27/09/2024
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் இன்று (26.09.2024) சி.எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாமில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. உட்பட பலர் உள்ளனர்.