17/11/2018
கடலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற 61-வது மாநில குடியரசுதின தடகளப்போட்டிகளில் தேவகோட்டை NSMVPS மேல்நிலைப்பள்ளியில் இருந்து 15மாணவர்கள் 18 போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 19வயது பிரிவில் T.அகிலன் நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தத்திதாவுதல் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும், S.சக்திவேல் கம்பூன்றித் தாவுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று வந்தனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர்L.பூமிநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் A.சேவுகராஜா, சந்திரன் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.J.ஜெயகாந்தன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அ.பாலுமுத்து, சிவகங்கை மாவட்டக்கல்விஅலுவலர் திரு.KS.ராஜேந்திரன், தேவகோட்டை மாவட்டக்கல்விஅலுவலர் திரு.சாமி.சத்தியமூர்த்தி,பள்ளிச்செயலர் திரு.A.இராமநாதன், பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.SP.அருணாச்சலம், தலைமையாசிரியர் திரு.M.வெங்கடாசலம்,ஆசிரிய அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.