30/04/2026
அன்புள்ள
இடிந்தகரை மக்களுக்கும்
நமது ஊரின் வளர்ச்சிக்காக இயங்கும் ஊர்க்கமிட்டி. கப்பல் மாலுமிகள் சங்கத்திற்கும் இடீந்தகரை வளர்ச்சிக்கு குழுவிற்கும் ஊரின் பேரில் இயங்கும் நிதிக்குழுவிற்கும் அரசியல்
கட்சிகளில் பயணிக்கும் தொண்டர் படைக்கும் வணக்கம்
மருத்துவமனை
வங்கி இரண்டு துவக்கப்பள்ளி ஒரு மேல்நிலைப்பள்ளி என உடல் உழைப்பால் தெரிப்பு வைத்து உருவாக்கிய என் முன்னேத்தியர்களுக்கு பாதம் பணிந்து முதலில் வணங்குகிறேன்
அவர்கள் உருவாக்கியதை கட்டி காப்பாற்ற வக்கில்லாமல் இருக்கும் நமக்கும் வாழ்த்துகள்
இன்று பலர் படித்து வெளிநாடுகளிலும் கப்பல்களிலும் நல்ல பணியை நமக்கு தந்த பள்ளியின் நிலமை இன்று மூடும் தருவாயில் உள்ளதை தெரியபடுத்துகிறேன்
நமது பள்ளியில் உறுப்பினர் சேர்க்கை பற்றாக்குறையால்
ஆசிரியர் குறைப்பு நடை பெறுகிறது
இந்த நிலமை நீடித்தால் ஓராசியர் பள்ளியாக கூட மாறும் ஊரில் யாரும் இதை கண்டுகொள்வதில்லை
சிலரிடம் பள்ளிக்கான பணிகளுக்கு பேசினால் பொத்தாம் பொதுவாக ஆசிரியர்களை சுட்டி காட்டி அவர்கள் செய்யமாட்டார்களா என்று விதாண்டாவாதம் பேசி கலைகின்றனர்
கச்சேரிகளுக்கு 10 லட்சத்தை வீசி எறிந்து ஆடவிடும் நாம் பள்ளியை கவனிக்க தவறி
விட்டோம்
ஏனென்றால் நாம் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டோம் பிள்ளைகளை வண்டி பள்ளிகூடத்தில் படிக்க வைத்து நம்மை பொருளாதாரத்தை ஈட்ட வைத்த பள்ளியை ஒதுக்கி வைத்துவிட்டோம்
நான் வளர்ந்து விட்டேன் என் மாதம் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கிறோம் வேற எதற்கு பள்ளியை கட்டி அழ வேண்டும் என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்
ஆனால் இந்த பள்ளி என் முன்னோர் உருவாக்காமல் இருந்திருந்தால் கடற்கரையை விட்டு 10 % கூட போயிருக்கமாட்டோம் படிக்காத எங்கள் இறைவன்கள் படிப்பின் தன்மை அறிந்து சிந்தித்து கருவாக்கி உருவாக்கி வைத்த பள்ளியை படிப்பின் தன்மை தெரிந்தும் நாம் அதை கரியாக்க விடுவதுதான் படிப்பின் அறமா? இல்லை ஊரின் தரமா ?
அறிவார்ந்தவர்களே! சிந்திப்போம்
இன்னும் சில வருடங்களில் மூடுவிழா காணப்போகும் கருவறையை
அதில் கருவாகியவர்களே ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றால் நம்மை மீறிய தற்குறி உண்டோ உலகில் !
தாயை போல நேசிக்கும் ஆசியர்களே ! உங்கள் தாழ் பணிந்து வேண்டுகோள்
உங்கள் பிள்ளைகளையே நீங்கள் பணி செய்யும் பள்ளியில் படிக்கவைக்கவில்லை என்றால் உங்கள் தரத்தை நீங்கள் தான் பரிசோதனை செய்யவேண்டும்
உங்களை குறைசொல்லும் அளவிற்கு அறிவில்லாத தற்குறி நான் !
இருந்தாலும் சொல்கிறேன்.
உங்களுக்கு இந்த வேலையை
தந்தது
ஊரின் முன்பதிவும்(Seniority) அதற்காக்வாவது நீங்கள் உங்கள் பிள்ளை உங்கள் நிழலில் படிக்கவையுங்கள் நீங்களே உங்களை நம்பவில்லை எனில்? ??????????
உங்களின் தரம் ....உலகதரம்
இன்று ஊரில் சராசரி கடலோடியின் வருமாம் வாரம் 3000
மாதம் 20000 தாண்டுவது கடினம்
இந்த பள்ளியில் பிள்ளை ஒன்றிலிருந்து 12 வரை படிக்க 25000 கூட செலவாகாது(12 வருடம்)
ஆனால் தனியார் பள்ளியில் ??????குறைந்த பட்சம் 50000 ஆண்டிற்கே செலவாகும்
இந்தபள்ளி மூடினால் அவர்களின் நிலைமை ??
என் நிலமை சரியாகிவிட்டது நான் விலகிகொள்கிறேன் என்று அன்று நம் முன்னோர் நினைத்திருந்தால் கடலில் கரையில் நமக்கும்நிழல் இருந்திருக்கும்
இன்று பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் நம் தலைமுறையால் கூட இதுபோல் மூன்று பள்ளியை நாம் கட்டி எழுப்பமுடியுமா சிந்தீப்போம்
உடைந்த பள்ளியை வேலைபார்க்க கூட முக்குகிறோம்
ஆசிரீயரையும் சாமீயாரையும் குத்தம் சொல்லி குதர்க்கம் பேசும் தலைமுறையில் உள்ளோம்
ஊர்கூடி தேர் இழுக்க ........ஆண்டு தோறும் கூடும்
நாம்
அறிவு தேரை இழுக்க இயலாமல் தெருவிட்டால் எப்படி
யாரையும் குறைசொல்ல நேரமில்லை
நாம் செய்ததை நாமே திருத்திகொள்வோம்
திருந்தி கொள்வோம்
உடனே இது குறித்து களம் இறங்குவோம்
கலந்துறையாட விருப்பம் இருந்தால் தங்கள் எண்களை பதிவிடுங்கள் முயற்ச்சி செய்வோம்
நம்மாள் கையாலாக வில்லை என்றால்
(விரக்தீயில் சொல்கிறேன் )
மறைமாவட்டத்திடமாவது ஒப்படைப்போம் பள்ளியாவது எஞ்சும்
முடியும் என்றால் அனைவரும் இணைவோம்
அன்புடன்
இசைதமிழ்அரசன்
மிக்கேல் சுசி பர்ணாண்டோ