15/06/2026
தலைமைத்துவ புத்தாக்க பயிலரங்கம்:
நமது கல்லூரியில் சென்னை ஐ சி டி அகாடமியின் மூலம் மூத்த தொடர்பு மேலாளர் திரு. பிரபு அவர்கள் மற்றும் சாப்ட் ஸ்கில் பயிற்சியாளர் திரு. கிருஷ்ணதேவன் அவர்கள் பங்கேற்று ஆசிரியர்களுக்கான ஆளுமை மேம்பாடு குறித்து 3 (11/062026 முதல் 13/06/2026) @ நாட்கள் பயிற்சி அளித்தனர். இதில் குழு உருவாக்கம், புத்தாக்கம், படைப்பாற்றல், சுயவிழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பு திறன் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியும், பல்வேறு செயல்பாடுகள், குழு விவாதங்கள், அனுபவ பூர்வ கற்றல் அமர்வுகள் மூலம் பங்கேற்பாளர்கள் ஒன்றினைந்து செயல்படும் திறன், புதுமையான சிந்தனை உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள பயிலரங்கம் உதவியாக இருந்தது. இந்த பயிலரங்கத்தில் நம் கல்லூரி பேராசிரியர்களுடன் பாரதியார் பொறியியல் கல்லூரி, கணேஷ் பொறியியல் கல்லூரி, பாரதியார் கலை அறிவியல் கல்லூரி, கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சக்தி கைலாஷ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் என மொத்தம் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு நம் கல்லூரியின் தலைவர் தலைவர் மரு. மகுடமுடி அவர்கள் தலைமை வகித்தார் துணை முதல்வர் திரு. அசோக் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர். மோகனசுந்தர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் கல்லூரியின் செயலாளர் திரு. கோவிந்தராஜு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், நிகழ்வின் இறுதியாக கணினி அறிவியல் துறை தலைவர் திரு. சக்திவேல் அவர்கள் நன்றியுரை கூறினார்.