14/07/2024
நகர்ப்புற உதவி பெறும் பள்ளிகளுக்கும் வேண்டும் காலை உணவு
இதோ கை கூடியது ஊரக உதவி பெறும் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம்
உதவி பெறும் பள்ளிகளுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை காலை உணவு .
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட காலை உணவு உதவி பெறும் பள்ளிகளுக்கு இல்லை என்றவுடன் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இதற்காக போராடத் துணிந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதற்கான முயற்சியை எம் ஆர் எஸ் ஐயா அவர்கள் முன்னெடுத்தார்கள்.
பெரும்பாலான பள்ளிகள் இதற்கு ஒத்துழைப்பு அளித்தன.
மிகவும் வருந்தத்தக்க விஷயம் ஒரு சில உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களே இதை தடுத்து விட முயற்சி செய்தனர்.
பத்தோடு பதினொன்றாக கோரிக்கை வைத்திருக்கிறோம் நாங்கள் வென்று விடுவோம் என்று உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை ஏமாற்றினார்கள். சில உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று கண்டித்தனர். அதற்கு ஒரு சிலர் மட்டுமே செவி சாய்த்தனர்.
இதையெல்லாம் தாண்டி தலைமைஆசிரியை செந்தமிழ் செல்வி அவர்கள் உதவியுடன் கல்வி அமைச்சரை சந்தித்தல், எம் ஆர் எஸ் ஐயா அவர்கள் முயற்சியால் கோரிக்கை விளக்க மாநாடு, மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதுதல் ,கோரிக்கை அட்டை அணிதல் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தல் என பல்வேறு முயற்சிகளை கையாண்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை உண்டாக்கி இதை ஒரு இயக்கமாக மாற்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்று இருக்கிறோம்.
போராடிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. இதை ஒற்றுமையுடன் போராடி நகர்ப்புற பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்திடுவது நமது அடுத்த முயற்சியாக இருக்க வேண்டும்.
இணைக்கப்பட்டுள்ள 40 புகைப்படங்களும் நமது போராட்டத்திற்கான சாட்சி. இதில் நேரடியாகவும் பொருளாதார ரீதியாகவும் பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் பெருமை கொள்வோம்.
நமது மாணவர் நலனுக்காக தொடர்ந்து போராடுவோம்.
அன்புடன் நாகை பாலா