Sufi Payanam Foundation

Sufi Payanam Foundation Sufi Wisdom | Heart Awakening | Inner Journey
Soulful Sufi talks & reflections. Watch full videos on YouTube
https://youtube.com/?si=1tMTm

புற உலகில், உங்களைச் சுற்றி பல அடுக்குகள் இருக்கலாம் — உறவுகள், பொறுப்புகள், பணிகள், பெயர், நிலை, எண்ணங்கள், அடையாளங்கள்...
23/08/2026

புற உலகில், உங்களைச் சுற்றி பல அடுக்குகள் இருக்கலாம் — உறவுகள், பொறுப்புகள், பணிகள், பெயர், நிலை, எண்ணங்கள், அடையாளங்கள் என…

பொருள் உலகத்தின் எல்லைகளைத் தாண்டி, ஆன்மாவின் அந்த அமைதியான நிலையில் நாம் சந்திப்போம்.





ஒரு வாசகரின் அனுபவம்.இந்தப் புத்தகம் ஒரு சாதாரண ஆன்மீகப் புத்தகமாக எனக்குத் தோன்றவில்லை. இதைப் படிக்கும்போது, ஆன்மீகம், ...
22/08/2026

ஒரு வாசகரின் அனுபவம்.

இந்தப் புத்தகம் ஒரு சாதாரண ஆன்மீகப் புத்தகமாக எனக்குத் தோன்றவில்லை. இதைப் படிக்கும்போது, ஆன்மீகம், சூஃபித்துவம், இறைநம்பிக்கை, மனித உள்ளம் மற்றும் நம்முடைய வாழ்க்கையின் உண்மையான நோக்கம் பற்றிய பல கேள்விகள் என் மனதில் எழுந்தன. அதே நேரத்தில், நான் ஏற்கனவே மனதில் வைத்திருந்த சூஃபித்துவம் தொடர்பான பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் ஆழமான விளக்கங்களையும் சிந்திக்க வைக்கும் பதில்களையும் கண்டேன்.

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம், இதில் குறிப்பிடப்பட்ட சில சம்பவங்கள் என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சில சம்பவங்களுடன் மிகவும் ஒத்திருந்தது. சில சம்பவங்களில், நடந்த நிகழ்வுகளின் காலகட்டமும் கூட ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்திருந்தது. அதனால், இந்தப் புத்தகம் வெறுமனே நான் வாசித்த ஒரு புத்தகமாக இல்லாமல், என் சொந்த வாழ்க்கையையும் அனுபவங்களையும் பிரதிபலிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போதும், சில இடங்களில் நின்று சிந்திக்க வேண்டியிருந்தது. சில கருத்துகள் என்னை என்னைப் பற்றியும், என் வாழ்க்கையைப் பற்றியும், ஆன்மீகப் பயணத்தைப் பற்றியும் ஆழமாக சிந்திக்க வைத்தன. குறிப்பாக சூஃபித்துவத்தின் ஆழமான கருத்துகள் மற்றும் ஆன்மீக அனுபவங்களை இந்தப் புத்தகம் எடுத்துரைத்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

மொத்தத்தில், இந்தப் புத்தகம் எனக்கு ஒரு வாசிப்பு அனுபவமாக மட்டும் இல்லாமல், ஒரு சிந்தனைப் பயணமாகவும், ஆன்மீகத் தேடலாகவும் அமைந்தது. நான் மனதில் வைத்திருந்த பல கேள்விகளை மீண்டும் சிந்திக்க வைத்ததுடன், சில கேள்விகளுக்கு புதிய கோணத்தில் பதில்களையும் வழங்கியது. சில சம்பவங்கள் என் சொந்த அனுபவங்களுடன் ஒத்துப்போனது இந்தப் புத்தகத்துடனான எனது தொடர்பை மேலும் ஆழப்படுத்தியது.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, சூஃபித்துவத்தையும் ஆன்மீகத்தையும் இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களுக்கும், சூஃபித்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், தங்களைத் தாங்களே சிந்திக்கவும் ஆராயவும் விரும்புபவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வாசிப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

— Kaleel Jibran



“உங்கள் நோக்கம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில்,இறைவனுடைய அனைத்துப் படைப்புகளும்உங்களுக்கு உதவத் தொடங்கும்;உங்கள் லட்சிய...
22/08/2026

“உங்கள் நோக்கம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில்,
இறைவனுடைய அனைத்துப் படைப்புகளும்
உங்களுக்கு உதவத் தொடங்கும்;
உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக.”

— NOORUL HASSAN





“எந்த அளவுக்கு மற்றவர்களுக்காக உங்களை நிலைநிறுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்குள் இருக்கும் உயிரோட்டம் குறை...
20/08/2026

“எந்த அளவுக்கு மற்றவர்களுக்காக உங்களை நிலைநிறுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்குள் இருக்கும் உயிரோட்டம் குறைந்து விடும்.”





19/08/2026

டாக்டர் கபிலன் அவர்கள் பரிந்துரைக்கும் “நூர்” 📖✨

“NOOR – ஒரு சாமானியனின் இறை உணர்வு அனுபவங்கள்”
ஆன்மீகத் தேடல், இறை உணர்வு மற்றும் உள்ளார்ந்த மாற்றத்தைப் பற்றிய ஒரு அனுபவப் பயணம்.

ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது வெறும் வார்த்தைகளை வாசிப்பதல்ல…
சில நேரங்களில் அது நம்மையே நாம் சந்திக்கும் ஒரு பயணமாக மாறுகிறது. 🤍

🙏 டாக்டர் கபிலன் அவர்களின் அன்பான பரிந்துரைக்கு நன்றி.

📖 NOOR – ஒரு சாமானியனின் இறை உணர்வு அனுபவங்கள்
✍️ Noorul Hassan

TamilBooks TamilBook TamilAuthor SpiritualBook SpiritualJourney IraiUnarvu ஆன்மீகம் இறைஉணர்வு சூஃபித்துவம் Sufism Tasawwuf SufiPayanam TamilSpirituality SpiritualAwakening BookLovers TamilBookLovers MustRead BookReview TamilLiterature

“தொழுகையில் அவன் உயர்நிலையை அடைகிறான்.தொழுகையை முடித்துவிட்டு,அன்றாடக் கடமைகளுக்குள் திரும்பும்போதுஅந்த உயர்நிலையிலிருந்...
18/08/2026

“தொழுகையில் அவன் உயர்நிலையை அடைகிறான்.
தொழுகையை முடித்துவிட்டு,
அன்றாடக் கடமைகளுக்குள் திரும்பும்போது
அந்த உயர்நிலையிலிருந்து கீழிறங்கி
தன் செயல்களைச் செய்கிறான்.

ஆனால்,
அந்தத் தொழுகையின் அதிர்வு
அவனை விட்டு விலகுவதில்லை.

அவன் செல்லும் இடமெல்லாம்
ஒரு இறை அதிர்வாகவும்,
ஒரு பாதுகாப்பாகவும்,
ஒரு தெய்வீக உணர்வாகவும்
அவனுக்குள் அது தொடர்ந்து இயங்குகிறது.

அதனால்,
அவன் செய்யும் சாதாரணச் செயல்களுக்குள்ளும்
ரஹ்மானியத் இறங்கத் தொடங்குகிறது.

தொழுகை என்பது
சில நிமிடங்கள் இறைவனிடம் நிற்பது மட்டுமல்ல;
அந்த நிமிடங்களில் பெற்ற இறைநிலையை
வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்குள்ளும்
கொண்டு வருவதுதான்.”





Address

Nagore
611002

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Payanam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category