Dinakalvi

Dinakalvi கல்விக்கான சிறந்த இணையதளம். www.dinakalvi.com

“கல்லாமை இனி இல்லாமை” என்பதை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டு அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே "தினக்கல்வி" என்ற அமைப்பை தொடங்கினோம்.


வாழ்க்கை சூழலின் அல்லது குடும்ப சூழலின் காரணமாக அடுத்த கட்ட படிப்பினை தொடர முடியாமல் போகும் மாணவர்களை கரம் பிடித்து அவர்களின் கனவினை அவர்களின் ஆசைப்படியே நிறைவேற்ற படிக்க வைத்து அனைத்து விதத்திலும் உதவியாய் இருந்து வருகிறது நமது தினக்கல்வி அம

ைப்பு.


இலக்கு இல்லாமல் ஒரு ஈட்டியினை எறிவதனால் பயனொன்றும் இல்லை. மாணவர்கள் தனது லட்சியத்தை அமைக்காததற்கு ஒரு காரணம் அவர்களுக்கென சரியான ஒரு வழிகாட்டி யாருமில்லாதது. அந்த குறைபாடு இனி எந்த மாணவனுக்கும் இருக்க கூடாது என்பதற்காக நமது தினக்கல்வி இலவச கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகிறது.


நமது அமைப்பின் இந்த செயல்பாடு பல மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. எனவே இந்த ஆலோசனையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என்பதற்காக www.dinakalvi.com என்ற நமது வலைத்தளத்தை தொடங்கினோம்.


எங்களின் மற்ற முயற்சிகளை நாங்கள் சிறப்பாக பயனுள்ள வகையில் வழிநடத்தி செல்வது போல இனிவரும் காலங்களிலும் எடுக்கும் முயற்சிகளில் சிறப்புற செயலாற்றி கல்வி பணியை மென்மேலும் சிறப்பாக தொடர்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.


இப்படிக்கு,
ஆசிரியர்,
தினக்கல்வி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள். 🥳🥳🥳Happy New Year 2022 to All... 🥳🥳🥳       #2022
31/12/2021

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள். 🥳🥳🥳

Happy New Year 2022 to All... 🥳🥳🥳

#2022

அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் வணக்கம்.!கடந்த 6 வருடங்களாக மாணவர்களுக்காக கல்வி பணியினை சிறப்புற செயலாற்றி கொண்டு வருக...
09/10/2021

அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் வணக்கம்.!

கடந்த 6 வருடங்களாக மாணவர்களுக்காக கல்வி பணியினை சிறப்புற செயலாற்றி கொண்டு வருகிறது நமது தினக்கல்வி அமைப்பு. இதற்கு காரணமான அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் நன்றிகள்!!.

இந்த கல்விப்பணியானது இதோடு நின்று விடாது மேலும் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களின் அடுத்த அடியை முன்னெடுக்கிறோம். இதுவரை மாணவர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்து வந்த நமது தினக்கல்வி அமைப்பு தற்போது அதனை மேலும் விரிவுபடுத்தி www.dinakalvi.com என்ற வலைத்தளத்தினை தொடங்கியுள்ளோம்.

இதன் மூலம் மேலும் அதிகமான மாணவர்களுக்கு எங்களின் கல்வி சேவையை கொண்டு செல்ல முடியும் என்ற நோக்கோடு இந்த தளத்தினை தொடங்கியுள்ளோம்.

இந்த இணையதளத்தின் மூலம் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் நாங்கள் வழங்கும் கல்வி தகவல்கள் அனைத்தும் சிறிதும் குறையாமல் வழங்க முயற்சித்துள்ளோம். இந்த இணையதளத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாது பட்டதாரி இளைஞர்களும் பயன்பெறுவர்.

கல்வி தகவல்கள், உடனடி கல்வி செய்திகள், அனைத்து கல்லூரிகளின் தகவல்கள், பள்ளி படிப்பினை முடித்த பிறகு உள்ள பாடப்பிரிவுகளில் தகவல்கள், நுழைவுத்தேர்வுகளின் தகவல்கள், மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பற்றிய தகவல்கள், கல்வி உதவித்தொகைகளின் பற்றிய விபரங்கள் போன்ற அனைத்தும் மாணவர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் வலைத்தளம் நமது www.dinakalvi.com.

மாணவர்களின் பயனை தாண்டி பட்டதாரி இளைஞர்களுக்கும் பயனுள்ள வகையில் வேலைவாய்ப்பு செய்திகளையும் பதிவேற்றி வருகிறோம். மேலும் மாணவர்களின் திறன்கள், படைப்புகள், ஆகியவற்றினை வெளிக்கொண்டுவரும் ஒரு தளமாகவே www.dinakalvi.com இருக்கும்.

எங்களின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் முன்பு போலவே உங்களின் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறோம்.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ( பேரிடர் மேலாண்மை ) நிகழ்ச்சி ...
29/08/2018

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ( பேரிடர் மேலாண்மை ) நிகழ்ச்சி குமாரபாளையம் ருக்கு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் மூலம் இன்று ( 29-08-2018 ) சிறப்பாக நடைபெற்றது.

ருக்கு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கயோடு நடந்து கொள்ள வேண்டும் என்று செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

1. தீ விபத்து

2. வெள்ள அபாயம்

3. நெஞ்சு வலி, மயக்கம், விபத்து

4. நிலநடுக்கம்

5. மின்சார தாக்குதல்

6. விசம் குடித்தல்

7. தண்ணீரில் மூழ்குதல்

8. பாம்பு கடி, விசப்பூச்சி

9. விபத்தில் இரத்தப் போக்கு அதிகம் இருப்பின் எவ்வாறு நிறுத்துவது

10. திடீர் சுவாசக் கோளாறு

11. காக்கா வலிப்பு

12. மாணவர்கள் நாணயங்கள விழுங்கினால் என்ன செய்வது

13. மாணவர்கள் பென்சிலை மூக்கினில் விட்டால் என்ன செய்வது
போன்ற அனைத்திற்கும் முதலுதவி செய்வது பற்றிய செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் மாணவ மாணவிகளுக்கு ப்ரெஜக்டர் மூலம் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான வீடியோக்கள் ஒளிபரப்பப் பட்டது...

பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் சசிக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பாக திரு. திருநாவுக்கரசு, திரு. V. பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இன்று (25-07-2018) குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் தனித்திறமைகளை வெளி கொண்டு வர...
26/07/2018

இன்று (25-07-2018) குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் தனித்திறமைகளை வெளி கொண்டு வர சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது.

தினக்கல்வி மற்றும் ருக்கு அறக்கட்டளையின் சார்பில் நடந்த இவ்விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்வது, தலைமைத்துவத்தை வளர்ப்பது, மேடைக்கூச்சத்தை போக்குதல், தகவல் பரிமாற்றம் மற்றும் எளிதாக பாடத்தை மனதில் தக்க வைப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன. மேலும் பல அறிவு சார்ந்த போட்டிகளும் நடைபெற்றது....

இதில் பல மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் அறிவு சார்ந்த பல போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று மாணவர்கள் பரிசு பெற்றனர்.

இதில் தினக்கல்வியின் நிறுவனர் சசிகுமார் மற்றும் ருக்கு அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பிரேம்குமார், விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.. பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கௌசல்யா ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவானது மிக சிறப்பாக நிறைவடைந்தது..!

 #தினக்கல்வியில் சிறிய  #ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் நமது  #அரசு பள்ளி மாணவர்கள்...நமது தினக்கல்வி  #நூலகத்தில்...
22/01/2018

#தினக்கல்வியில் சிறிய #ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் நமது #அரசு பள்ளி மாணவர்கள்...

நமது தினக்கல்வி #நூலகத்தில் மாணவர்களுக்கு தேவையான வகுப்புகளும் இலவசமாக #ஞாயிறு தோறும் நடைபெற்று வருகிறது.. மாணவர்களின் #கனவுகள் வெளிவர பல சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது..

இன்று மாணவர்களின் #திறமைகள் அனைத்தும் கேட்டு தெரிந்து கொண்டோம். சில மாணவர்கள் #அறிவியல் சார்ந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இன்று அவர்களே சிறிய அளவில் #ரோபோ தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு Durai Raj அண்ணா அவர்கள் உதவி செய்வதாக கூறினார்..

அவர்கள் தயாரிக்கும் ரோபோ ஆனது நமது தினக்கல்வி க்கு #பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினர்.. மேலும் அந்த சிறிய அளவில் பயன்படும் அந்த ரோபோவிற்கு " #நீமு" என்று பெயரிட்டனர்..

இந்த வாரம் ரோபோவின் #டிசைன் மாணவர்களால் முடிக்கப்பட்டது... அடுத்த வாரம் ரோபோவின் ஆரம்பிக்கப்படும்...

சில மாணவர்கள் #புத்தகம் படித்தனர்.. சிலர் அறிவு சார்ந்த #விளையாட்டுகளை விளையாடினர்.. சிலர் #அறிவியல் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டனர் .. சிலர் #இன்டர்நெட் வசதியை கொண்டு வீட்டுப்பாடம் செய்தனர்.. சிலர் புத்தகம் எடுத்து சென்றனர்.. சிலர் புத்தம் #கொடுத்து சென்றனர்...

சிலர் #விவசாயத்தில் ஈடுபட விரும்பினர். அவர்களுக்கு Deepan Raj அவர்கள் உதவுவதாக கூறினார்...

அறிவியல் சார்ந்த துறையில் ஈடுபாடு #கொண்டவர்கள் யாரேனும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஆகா இருந்தால், மாணவர்களுக்கு கொடுக்க விரும்பினால் அவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்...

வாருங்கள் மாணவர்களின் #கனவுகளை வெளிக்கொண்டு வருவதற்கு...!

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்.. தி தமிழ் ஹிந்து 13-01-2018
14/01/2018

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்..

தி தமிழ் ஹிந்து 13-01-2018

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்..!காலைக்கதிர் செய்தித்தாள்..!
14/01/2018

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்..!

காலைக்கதிர் செய்தித்தாள்..!

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்..!தினகரன் செய்தித்தாள்..!
14/01/2018

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள்..!

தினகரன் செய்தித்தாள்..!

 #தேசிய_இளைஞர்கள் தினமாகிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாளாகிய (12.01.2018) இன்று நமது  #குமாரபாளையத்தில் மாணவர்...
14/01/2018

#தேசிய_இளைஞர்கள் தினமாகிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாளாகிய (12.01.2018) இன்று நமது #குமாரபாளையத்தில் மாணவர்களுக்காக தினக்கல்வியின் நளன் & நவிலன் இலவச #நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் அமைய காரணமாக இருந்தவர்கள் #மாணவர்கள்.. இந்த நூலகம் அமைக்க தனியாக தவித்த போது உதவி செய்தவர்களும் #மாணவர்களே..!

#தனி ஒருவனால் எதையும் செய்ய முடியாது என்று தான் நேற்று வரை நினைத்து இருந்தேன்.. ஆனால் மாணவர்களால் மாணவர்களுக்காக #எதையும் செய்ய முடியும் என்று அவர்கள் உணர்த்திவிட்டனர் இன்று..

#வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது இன்று.. பல்வேறு #எதிர்ப்புகளுக்கு பதில் அளித்து இந்த நூலகம் வெற்றியடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.. #தன்னம்பிக்கையின் சுவையினை சுவைத்து பார்த்த அனுபவம் இன்று.. ஒருவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு சிறந்த #பதிலாகவும் இது அமைந்தது..

-> கல்வி சார்ந்த #புத்தக சேவை,

-> மாணவர்களுக்கு #இன்டர்நெட் வசதி,

-> #புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை,

-> அறிவு சார்ந்த #விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி

-> வாரந்தோறும் #ப்ரொஜெக்டர் வசதியுடன் ஆவண படங்கள்

மாணவர்களுக்காக இவை அனைத்தும் கட்டணம் இல்லாமல் #இலவசமாக...

மாணவர்களுக்கு இதனை தெரிவித்து பயன் பெற #வேண்டிக்கொள்கிறேன்...

" #சேவை என்பது எங்கும் பறந்து விரிந்து கிடக்கிறது... அதனை எங்கு செய்தால் என்ன? சேவை சேவை தானே? " இந்த வரிகள் மட்டுமே என்னை #செதுக்கி கொண்டிருக்கிறது...

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து #மாணவர்களுக்கும், #ஆசிரியர்களுக்கும், பெரியோர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், பிற அமைப்பினை சேர்ந்தவர்களுக்கும், அனைத்து தன்னார்வலர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தினக்கல்வியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்...

என்றும் கல்வி பணியில்,
#தினக்கல்வி மற்றும்
#ருக்கு கல்வி அறக்கட்டளை

 #பெஸ்ட் டியூஷன் மற்றும் டுடேரியலில் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள  #தினக்கல்வியின் பயிற்சி*பொதுவாக நாம்  #அரசு பள்ளிக...
08/01/2018

#பெஸ்ட் டியூஷன் மற்றும் டுடேரியலில் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள #தினக்கல்வியின் பயிற்சி*

பொதுவாக நாம் #அரசு பள்ளிகளில் இந்த சிறப்பு பயிற்சினை இலவசமாக வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே..! இன்று மேலும் #சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது..

இன்று (07-01-2018) #தினக்கல்வியின் சார்பாக #பெஸ்ட் டியூஷன் சென்டரில் #தலைமை பண்பினை வளர்த்து கொள்வது எப்படி? மற்றும் அதன் #அவசியங்கள்.. மற்றும் பொது தேர்வினை #எளிமையாக எதிர் கொள்வது எப்படி? போன்ற மாணவர்களுக்கு தேவையான பல்வேறு கருத்துக்கள் அடங்கிய #கருத்தரங்கு நடைபெற்றது..

அதில் கலந்து கொண்டு #சிறப்புரை ஆற்றியதற்கும் மேலும் பெஸ்ட் டியூஷனின் முன்னாள் #மாணவர் என்பதற்கும் பெருமைப்படுகிறேன். இதில் நடைபெற்ற சிறு சிறு நிகழ்வுகளில் மாணவர்கள் தங்களுடைய #தனித்திறமைகளை வெளி கொண்டு வந்தனர்.

பெஸ்ட் டியூஷன் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து #தினக்கல்வியின் இலவச சேவைகளில் ஒன்றான நமது நளன் நவிலன் #நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கியது தனி சிறப்பு.. மேலும் மாணவர்கள் அனைவரும் தம்மால் முடிந்த #உதவிகளை செய்வதாக கூறினர்...

என்னால் எள்ளலவு மாற்றம் வந்தாலும் மட்டற்ற மகிழ்ச்சி.

" # # #சேவைகளை எங்கு இருந்து செய்தால் என்ன? சேவை சேவை தானே..! இந்த வரிகள் மேலும் மேலும் என்னை மெருகேற்றுகின்றது..."

இப்படிக்கு,
தினக்கல்வி சசிகுமார்

Address

KVB Bank Upstairs, Salem Main Road
Komarapalayam
638183

Alerts

Be the first to know and let us send you an email when Dinakalvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share