04/09/2016
கூடு விட்ட பறவைகளின் கூடுகை
கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி, 1986 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.00 முதல் மதியம் 2.00
மணிவரை நடைபெற்றது. இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. முன்னாள் மாணவி லில்லி அவர்கள் முன்னுரை ஆற்ற, முன்னாள் மாணவர்கள் ஜெயபாலன், ஆசீர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.
அதன்பின் மறைந்த முன்னாள் ஆசிரியர் சேவியர் சற்குணம், சேவியர் மேக்னிஸ் ஆகியோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களைப்பற்றி சுய அறிமுகம் செய்துக்கொண்டனர். தங்களுடைய முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் அறிவுரை எவ்வாறெல்லாம் உதவியது என மாணவ மாணவியர் எடுத்துரைத்தனர்.
மாணவ, மாணவிகள் தலையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
ஆசிரியர்கள் உணர்ச்சிபூர்வமாக உரை ஆற்றினார்கள். நமது பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அரசு துறை உயர் அதிகாரிகளாகவும், கணினி துறை வல்லுனர்களாகவும், தொழிலதிபர்களாகவும், வெளிநாட்டில் பணிபுரிபவர்களாகவும், விவசாயிகளாகவும் வளர்ந்து இன்று தாம் படித்த பள்ளியின் முன் நிற்கும் போது கூடு விட்ட பறவைகளின் கூடுகை போல் உள்ளது என கூறினார்கள். மேலும், தங்களின் ஆசிரியர் பணியில் மறக்க முடியாத சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகள் எல்லா ஆசிரியர்களுக்கும் கைக்கடிகாரம் நினைவு பரிசாக வழங்கினர்.
மாணவர்கள் ராஜ்குமார், சுப்பையா அனைத்து மாணவ, மாணவிகள் சார்பாக பள்ளிக்கு ஒரு பிரிண்டர்/காப்பியரை நினைவு பரிசாக வழங்கினர்.
ஆன்றோ அவர்கள் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர், ஆசிரியைகள் :
சாமியடியான், அமலதாஸ், ராஜேந்திரன், ஜேம்ஸ், அந்தோணிராஜ், கலா, வனஜா, அருள்பிரகாசம், சுந்தர்சிங், செல்வன், செல்வராஜ், சந்திரன்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகள் :
லில்லி, ஜமிலா, எழில், அனிதா, ராதா, ஜோஸ்பின், கலைசெல்வி, பவுலின், செல்வி, தெரசா, ரஜினி, கலையரசி, சுல்தான், ஹப்சிபாய், மரிய ஸ்னாவோ, கவிதா, கிலெட்டா, ஹேமலதா, ஹசினா, தங்கராஜ், ஆசீர், ஆண்டோ, பிரபு, பாலன், பாரத், பிஸி, கிருஸ்டோபர், மீரான், ராஜ்குமார், சார்லஸ், கிரேட்டர், மைக்கேல் குமார், மணிகோபால், சுடலைமுத்து, சுப்பிரமணி, கண்ணன், மத்தியாஸ் ராஜா, இருதயா ஞானரமேஷ், வில்ப்ரேட், அந்தோணி செழியன், ராஜா, அந்தோணி ராஜா, ஜேசு மைக்கேல், சுடலை, கென்னடி, ஞான ரவி, சுரேஷ், மைக்கேல் வில்சன், முருகன், துரை, வில்சன், மைக்சேல் எடிசன், அந்தோணி எடிசன், தாகூர், ஜோசப், பனிதாசன், கணேஷ், முஜ்பர் ரஹ்மான், மைக்கேல் ஆலோன், சார்லீன், பிரசாந்த், புனிதன், செழியன், சற்குணம், ஆரோக்கியதாஸ், ஜோசப் குமார், சுப்பையா, நல்லக்குட்டி, ஜான்கென்னடி, ஸ்டெலின், திலகர், ரெக்ஸ், டேவிட், சாமுவேல், தேசிங்கு ராஜா, ஜீரோம், சுதாகர், ஜார்ஜ் டோமினிக், ஆரோக்கியகுமார், அலெக்ஸ் ப்ரானான்ட்க்ஸ், சேவியர், அகஸ்டீயன், தமிழரசு, கல்யாணி, சூசை தர்மராஜ், ஜோசப் சுரேஷ், அலோசியஸ் ஜோசப், எஸ்.ஜான்சன், ஜான்சன் துரை, பென்சிட், கார்த்தீசன், முத்தையா, இசக்கியப்பன், பால்துரை, தனசிங், தங்ககுமார், சிவகுமார், மதிசேகர், வெள்ளைத்துரை, ரமேஷ்பொன்குமார், உடையார், பீட்டர், ஜெகதீசன், கோவிந்தராஜ், ரமேஷ், முஜ்பர், அருமை துரை, பன்னீர், மாண்டோலின்,
லாரன்ஸ், அந்தோணிரவி, பொன்னுசாமி, தங்கதுரை, மூர்த்தி, சரவணன், சுதாகர்.
மாணவ மாணவியர் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் ஆசிரியர்களின் ஆசீரை பெற்றுவிட்டு, அவர்களுடன் மத்திய உணவு அருந்தி தங்களது மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர்.