23/08/2026
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு நவீன வேளாண் பயிற்சி
விவசாயிகளின் வேளாண் திறன்களை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு வேளாண் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று, விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர் சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பயனுள்ள நடைமுறை வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளித்தனர்.
மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பது, செலவினங்களை குறைப்பது மற்றும் வேளாண்மையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி நிகழ்ச்சி, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நவீன வேளாண் முறைகளை அறிந்து, அவற்றை தங்களது வயல்களில் நடைமுறைப்படுத்துவதற்கு பயனுள்ளதாக அமைந்தது.