30/09/2021
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் மற்றும்
அவனது தூதருக்கு ﷺ கட்டுப்படுதல் :
பகுதி -1⃣
﴿يا أَيُّهَا الَّذينَ آمَنوا أَطيعُوا اللَّهَ وَأَطيعُوا الرَّسولَ وَأُولِي الأَمرِ مِنكُم فَإِن تَنازَعتُم في شَيءٍ فَرُدّوهُ إِلَى اللَّهِ وَالرَّسولِ إِن كُنتُم تُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الآخِرِ ذلِكَ خَيرٌ وَأَحسَنُ تَأويلًا﴾ [النساء: ٥٩]
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், (அவனது) தூதருக்கும் இன்னும் உங்களில் அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கட்டுப்படுங்கள், ஆனால் நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விடயத்தில் நீங்கள் கருத்து முரண்பட்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள், அதுதான் நல்ல(பயனுள்ள)தாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59)
📚 #விளக்கம்:
📜 அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் :
﴿أَطيعُوا اللَّهَ﴾
🖊️ நாம் எம்மைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக்கட்டுப்பட வேண்டும். அதன் அர்த்தம்: அவன் ஏவிய விடயங்களைக் கடைபிடித்தும், தடுத்த விடயங்களில் இருந்து தவிர்ந்தும் நடக்க வேண்டும்.
📜 அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு கட்டுப்படுதல் :
﴿وَأَطيعُوا الرَّسولَ﴾
🖊️ அவனது தூதரான நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கும் நாம் கட்டுப்பட வேண்டும். அவர்கள் எமக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தந்து எம்மை பண்படுத்துவதற்காக அல்லாஹு தஆலா அவர்களை தூதராக தேர்வு செய்திருக்கின்றான். அவர்களுக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதற்கு சமமாகும். அவர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும். அல்குர்ஆன் மாத்திரமே போதும் நபிகளாரின் வழிமுறை தேவையில்லை என்று வாதிடும் வழிதவறியவர்களிற்கு இந்த வசனம் மறுப்பாக அமைந்திருக்கிறது. அல்லாஹ்விற்கு மாத்திரம் வழிப்படுங்கள் என்று சொல்லாமல் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. அல்லாஹு தஆலா நபி ﷺ அவர்களுக்கு அவனது வேதமான அல்குர்ஆனையும் 'ஹிக்மத்' எனும் ஞானத்தையும் இறக்கி அருளியிருப்பதாகவும் அவற்றை அவர்கள் கற்றுக்கொடுத்து மக்களைப் பண்படுத்துவதாகவும் அல்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அங்கு 'ஹிக்மத்' (ஞானம்) என்பது குர்ஆன் அல்லாத மேலதிகமான ஒரு விடயத்தை குறிக்கிறது. எனவே நபி ﷺ அவர்கள் குர்ஆனுக்கு மேலதிகமாக சில விடயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். (பார்க்க: அல்குர்ஆன் 2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 62:2) அதனை நாம் 'ஸுன்னா' என்று அழைக்கின்றோம். இதனை மறுப்பவர் அல்-குர்ஆனை மறுப்பவராவார்.
அதேபோன்று அல்குர்ஆனை தெளிவுபடுத்தும் பணியும் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க: அல்குர்ஆன் 16:44) அவர்கள் தமது சொல்லாலும் செயலாலும் அல்குர்ஆனை தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதனையும் நாம் 'ஸுன்னா' என்று சொல்கின்றோம்.
💡மார்க்க கல்விக்கான ஓர் ஸலஃபி கற்கைக்கூடம் - SUNNAH ACADEMY :
https://t.me/sunnah_academy