Hi Tech Polytechnic College

Hi Tech Polytechnic College கல்வியே நாட்டின் முதன் அரண்

18/08/2026

🩸 ஒரு துளி இரத்தம்… ஒரு உயிரின் நம்பிக்கை! ❤️

இன்று பல உயிர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது. விபத்து, அறுவை சிகிச்சை, பிரசவம் போன்ற அவசர நேரங்களில் இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை… மனிதன் மட்டுமே வழங்க முடியும்!

அதனால், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இந்த மனிதநேயப் பணியில் இணைந்து, உங்கள் மதிப்புமிக்க இரத்தத்தை தானமாக வழங்க அன்புடன் அழைக்கிறோம். 🙏🩸

📅 தேதி: 25.08.2026
⏰ நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
📍 இடம்: ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி
📌 சமூகரெங்கபுரம், ராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்

🤝 NSS | YRC | Rotaract Club
இணைந்து நடத்தும் மாபெரும் தன்னார்வ இரத்ததான முகாம்

📞 தொடர்புக்கு: +91 84383 61846

❤️ நீங்கள் கொடுக்கும் இரத்தம்… ஒருவரின் வாழ்க்கையை மீட்டுத் தரலாம்!

👉 வாருங்கள்… இரத்ததானம் செய்வோம்!
👉 உயிரைக் காப்போம்… மனிதநேயத்தை வளர்ப்போம்!

🩺 குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கல்📅 நடைபெற்ற தேதி: 17.08.2026மாணவர்களின் உடல்...
17/08/2026

🩺 குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கல்

📅 நடைபெற்ற தேதி: 17.08.2026

மாணவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், Hi-Tech Polytechnic College-ல் 17.08.2026 அன்று குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் Albendazole (அல்பெண்டசோல்) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் Dr. G. Suresh Thangaraj Thomson அவர்களின் வழிகாட்டுதலின்படி, NSS திட்ட அலுவலர் முன்னிலையில் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், குடற்புழு தொற்றைத் தடுப்பது, தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவது, கைகளை முறையாகக் கழுவுதல், சுகாதாரமான உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கினர். 💙

Hi-Tech Polytechnic College
Students’ Health & Well-being – Our Priority 🌱

🇮🇳✨ 80-வது சுதந்திர தின வாழ்த்துகள்! ✨🇮🇳நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும், தியாகத்தையும் அர்ப்பணித்த அனைத்...
15/08/2026

🇮🇳✨ 80-வது சுதந்திர தின வாழ்த்துகள்! ✨🇮🇳

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும், தியாகத்தையும் அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமை • தேசப்பற்று • பொறுப்பு ஆகியவற்றுடன் புதிய இந்தியாவை உருவாக்குவோம். 🇮🇳

💐 அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 💐

HI-TECH POLYTECHNIC COLLEGE
சமூகரெங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம்

#சுதந்திரதினம் #சுதந்திரதினவாழ்த்துகள் #தேசப்பற்று 🇮🇳

14/08/2026

⚙️🔥 TECHNO MECH 2K26 – தொழில்நுட்பத் திறமைகளின் சங்கமம்! 🏆

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில் நடைபெற்ற TECHNO MECH 2K26 – State Level Technical Symposium சிறப்பாக நடைபெற்றது! 🎉

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 91 மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல், புதுமையான சிந்தனை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தினர். ⚙️💡

📌 நடைபெற்ற போட்டிகள்:
🔹 Paper Presentation
🔹 CAD Modelling
🔹 Technical Quiz

🏆 Overall Championship:
🥇 SCAD Polytechnic College, Cheranmahadevi

மாணவர்களின் அறிவையும் திறமையையும் ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, போட்டி உணர்வுடன் கூடிய சிறந்த தொழில்நுட்பக் கற்றல் அனுபவத்தை வழங்கிய TECHNO MECH 2K26 ஒரு வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது! 💐👏

📍 Hi-Tech Polytechnic College, Samugarangapuram
📅 14.08.2026

✨ Learn • Innovate • Compete • Succeed ✨

TECHNO MECH 2K26 – மாநில அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றனசமூகரெங்கபுரம், 14.08.2026: ஹைடெக் பாலிடெக்னி...
14/08/2026

TECHNO MECH 2K26 – மாநில அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன

சமூகரெங்கபுரம், 14.08.2026: ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில் TECHNO MECH 2K26 – State Level Technical Symposium என்ற மாநில அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள் 14.08.2026 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் மற்றும் T.T.N. கல்விக்குழுமத்தின் தலைவர் Er. T. Lawrence அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்றார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 91 மாணவர்கள் இத்தொழில்நுட்பப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இயந்திரவியல் துறைத் தலைவர் Er. T. Ramki அவர்கள், கடந்த ஆண்டு 01.08.2025 அன்று நடைபெற்ற TECHNO MECH 2K25 மாநில அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள் மற்றும் தற்போது 14.08.2026 அன்று நடைபெற்ற TECHNO MECH 2K26 போட்டிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற TECHNO MECH 2K25 நிகழ்ச்சியில் 10 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 54 மாணவர்கள் பங்கேற்றதையும், இந்த ஆண்டு TECHNO MECH 2K26 நிகழ்ச்சியில் 11 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 91 மாணவர்கள் பங்கேற்றதையும் அவர் எடுத்துரைத்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவிலான கல்லூரிகள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சி வளர்ச்சி பெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல், புதுமையான சிந்தனை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரை வழங்குதல், கணினி உதவியுடன் வரைதல் மற்றும் வடிவமைத்தல், தொழில்நுட்ப வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

ஆய்வுக் கட்டுரை வழங்குதல் போட்டியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரப் பொறியியல், தொழில்துறை 5.0 – மனிதர் மற்றும் ரோபோ இணைச் செயல்பாடு, மின்சார வாகனங்கள் மற்றும் எதிர்காலப் போக்குவரத்து உள்ளிட்ட சமகால தொழில்நுட்ப தலைப்புகளில் மாணவர்கள் தங்களது கருத்துகளையும் ஆய்வுகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

கணினி உதவியுடன் வரைதல் மற்றும் வடிவமைத்தல் போட்டியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முப்பரிமாண இயந்திரக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை இருபரிமாண பொறியியல் வரைபடங்களாக மாற்றி, முன்புறத் தோற்றம், பக்கத் தோற்றம், மேல்தோற்றம் மற்றும் தேவையான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொழில்நுட்ப வினாடி வினா போட்டி மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, பொறியியல் கருத்துகள், விரைவாகச் சிந்திக்கும் திறன் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டன.

போட்டிகளின் மதிப்பீட்டுப் பணிகளை வெளிப்புற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியல் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர். அவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்களின் திறமைகள் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன.

ஆய்வுக் கட்டுரை வழங்குதல் போட்டியில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை மாணவர்கள் S.S. வேதா விக்னேஷ் மற்றும் A.K. சிவா கௌசிகன் முதல் பரிசையும், SCAD பாலிடெக்னிக் கல்லூரி, சேரன்மகாதேவி மாணவர்கள் ஸ்ரீஹரி C மற்றும் கிளாட்வின்சம்ராஜ் R இரண்டாம் பரிசையும், அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி மாணவர் B. குபேரன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

கணினி உதவியுடன் வரைதல் மற்றும் வடிவமைத்தல் போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ரசூல் மைதீன் முதல் பரிசையும், N.M.S. காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் டோனி இரண்டாம் பரிசையும், SCAD பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அஹமத் ரியாஸ் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

தொழில்நுட்ப வினாடி வினா போட்டியில் SCAD பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அஸ்வின் மேக்மில்லன். T மற்றும் பென்னி S முதல் பரிசையும், ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சரண் S மற்றும் பாலகணேஷ் M இரண்டாம் பரிசையும், அதே கல்லூரியைச் சேர்ந்த சிவகுமார் V மற்றும் மனோகர் P மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

மூன்று போட்டிகளிலும் மாணவர்கள் பெற்ற ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் சேரன்மகாதேவி SCAD பாலிடெக்னிக் கல்லூரி TECHNO MECH 2K26-ன் Overall Championship பட்டத்தைப் பெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவில், மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மாநில அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே தளத்தில் இணைந்து தங்களது அறிவையும் திறமைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய கல்லூரியின் தலைவர் Er. T. Lawrence, கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், போட்டிகளை மதிப்பீடு செய்த பொறியியல் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 91 மாணவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்நுட்ப அறிவு, திறமை மற்றும் புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற TECHNO MECH 2K26, மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்பக் கற்றல் அனுபவமாக அமைந்தது.

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிசமூகரெங்கபுரம், ஆக.13:846 ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூ...
14/08/2026

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சமூகரெங்கபுரம், ஆக.13:
846 ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி, சமூகரெங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 13.08.2026 அன்று ராதாபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.

இப்பேரணியில் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்கேற்று, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியை ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராதாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. பொன். மீனாட்சி அரவிந்தன் அவர்கள் சிறப்புரையாற்றி, மாணவர்களும் பொதுமக்களும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் கல்வி, விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாலை நேரத்தில் சமூகரெங்கபுரம் பகுதி மக்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் நாட்டுநலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் மூலம் வழங்கப்பட்டன. இதன் மூலம் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் அதனைத் தடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நாட்டுநலப்பணித் திட்டம் (NSS), இளம் செஞ்சிலுவை சங்கம் (YRC) மற்றும் Rotaract மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வையும், போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இப்பேரணி அமைந்தது.

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிசமூகரெங்கபுரம், 10.08.2026: ஹைடெக் பாலிடெக்னிக் க...
14/08/2026

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சமூகரெங்கபுரம், 10.08.2026: ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) மற்றும் ரோட்டராக்ட் கிளப் சார்பில், மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் கலந்து கொண்டு, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து, போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, போதைப் பொருட்களைத் தவிர்ப்போம் என்றும், போதை இல்லா சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாணவர்களிடையே போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொறுப்பான மற்றும் போதை இல்லாத இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

06/08/2026

⚙️ Mechanical Engineering Industrial Visit 2026 | Munnar | Kochi | Marayoor | Hi-Tech Polytechnic College

திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரத்தில் அமைந்துள்ள ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியின் அடிப்படைப் பொறியியல் துறை சார்பில்...
06/08/2026

திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரத்தில் அமைந்துள்ள ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியின் அடிப்படைப் பொறியியல் துறை சார்பில் 2026-ஆம் ஆண்டிற்கான துவக்கவிழா மற்றும் மாணவர் சங்கத் தொடக்க விழா 06.08.2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து இறை வணக்கம் இடம் பெற்றது. முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி முத்து வேணுகா. E வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் G. சுரேஷ் தங்கராஜ் தாம்சன் தலைமையுரையாற்றி, தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், புதுமை சிந்தனை மற்றும் திறன் மேம்பாட்டின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. P. முருகன் சிறப்புரையாற்றி, மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் இலக்குடன் செயல்பட்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என ஊக்கமளித்தார்.

பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை ஆசிரியர் திரு. M. மதன்குமார் சிறப்புரையாற்றி, தொழில்நுட்ப அறிவுடன் தொடர்புத் திறன், தலைமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவை மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இறுதியாக முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி முத்தழகி C. நன்றியுரையாற்றினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை மாணவ, மாணவியர்களும் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Address

Samugarangapuram
Radhapuram
627112

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919566556744

Alerts

Be the first to know and let us send you an email when Hi Tech Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hi Tech Polytechnic College:

Shortcuts

Share