MUSLIM ADMIN MEDIA

MUSLIM ADMIN MEDIA Al-Quran and As-Sunnah on Methodology of Salaf Al-Ummah

 #முஹம்மதுர்_ரஸுலுல்லாஹ் (ஸல்லல்லாஹு 'அலைஹிவ ஸல்லம்) Follow us :https://t.me/muslim_admin_media(القرآن والسنة على فهم ال...
13/01/2022

#முஹம்மதுர்_ரஸுலுல்லாஹ் (ஸல்லல்லாஹு 'அலைஹிவ ஸல்லம்)

Follow us :
https://t.me/muslim_admin_media
(القرآن والسنة على فهم الصحابة رضي الله عنهم)

31/12/2021

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم
_____________________

#புத்தாண்டை_முன்னிட்டு_வாழ்த்துத்_தெரிவிப்பது_கூடுமா!!??

ஸவூதி அரேபியா உலமா சபையின் பதில் உங்களுக்கு மத்தியில்....

📩கேள்வி: முஸ்லிம் அல்லாதவர்களுக்கு (ஆங்கில) புத்தாண்டை முன்னிட்டும், இன்னும் (ஹிஜ்ரி) புத்தாண்டை முன்னிட்டும் வாழ்த்துத் தெரிவிப்பது அனுமதிக்கப்பட்ட செயலா..?????

பதில்: இத்தகைய வைபவங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது கூடாது; ஏனெனில் நிச்சயமாக இத்தகைய (கொண்டாட்டங்களைக்) கொண்டு வரவேற்புச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.

📜 ஃபத்வா இலக்கம் : 20795

✏️... தமிழாக்கம்: உஸ்தாத். அபூ உஸாமா ஸைத் இப்னு ரௌனக் அஸ்-ஸைலானீ.
(மாணவர், தாருல் ஹதீஸ் - தம்மாஜ், யமன்)
1443/05/25
2021/12/29

23/12/2021

#அரபு_நாட்டு_சீரழிவும்..!
#நமது_நிலைப்பாடும்..!

🎙 உரை : அஷ்-ஷெய்க், முஃப்தீ உமர் ஷெரிஃப் காஸிமி حفظه الله
[குர்ஆன்- ஸுன்னா பணியாளர், தாருல் ஹுதா - சென்னை, தமிழ்நாடு]

To listen audio ⬇️
https://t.me/muslim_admin_media/353

📝 உள்ளடக்கம் :

1) ஆட்சியாளர்கள் தவறிழைக்கும்போது பொதுமக்களாகிய நம்முடைய கடமை என்ன..?

2) பொதுவெளியில் ஆட்சியாளரை விமர்சிக்கலாமா..?

3) ஆட்சியாளர்களின் தவறை அங்குள்ள உலமாக்கள் அனுமதித்தார்களா.?

4) பின்விளைவை கருத்தில் கொள்ளாமல், ஒரு தீமையை தடுக்கச் செல்ல முடியுமா..?
இவ்விடயத்தில் உலமாக்கள் கூறும் வரையறை என்ன.?

இன்'ஷா அல்லாஹ்...
ஆடியோவை கேட்டு தெளிவு பெறுங்கள்

28/11/2021

📩 கேள்வி : "அல்-வாகிஆ" எனும் அத்தியாயத்தை ஒவ்வொரு இரவிலும் ஓதினால் வறுமை நீங்குமா..??

==========================

📝 பதில் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள் :

"அல்-வாகிஆ" எனும் அத்தியாயத்தை ஒவ்வொரு நாளும் யார் ஓதுவாரோ, அவருக்கு ஒருபோதும் வறுமை ஏற்பட மாட்டாது‌.

📖 நூல் :
👈"فضائل القرآن" لأبي عبيد القاسم بن سلام (ص 257)
👈 "فضائل الصحابة" للإمام أحمد (2/726)
👈 "عمل اليوم والليلة" لابن السني (680)
👈 "شعب الإيمان" للبيهقي (4/119)

மேற்கண்ட ஹதீஸானது ஆதாரப்பூர்வமற்ற செய்தியாகும். எனவே இதனை அமல்படுத்த முடியாது.

📌இந்த ஹதீஸ் பலகீனம் என்று தீர்ப்பு வழங்கிய உலமாக்கள் :

1️⃣ இமாம் அஹ்மத் அவர்கள்.
👈 "المنتخب من علل الخلال" لابن قدامة (ص 116)

2️⃣ இமாம் தாரகுத்னி அவர்கள்.
👈 "المؤتلف والمختلف" (3/1475)

3️⃣ இமாம் இப்னு ஹஜர் அவர்கள்.
👈 "نتائج الأفكار" (3/263,264)

4️⃣ இமாம் அபூ ஹாதிம், அல்-பைஹகி, இப்னுல் ஜௌஸி போன்ற உலமாக்கள்.
👈 "تخريج أحاديث الكشاف" (3/413)

5️⃣ இமாம் ஷௌகானி அவர்கள்.
👈 "الفوائد المجموعة" (311)

6️⃣ இமாம் அல்பானி அவர்கள்.
👈 "السلسلة الضعيفة" (290)

7️⃣ ஸஊதியின் மார்க்க தீர்வுகளுக்கான நிரந்தர சபை:-
(அல்-லஜ்னதுத் தாஇமா லில் இப்தா)

(( யாஸீன், புஸ்ஸிலத், அத்துஹான், அல்வாகிஆ போன்ற அத்தியாயங்களின் சிறப்புகளை அறிவிக்கும் எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் கிடையாது. ))
👈 "اللجنة الدائمة للإفتاء" (2/340)
8️⃣ இன்னும் பல உலமாக்கள்

📜தொகுப்பு : அஷ்ஷெய்க். அபூ அப்திர்-ரஹ்மான் அஸ்ஹர் அபூஹனீபா (அப்பாஸி, மதனி)

04/10/2021

தஃப்ஸீர் - அல்குர்ஆன் விளக்கம் (📖 அல்குர்ஆன் 4:59)

பகுதி 2⃣

முஸ்லிம் ஆட்சியாளருக்கு கட்டுப்படுதல் :
﴿وَأُولِي الأَمرِ مِنكُم﴾

﴿يا أَيُّهَا الَّذينَ آمَنوا أَطيعُوا اللَّهَ وَأَطيعُوا الرَّسولَ وَأُولِي الأَمرِ مِنكُم فَإِن تَنازَعتُم في شَيءٍ فَرُدّوهُ إِلَى اللَّهِ وَالرَّسولِ إِن كُنتُم تُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الآخِرِ ذلِكَ خَيرٌ وَأَحسَنُ تَأويلًا﴾ [النساء: ٥٩]
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், (அவனது) தூதருக்கும் இன்னும் உங்களில் அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கட்டுப்படுங்கள், ஆனால் நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விடயத்தில் நீங்கள் கருத்து முரண்பட்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள், அதுதான் நல்ல(பயனுள்ள)தாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59)

📚 விளக்கம்:

🖊️ உங்களிலுள்ள ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது. 'உங்களிலுள்ள' என்பதன் அர்த்தம் முஃமின்களிலுள்ள என்பதாகும். ஏனெனில், முஃமின்களை விழித்தே இந்த ஆயத் ஆரம்பமாகிறது. முஸ்லிம்கள் அவர்களது ஆட்சித் தலைவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் அதிகமாக வலியுறுத்தியுள்ளது. இதனால் சமூக ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

அல்லாஹ் மற்றும் அவனது தூதர் அல்லாதவர்களுக்கு கட்டுப்படும் விடயத்தில் மேலதிகமான ஒரு நிபந்தனையை இஸ்லாம் வகுத்துள்ளது. அதுதான் பாவமான விடயத்தில் அவர்களுக்கு கட்டுப்பட முடியாது என்பதாகும். 'படைத்த அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விடயத்தில் படைக்கப்பட்ட எவருக்கும் கட்டுப்பட முடியாது' என்பதை நபி ﷺ அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ஆயத் இறங்கியதற்கான سَبَبُ النُّزُوْل பின்னணியும் இதனை தெளிவுபடுத்துகின்றது. அதாவது நபி ﷺ அவர்கள் ஒரு சிறு படையை அனுப்பி வைத்தார்கள். அதற்கு ஒருவரைத் தலைவராக - அமீராக நியமித்தார்கள். அவருக்குக் கட்டுப்படவேண்டும் என்றும் கூறினார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனக்குக் கீழ் உள்ளவர்களோடு ஏற்பட்ட ஒரு கோபத்தின் காரணமாக நெருப்பை மூட்டுமாறு கூறினார். பின்னர் அந்த நெருப்பினுள் பாயுமாறு கூறினார். நீங்கள் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. நாம் (நரக) நெருப்பிலிருந்து தப்புவதற்காகத்தான் நபி ﷺ அவர்களை ஏற்றுக்கொண்டோம்; நெருப்புக்குள் நாம் போவதற்கு விரும்பவில்லை என்று கூறினார்கள். இந்த செய்தியை நபியவர்களிடம் வந்த பிறகு அவர்கள் எடுத்துரைத்தார்கள். நபி ﷺ அவர்களும் அவர்களின் இச்செயலை சரிகண்டார்கள். 'அந்த நெருப்பினுள் நீங்கள் நுழைந்திருந்தால் அதிலிருந்து உங்களால் வெளியேறியிருக்க முடியாது' என்றும் 'பாவமில்லாத நல்ல விடயத்தில் தான் கட்டுப்பட வேண்டும்' என்றும் கூறினார்கள். இந்த சம்பவத்தின் விடயத்தில் தான் இந்த ஆயத்தும் இறங்கியது.
(பார்க்க: புகாரி 7145, முஸ்லிம் 1840)
இதனால்தான் இந்த ஆயத்தில்
﴿فَإِن تَنازَعتُم في شَيءٍ فَرُدّوهُ إِلَى اللَّهِ وَالرَّسولِ﴾
நீங்கள் கருத்து முரண்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனது தூதரின் பக்கமும் அதனைக் கொண்டு செல்லுங்கள் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் தவிர்ந்த, ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படும்போது கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டால் அதற்குரிய தீர்வை அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனிலும் அவனது தூதர் ﷺ அவர்களின் ஸுன்னாவிலும் பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு மாற்றமாக ஆட்சியாளருக்குக் கட்டுப்பட முடியாது.

💡குர்ஆன் ஸுன்னாவை முறையாக கற்பதற்கான ஸலஃபி கற்கைகூடம் :
https://t.me/sunnah_academy

30/09/2021

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் மற்றும்
அவனது தூதருக்கு ﷺ கட்டுப்படுதல் :

பகுதி -1⃣

﴿يا أَيُّهَا الَّذينَ آمَنوا أَطيعُوا اللَّهَ وَأَطيعُوا الرَّسولَ وَأُولِي الأَمرِ مِنكُم فَإِن تَنازَعتُم في شَيءٍ فَرُدّوهُ إِلَى اللَّهِ وَالرَّسولِ إِن كُنتُم تُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الآخِرِ ذلِكَ خَيرٌ وَأَحسَنُ تَأويلًا﴾ [النساء: ٥٩]
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், (அவனது) தூதருக்கும் இன்னும் உங்களில் அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கட்டுப்படுங்கள், ஆனால் நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், ஏதாவது ஒரு விடயத்தில் நீங்கள் கருத்து முரண்பட்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள், அதுதான் நல்ல(பயனுள்ள)தாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.

(அல்குர்ஆன் : 4:59)

📚 #விளக்கம்:

📜 அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் :
﴿أَطيعُوا اللَّهَ﴾
🖊️ நாம் எம்மைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக்கட்டுப்பட வேண்டும். அதன் அர்த்தம்: அவன் ஏவிய விடயங்களைக் கடைபிடித்தும், தடுத்த விடயங்களில் இருந்து தவிர்ந்தும் நடக்க வேண்டும்.

📜 அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு கட்டுப்படுதல் :
﴿وَأَطيعُوا الرَّسولَ﴾
🖊️ அவனது தூதரான நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கும் நாம் கட்டுப்பட வேண்டும். அவர்கள் எமக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தந்து எம்மை பண்படுத்துவதற்காக அல்லாஹு தஆலா அவர்களை தூதராக தேர்வு செய்திருக்கின்றான். அவர்களுக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதற்கு சமமாகும். அவர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும். அல்குர்ஆன் மாத்திரமே போதும் நபிகளாரின் வழிமுறை தேவையில்லை என்று வாதிடும் வழிதவறியவர்களிற்கு இந்த வசனம் மறுப்பாக அமைந்திருக்கிறது. அல்லாஹ்விற்கு மாத்திரம் வழிப்படுங்கள் என்று சொல்லாமல் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. அல்லாஹு தஆலா நபி ﷺ அவர்களுக்கு அவனது வேதமான அல்குர்ஆனையும் 'ஹிக்மத்' எனும் ஞானத்தையும் இறக்கி அருளியிருப்பதாகவும் அவற்றை அவர்கள் கற்றுக்கொடுத்து மக்களைப் பண்படுத்துவதாகவும் அல்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அங்கு 'ஹிக்மத்' (ஞானம்) என்பது குர்ஆன் அல்லாத மேலதிகமான ஒரு விடயத்தை குறிக்கிறது. எனவே நபி ﷺ அவர்கள் குர்ஆனுக்கு மேலதிகமாக சில விடயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். (பார்க்க: அல்குர்ஆன் 2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 62:2) அதனை நாம் 'ஸுன்னா' என்று அழைக்கின்றோம். இதனை மறுப்பவர் அல்-குர்ஆனை மறுப்பவராவார்.

அதேபோன்று அல்குர்ஆனை தெளிவுபடுத்தும் பணியும் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க: அல்குர்ஆன் 16:44) அவர்கள் தமது சொல்லாலும் செயலாலும் அல்குர்ஆனை தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதனையும் நாம் 'ஸுன்னா' என்று சொல்கின்றோம்.

💡மார்க்க கல்விக்கான ஓர் ஸலஃபி கற்கைக்கூடம் - SUNNAH ACADEMY :
https://t.me/sunnah_academy

கோபத்தை விடுவோம்..! ஹுருல் ஈன்களை பெறுவோம்..! (இன்'ஷா அல்லாஹ்..)
26/09/2021

கோபத்தை விடுவோம்..!
ஹுருல் ஈன்களை பெறுவோம்..! (இன்'ஷா அல்லாஹ்..)

24/09/2021

வெள்ளிக்கிழமை நாளின் சிறப்புகள் - 1️⃣

عن أبي هُرَيرَة رَضِيَ اللهُ عنه، عنِ النبيِّ صلَّى اللهُ عليه وسلَّم أنَّه قال: ((خيرُ يومٍ طَلعَتْ فيه الشَّمسُ يومُ الجُمُعة؛ فيه خَلَقَ اللهُ آدَمَ، وفيه أُدْخِلَ الجَنَّةَ، وفيه أُخرِجَ منها، ولا تقومُ السَّاعةُ إلَّا في يومِ الجُمُعة )) رواه مسلم (854).

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
" சூரியன் உதித்த (நாட்களில்) சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அதிலே தான் அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களைப் படைத்தான். அதில் தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அதில்தான் அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலகம் அழியும் நேரமும் வெள்ளிக்கிழமை நாளில்தான் ஏற்படும்.

📚 _நூல் : முஸ்லிம் 854_

📝 விளக்கக் குறிப்புகள் :

1️⃣ வார நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்.

2️⃣ மனித சமுதாயமாகிய அனைவருடைய தந்தையான முதல் மனிதர் நபி ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையில் தான் படைக்கப்பட்டார்கள். ஒரு வெள்ளிக்கிழமையில் தான் சொர்க்கத்தில் வாழ வைக்கப்பட்டார்கள். ஒரு வெள்ளிக்கிழமையில் தான் அவர்கள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டார்கள்.

3️⃣ இந்த உலகமும் இந்த உலகில் வாழும் அனைவரும் ஒரு நாளில் அழிக்கப்படுவர். அந்த நிகழ்வு ஒரு வெள்ளிக்கிழமையில் தான் நடைபெறும்.

💡 SUNNAH ACADEMY

அல்லாஹ் உங்களை நேசித்தால் இவ்வுலகை விட்டும் பாதுகாப்பான்...
22/09/2021

அல்லாஹ் உங்களை நேசித்தால் இவ்வுலகை விட்டும் பாதுகாப்பான்...

தூய்மையான அமல்கள்
18/09/2021

தூய்மையான அமல்கள்

Address

Nagercoil
629802

Telephone

+919092282900

Website

Alerts

Be the first to know and let us send you an email when MUSLIM ADMIN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MUSLIM ADMIN MEDIA:

Shortcuts

Share

Category