19/05/2022
https://gkrsinstitute.com/government-exams/tnpsc-current-affairs-may-19-2022/
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று (18.5.2022) தீர்ப்பளித்தது. அரசியலைமப்பு சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை மூலம் 9.9.2018-ல் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மீது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்துள்ளார். இதற்கான காரணம் மற்றும் தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியபோது தான் மனுதாரருக்கு மன்னிப்பு அளிப்பது குறித்து தமிழக அரசின் பரிந்துரையை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
161-வது சட்டப்பிரிவு: 1980-ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு முன்னர் தொடரப்பட்ட மருராம் (எதிர்) மத்திய அரசு வழக்கில் அளித்த தீர்ப்பில், அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ஐ பொறுத்தவரை தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது. இதில் ஆளுநர் என்பவர் முறை சார் தலைவர், நிறைவேற்றும் அதிகாரத்தின் ஒரே மையமாகவும் உள்ளார். ஆனால் அமைச்சரவையின் ஆலோசனையை தவிர்த்து அவர் செயல்பட இயலாது என தெரிவித்துள்ளது. ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிரிவு 161-ன் கீழ் அவர் அமைச்சரவை ஆலோசனைகளுக்கு கட்டுப்படுகிறார். சட்டப்பிரிவு 161-ன் கீழ் தண்டனையை குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடர்புடைய விவகாரங்களில்மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரை கட்டுப்படுத்துகிறது. அதனால் இந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்க கூடாது. இந்த செயலானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.
C.A.19.05.2022 (Tamil Version) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த ஏ.ஜி.பேர.....