26/08/2017
கண்ணிருந்தும் குருடனாய்,
காலமெல்லாம் வாழ்வேன்
என்று நினைத்தாயோ?
கதிராமங்கலம் காக்காது,
உணவின்றி சாவேன்
என்று நினைத்தாயோ?
நீட்டினால் நீசெய்த
வஞ்சத்தை மறப்பேன்
என்று நினைத்தாயோ?
வான்புகழ்க் கொண்ட
தமிழன்நான் வீழ்வேன்
என்று நினைத்தாயோ ?
ஆதிக்கும் அந்தமுண்டு;
இருளுக்கும் ஒளியுண்டு
என்பதை மறந்தாயோ?
தமிழா,
கவலைக் கொள்ளாதே!
காலம் கடந்தால்
கதையும் மாறும்,
நமது நிலையும் மாறும்.
விழித்துக் கொள்;
நிமிர்ந்து நில்;
வறுமை இல்;
செந்தமிழ் நாட்டினில்.
- அண்ணாதுரை