29/03/2020
தொற்று நோய் பரவும் போது வீட்டில் ஒதுங்கியிருப்பது ஒரு வணக்கம்.
கொள்ளை நோய் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அன்னார், “அது அல்லாஹ், தான் நாடியோர் மீது அனுப்பும் தண்டனையாகும். அதையே முஃமின்களுக்கு அருளாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். எனவே, கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊரில் வாழும் ஒருவர், அதில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவராகவும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் தன்னை அடையாது என்று நம்பிக்கை வைத்தவராகவும் பொறுமையோடு தனது ஊரிலேயே தங்கியிருந்து, (அதில் அவர் மரணிக்க) நேர்ந்தால், ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை அவருக்குக் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)
நூல்: புகாரி 3474
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ;
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும்.
அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள்.
கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், நன்மையை ஆதரவு வைத்தவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் வீட்டிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் : 26139 , நஸாஈ 7527 (சுனனுல் குப்ரா)
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட பிரகாரம் யார் செயல்படுவாரோ அவர் (கொள்ளை நோயினால் அந்த நேரத்தில்) மரணிக்காவிட்டாலும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கு கிடைக்கும் என்பதையே இந்த ஹதீஸின் கருத்து சொல்லவருகின்றது என்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
நூல் : பத்ஹுல் பாரி 13/98
Al Manar Centre , Dubai.
அப்துல் அஜீம்Mûféèd ÁhãmêdAbdul HalirAhamed Meeran. Aj Ibu Stylish KeelakaraiHa MiSheikh Mufaris Thajudeen RashadiAl Madharasathul FirthouwsHajiJavith Khan J KManzoor AhmedFirthous IbrahimHameed Abdul KaderAjmal KbMohamed FahmanMd Muz ZammilArif MufNandhu Maní Brother'sMohamed Malik KhanRaqeeb Rakeeb