Vetha

Vetha

Share

Senior Prof. SKY Yoga
Joint Director VISION FOR WISDOM , Member Board of Management and Advisory Commity, The World Community Service Center.

29/05/2026

*உடல்நலமும் மனநலமும்!*
‌‌
உடலைப் பேணும் செயலிலும், பொருள் ஈட்டும் செயலிலும், புலன் இன்பங்களைத் துய்க்கும் செயலிலும், உறவு நலம் காக்கும் செயலிலும் தனக்கும் பிறர்க்கும் துன்பம் தராமலும், துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தும் வாழ்பவரே *உடல் நலத்தோடு வாழ்வார்.*

ஆறாவது அறிவைக் கொண்டு புலன் கடந்து சிந்தித்து, கடவுள் ஒன்றே அனைத்து உயிர்களாக வாழ்வதை அறிந்து வாழ்பவரே, நான் கடவுள்;எனக்கு மரணம் இல்லை;நான் எந்நாளும் வாழ்கின்றேன் என்பதை அறிந்து, நிகழ்கால இயற்கை இன்பங்களைத் துய்த்து பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவு பெற்று மன நலத்தோடு வாழ்வார்!*
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

29/05/2026

*மகிழ்ச்சியான வாழ்விற்கு இறையுணர்வும் அறநெறியும்!*

இறையுணர்வு பெறும் நோக்கத்தோடு மனவளக்கலை (Vethathiri SKY)) பயிற்சிகளைச் செய்பவரே, ஓராண்டு காலத்திற்குள் இறைநிலையை உணர்ந்து கொள்வார்.

அகத்தவமும் அகத்தாய்வும் செய்து இறைநிலையை உணர்ந்தவர்க்கு, 1)அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அடிப்படையில் கடமைகளை ஆற்றும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்.

2)ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இறைநீதியை மதித்து தனக்கும் பிறக்கும் நல்லதைச் செய்து வாழ்வார்.
அறவழியில் பொருள் ஈட்டி, புலன் இன்பங்களை அளவோடு அனுபவித்து, எல்லோரும் இன்புற்று வாழ உதவி உடல்நலத்தோடும் மனநலத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்வார்.
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

28/05/2026

*நலவாழ்விற்கு ஆறாவது அறிவின் சிறப்பு!*

ஆறாவது அறிவைக் கொண்டு,நிலம், நீர்,நெருப்பு, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களுக்கும் மூலமான மெய்ப்பொருளை சிந்தித்து அறிந்த அறிவும், ஐம்பூதங்களாலான இயற்கையை, வாழ்க்கை அனுபோகப் பொருட்களாக மாற்றும் தொழில் அறிவும், ஐம்பூதங்களின் இயக்க விளைவுகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை வாசனையை அளவோடு இரசித்து இன்புறும் அறிவும், எல்லோரும் இன்புற்று வாழ உதவும் அறிவும் ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும்.

ஆறாவது அறிவில் முழுமை பெற்ற மனிதனே, இயற்கையை மதித்து ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து உடல் நலத்தோடும் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவோடும் நலமாக வாழ்வார்.
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

27/05/2026

*அருள்நிதியரின் அருட்தொண்டே உயர்ந்த தொண்டு!*

மனிதகுலம் துன்பமில்லாமல் வாழ, ஆன்மீக அறிவு விளக்கேற்றும் அருட்தொண்டே உயர்ந்த தொண்டு.

அறிவு வறுமையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.தெய்வநிலையை தெளிவாக அறிந்த அறிவே அருளறிவு .

தெய்வநிலையை தெளிவாக அறிந்த அருள்நிதியரே, இன்ப துன்பம் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றிருப்பார்.
*"அறிவே துன்பம் போக்கும் தெய்வம்."*

*துன்பம் போக்கும் தெய்வ நிலையை அறிய அருட்தொண்டாற்றி இன்பம் காண்போம்!*
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

26/05/2026

*உடல் மன துன்பமில்லாமல் வாழ மெய்ப்பொருள் (ஆன்மீக) அறிவு!*

உடலில் நீடித்த வலியோ, மனதில் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் நான்கும் இன்னும் வேண்டும் எனக்கே வேண்டும் என்ற ஆசையோ இல்லாமல் வாழ்வது *உடல் மன நலவாழ்வு!*

ஆறாவது அறிவைக் கொண்டு சிந்தித்து மெய்ப்பொருளை அறிந்த மெய்ஞானியர்க்கே *பேரின்பம் கிட்டும். மனம் நிறைவும் அமைதியும் அடையும்.மனநலத்தோடு வாழ்வார்.*

பேரின்பத்தில் வாழ்பவரே,புலன் இன்பங்களை அளவோடு அனுபவித்து *உடல் நலத்தோடும் வாழ்வார்!*

*"மெய்ப்பொருளை அறிந்த மெய்ஞானியரே உடல் நலத்தோடும், மனநலத்தோடும் வாழ்வார்!"*
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

25/05/2026

*நாட்டில் குற்றங்கள் குறைய ஒரே வழி!*

நாட்டில், கொலை, கொள்ளை,சூது, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் குறைய,குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

மேலும் உயிர்மநேய வாழ்க்கைக்கல்வி, ஆன்மீகக்கல்வியில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, சமூகநலத்துறை மூலம் ஆங்காங்கு சமுதாயக் கூடங்களில், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

*உயிர்மநேய வாழ்க்கைக் கல்வி, இளைஞர்களுக்கு மாணவப் பருவத்திலேயே கட்டாயப் பாடமாக அளிக்கப்பட வேண்டும்.*

உயிர்மநேய வாழ்க்கைக்கல்வி பற்றிய விபரம் அறிய
அலைபேசி எண்;
79044 02887

24/05/2026

*கடவுளைத்தேடும் பக்தர்களே!*
*கடவுளைக் காணலாம் வாரீர்!*

அகத்தவம்(Meditation)செய்து கடவுளைக் கண்டுகொள்பவர்க்கே, எல்லா உயிர்களையும் தனக்கு சமமாக மதித்து ஒழுகும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்.

பொருள் ஈட்டும் செயலிலும், புலன் இன்பங்களைத் துய்க்கும் செயலிலும்
ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து, உடல்நலத்தோடும் மனநலத்தோடும் எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!

அகத்தவம் செய்து கடவுளைக்காண அருகிலுள்ள அறிவுத்திருக்கோயிலை தொடர்பு கொள்வீர்!
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்
உதவிக்கு அலைபேசி எண்:
79044 02887
70109 55300

24/05/2026

*மனவளக்கலைஞர்களே!*
*நீங்கள் இறைவனைக் கண்டு கொண்டீர்களா?*

இறைநிலைத்தவம் செய்து இறைவனைக் கண்டுகொள்பவருக்கே, எல்லா உயிர்களையும் தனக்கு சமமாக மதித்து ஒழுகும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். பொருள் ஈட்டும் செயலிலும், புலன் இன்பங்களைத் துய்க்கும் செயலிலும்
ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து, உடல்நலத்தோடும் மனநலத்தோடும் எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்

உதவிக்கு அலைபேசி எண்
70109 55300

Want your school to be the top-listed School/college in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


B6, Housing Unit, Seeranaicken Palayam
Coimbatore
641007