06/08/2026
Cauvery Delta Rail Users Dream:
காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி வழியாக சீர்காழியை இணைக்கும் ஒரு நேரடி கடலோர இரயில் பாதை தான் காவிரி டெல்டா மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம் என்பது உங்களுக்கு தெரியுமா? 🚆🌊
1️⃣ சீர்காழி – காரைக்கால் புதிய இரயில் பாதை:
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை திருவாரூர் வழியாக சுற்றி கொண்டு செல்லாமல், சீர்காழிக்கு நேரடியாக கொண்டு செல்லவே இந்த பாதை முதன்முதலில் ஆய்வு (Survey) செய்யப்பட்டது. ஆனால், தெற்கு இரயில்வே குறுகிய பாதையான பேரளம் - காரைக்கால் பாதையை சீரமைக்க முன்னுரிமை அளித்ததால், இந்த திட்டம் அப்படியே முடங்கியது. தற்போதைய சூழலில் இந்த பாதை வருவது கடினம் தான் என்றாலும், எதிர்காலத்தில் வலுவான அரசியல் விருப்பம் (Political Will) இருந்தால் இது மீண்டும் சாத்தியமாகலாம்!
2️⃣ மயிலாடுதுறை – தரங்கம்பாடி (MV-TBQ) பழைய பாதை மீட்பு:
முன்பு பயன்பாட்டில் இருந்து பின்னர் மூடப்பட்ட மயிலாடுதுறை – தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதையின் நிலம் இன்னமும் இரயில்வே வசமே உள்ளது. தமிழக அரசு நில எடுப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கு உதவி செய்தால், இந்த பாதையை மீண்டும் எளிதாக அமைக்க முடியும். இது சாத்தியமானால், புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருக்கடவூர் இரயில்வே வரைபடத்தில் இணைந்து பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்! 🛕🚂
3️⃣ சீர்காழி NLC அனல்மின் திட்டம் (UMPP) & துறைமுகம்:
சீர்காழி அருகே NLC நிறுவனம் அமைக்க திட்டமிட்டிருந்த மாபெரும் அனல்மின் திட்டம் (UMPP) மட்டும் வந்திருந்தால், அதற்காக தனியாக ஒரு நிலக்கரி இறக்குமதி துறைமுகமும் (Captive Jetty), சீர்காழியுடன் இணைக்கும் பிரத்யேக இரயில் பாதையும் (Railway Siding) உருவக்கப்பட்டிருக்கும். ஆனால், நில எடுப்பு சிக்கல்கள் மற்றும் சுற்றுசூழல் காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எது எப்படியோ... சீர்காழியில் இருந்து திருக்கடவூர் வழியாக காரைக்காலை இணைக்கும் இந்த கடலோர இரயில் பாதை நிஜமாக வேண்டும் என்பதே காவிரி டெல்டா மக்களின் மாபெரும் கனவாக இன்றளவும் இருந்து வருகிறது! 🌾📍