25/04/2019
by Ramesh Kumar
நம் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை திரும்பி பார்க்க வைக்கும்...அவற்றில் நமது பள்ளி பருவம் தெகிட்டாத இன்பம்..!! அசைபோட்ட நினைவுகள் சில இங்கே 😉...!! கற்றுக்கொடுத்த இந்த கரும் பலகை....
பழமையான பள்ளி., மறக்க முடியாத இந்த நண்பர்கள் & நண்பிகள் கூட்டம்., சரி ஒழுங்கா நில் .. வரிசையாக நில்.. (காலை பிரையர்), வணக்கம் ஐயா என தொடங்கும் வகுப்புகள்., வெள்ளை சட்டை வேட்டியுடன் வரும் எங்கள் நெடுவயல் தமிழ் ஐயா... சரவணன் ஐயா, தமிழ் பெரியம்மா, சின்னம்மா, முருகன் சார், சி எஸ் சார், சிஎம் சார், காதை பிடித்து திருகும் எஸ் டி சார், ஓவிய ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், அறிவியல் ஆசிரியர் P.M ஆசிரியர், மேலும் பல ஆசிரியர்களை பார்த்து சந்தில் தெரிக்க ஓடும் நாங்கள்., மறக்க முடியாத அந்த பச்சை மட்டை( வாங்கிய ஒவ்வொரு அடியும் வெற்றி படிக்கல் 😉.,உடை ஒழுக்கம் என்ன என்று கற்றுக் கொடுத்த எங்கள் ஆசிரியர்கள் சேமிப்பு என்றால் என்ன என்று கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் ,தொலை தூரத்தில் இருந்து கால் கடுக்க மிதிவண்டியில் வந்து கற்பித்த ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை தமிழ் மன்றம் நிகழ்ச்சி, பள்ளி ஆண்டு விழா மற்றும் இடைவேளையில் மிதிவண்டியில் காத்துக் கிடக்கும் பஞ்சு மிட்டாய்., 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒலிக்கும் அந்த டிங் டிங் மணிஓசை., என்னதான் வாழ்கை தரம் உயர்ந்தாலும் மணம் மறாத! மறக்க முடியாத சத்துணவு , பண்டிகை காலம் ஒரே சந்தோசம். நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றில் குளித்து மகிழ்ந்தது... அம்மாவிடம் ஆட்டைய போட்டு வாங்கிய ஒரு ரூபாய்க்கு அய்யர் கடை பாயாசம், புத்தகத்தில் குட்டி போட்ட மயில் இறகுகள்., அரைக்கால் டவுசர்.,சேற்றில் மீன் பிடித்த நயினாரகரம் ஆறு. பழமைகள் உண்டு!! ,பல வரலாறுகள் உண்டு!!! அதை அசை போட கூட நேரம் இல்லாத வாழ்கை முறை..எதையோ தேடி அலையும் வாழ்கை., நிகழ் காலத்தை தொலைத்து விட்டு எதிர் காலதுக்காக(மகள்/மகன்) வாழும் மூன்றாவது தலைமுறை., பருவம்(age) மாறியது பண்பை மறந்தோம்., பாசத்தை (உறவுகள்) துலைத்தோம்., வாழ்க்கை ஒரு சுழற்சி., நான் நீ என்ற அகந்தை துரந்து மனிதனாக வாழ்வோம்! நண்பர்களாக வெல்வோம்!!
ஒன்று பட்டால் உண்டு வாழ்கை.,
Note: Inbox us the memories you want to share :)