05/07/2026
எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்கும் அர்த்தமுள்ள சந்திப்பு…
கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற மாணவர் அமைச்சர்கள், பள்ளி கேப்டன்கள் மற்றும் துணைக் கேப்டன்களுடன் பள்ளியின் தலைவர், தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்ட முதல் கலந்துரையாடல் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் பள்ளியின் ஒழுங்குமுறை, கல்வித் தர மேம்பாடு, மாணவர்களின் தலைமைத்துவத் திறன் வளர்ச்சி, பள்ளியின் எதிர்கால முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
மாணவர்கள் தங்களது கருத்துகளையும், புதிய யோசனைகளையும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து, பொறுப்புணர்வையும் சமூக அக்கறையையும் உருவாக்கும் இத்தகைய சந்திப்புகள், சிறந்த குடிமக்களை உருவாக்கும் கல்வியின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே நவீன கட்டமைப்பு, தரமான கல்வி, சிறந்த கற்றல் சூழல் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான சகல வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி திகழ்வதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
"இன்றைய மாணவர் தலைவர்கள்… நாளைய சிறந்த சமூகத் தலைவர்கள்." என்ற உயரிய இலக்குடன், மாணவர்களின் கனவுகளையும் திறமைகளையும் நனவாக்கும் பயணத்தை கவினா பள்ளி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.