18/05/2025
பட்டிவீரன்பட்டி
லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி
பட்டிவீரன்பட்டி, மே.18-
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த சுதிரா என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்களும், சாதனா என்ற மாணவி 500க்கு 490 மதிப்பெண்களும், தியா என்ற மாணவி 500க்கு 488 மதிப்பெண்களும்,கோகுல் என்ற மாணவர் 500க்கு 485 மதிப்பெண்களும், அக் ஷயா என்ற மாணவி 500க்கு 485 மதிப்பெண்களும், அர்ச்சனா என்ற மாணவி 500க்கு 478 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாநில, மாவட்ட அளவிலும், பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் திரு.விஜயசாரதி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கிருஷ்ணவேணி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.