கத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாகப் பாராட்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இம்மாணவர்களுக்கு தலைகிரீடம் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் V. P.பிரகாஷ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதில் துணைத்தலைவர் N.பிரகாஷ் பொருளாளர் v.m.பார்த்திபன் கல்விக்குழு.G.நேதாஜி உறுப்பினர்கள் சக்தி சங்கர் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியர் தா. சீனிவாசன் துணை தலைமை ஆசிரியர் A.K.கமலக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் பெருமக்கள், மாணவ-மாணவியர் அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

ROAD Street
Ranipet
631052

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919524896617

Alerts

Be the first to know and let us send you an email when GHSS Melapulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GHSS Melapulam:

Shortcuts

Share

Category