Vetha

Vetha Senior Prof. SKY Yoga
Joint Director VISION FOR WISDOM , Member Board of Management and Advisory Commity, The World Community Service Center.

25/08/2026

*இறைநிலைத்தவம் செய்பவருக்கு நினைப்பதெல்லாம் நடக்கும்!*

இறைநிலைத்தவம் செய்து இறைநிலையை உணர்ந்தவருக்கு "எண்ணியவெல்லாம் எண்ணியபடியேஆகும்"என்பது இறைநீதி.

இறைநிலையை உணர்ந்தவர், *நடக்கத் தேவையானதையே நினைப்பார்.நினைப்பதெல்லாம் நடந்துவிடும்* என்று மெய்ஞானியர் கூறுகின்றனர்.

இறைநிலையோடு மனம் ஒன்றி தவம் செய்து,*"உடல் நலம், நீளாயுள்,நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வோம்"* என்று எண்ணுபவருக்கு எண்ணியவெல்லலாம் எண்ணியபடியே ஆகும்.உடல் நலத்தோடும் மனநலத்தோடும் கவலையில்லாமல் வாழ்வார்.

*"வேண்டிய வேண்டியாங் கெய்ததால் செய்தவம் ஈண்டு முயலப் படும்."*
--திருவள்ளுவர்
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்

24/08/2026

*துன்பமில்லாமல் வாழ்பவரே ஞானிசிரியர் பொறுப்புக்குப் பொருத்தமானவர்!*

இறைநிலைத்தவம் செய்து மெய்ப்பொருள் (ஆன்மா)முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு, இயக்கம், இன்ப துன்ப விளைவுகளை முழுமையாக அறிந்த அருள்நிதியரே, அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்த அன்பின் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இயற்கைநீதியை மதித்து தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து,
உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும்,
நிறை செல்வத்தோடும், உயர் புகழோடும்,உலக இன்பங்களைத் துய்த்து மனநிறைவும் அமைதியும் ஓங்கி பேரின்பத்தில் வாழ்வார்.
*அவரே ஞானாசிரியர் பொறுப்புக்குப் பொருத்தமானவர்.*
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற, தமிழை நேசிக்கும் தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.
24/08/2026

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற, தமிழை நேசிக்கும் தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு...

23/08/2026

*மெய்ஞானியருக்கு கேள்விகள் இருக்காது!*
*யார் மெய்ஞானி?*

மெய்ப்பொருள் (சுத்தவெளி) முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகளை(இன்பம் , துன்பம், பேரின்பம், அமைதி)தெளிவாக அறிந்த அறிஞரே மெய்ஞானி.
*இயற்கையை முழுமையாக அறிந்த அறிஞரின் மனதில் எழும் கேள்விகள் அனைத்திற்கும் இயற்கையே பதில் சொல்லி விடும்.பதில் அறியாத கேள்விகள் ஏதும் இருக்காது.*

*மெய்ஞானியரே இன்பமும் துன்பமும் பிறர் தர வாரா* என்ற இயற்கைநீதியை அறிந்து தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து உடல் மன துன்பமில்லாத பேரின்பத்தில் வாழ்வார்.
*"கடவுளை அறிந்தவர் கடமையில் வாழுவார்."*
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

22/08/2026

*இறைநிலைத்தவத்தில் சமாதிநிலை அனுபவம்!*

பிரம்மஞானப் பயிற்சி பெற்று இறைநிலைத்தவம் செய்து வருபவருக்கு,
1)சுத்தவெளி முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு, இயக்கம், இன்ப துன்ப விளைவுகள் யாவும் அகக்காட்சியாக விளங்கும்.இயற்கை எனும் நந்தவனத்தில் இறுதியாகப் பூத்தமலரே மனிதன் என்பது அனுபவமாக விளங்கிவிடும்.

2)மனம் இயற்கையோடு கலந்து அறிவாகி விடும்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்; யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற உண்மைகள் விளங்கும்.

3)அனைவரும் ஒன்றென்று அறிந்த அன்பின் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இயற்கைநீதியை மதித்து தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து வாழ்வது இயல்பாகி விடும்.

4)தான் என்ற அகந்தையும் (Agression)தனது என்ற பற்றும்(Possessiveness )அற்றுப் போகும்.
பேராசை முதலான ஆறு தீயகுணங்களும் நிறைமனம் முதலான ஆறு நற்குணங்களாக மாற்றம் பெற்று விடும்.

5)உடலில் சீவரசாயனங்களின் அளவு மற்றும் தரத்தையும், சீவகாந்தசக்தியின் திணிவு மற்றும் ஓட்டத்தையும் சீராகப் பராமரித்து உடல் நலம் காத்து வாழும் அறிவு உள்ளுணர்வாக விளங்கிவிடும்.

6) அறவழியில் பொருள் ஈட்டிப் பகிர்ந்து,நிகழ்கால புலன் இன்பங்களைத் துய்த்து, பொருள்,புகழ், செல்வாக்கு புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவும் அமைதியும் பெற்று மனிதன் வாழ்வான்.
வாழ்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்

தொகுத்தவர்: முதுநிலை பேராசிரியர், அருள்நிதி. வேதசுப்பையா.
அலைபேசி எண்:
70109 55300

19/08/2026

*யார் பக்தன்?*
*யார் போகி?*
*யார் ஞானி?*

நலவாழ்விற்கு கடவுளை வேண்டுபவன் *பக்தன்!*.

கடவுளை அறிய ஐம்புலன்களையும் கடந்து அகத்தவம்(ஆத்ம தியானம்) செய்பவன் *யோகி!*

கடவுளை அறிந்த அன்பின் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறவழியில் தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும் நட்பு நலத்தோடும், உலக இன்பங்களைத் துய்த்து மனநிறைவும் அமைதியும் பெற்று நலமாக (துன்பமில்லாமல்) வாழ்பவன் *ஞானி!*

ஞானமார்க்க ஆன்மீகத்திற்கு வந்த பின்னும், மதம் சார்ந்து பல கடவுள்களை வழிபடும் மனவளக்கலைஞன், கடவுளை அறிய உதவும் யோகப்பயிற்சிகளை முறையாகச் செய்து கடவுளை அறிய மாட்டான்.

*கடவுளை அறியாத மனவளக்கலைஞனால் துன்பமில்லாமல் வாழ முடியாது!*
வாழ்க வேதாத்திரியம்

19/08/2026

*நீங்களும் பேரின்பத்தில் வாழலாம் வாரீர்!*

உடலுக்கும், உயிருக்கும், மனத்துக்கும் யோகப்பயிற்சிகள் அளித்து இறைநிலையை உணர்பவர்க்கு, 1)தான் என்ற அகந்தையும் (EGO )தனது என்ற *பற்றும், பாசமும் , ஆசையும் அற்றுப் போகும்.*

2) பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவும் அமைதியும் கிட்டும். மனதில் இருக்கும் பேராசை முதலான ஆறு தீயகுணங்களும் சீரமைந்து மனம் தூய்மை பெறும்.*மனத்துன்பமில்லாமல் வாழ்வார்.*

3) ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய இறைநீதியை மதித்து,தனக்கும் பிறர்க்கும் நல்லதைச் செய்து, உடலுக்கு வரும் நோயைத் தணித்து *உடல் துன்பமில்லாமலும் வாழ்வார்.*

*தீவினைப் பதிவுகளைப் போக்கி துன்பமில்லாத பேரின்பத்தில் வாழ்பவரே,ஆன்ம தூய்மை பெற்று இறைநிலையை அடைவார்.*

மனிதன் இறைநிலையை அடைவதற்கான எளியமுறை யோகப்பயிற்சிகள், மனவளக்கலையாக (Vethathiri SKY) அறிவுத்திருக்கோயில்களில் அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது.
*நீங்களும் மனவளக்கலையைக் கற்று இறைநிலையை அடைந்து பேரின்பத்தில் வாழலாம்! அன்பர்களே வாரீர்!*
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்

தொகுத்தவர்:
முதுநிலை பேராசிரியர், அருள்நிதி, வேதசுப்பையா.
அலைபேசி எண்:
70109 55300

18/08/2026

Arivuthirukoil, Arutperum Jothi Nagar, Aliyar-642101, Pollachi TK....

கேள்வி:கடவுளை ஏன் காண வேண்டும்?பதில்:கவலையில்லாமல் வாழ(நலவாழ்விற்கு) கடவுளைக் காண வேண்டும்?
18/08/2026

கேள்வி:
கடவுளை ஏன் காண வேண்டும்?
பதில்:
கவலையில்லாமல் வாழ(நலவாழ்விற்கு) கடவுளைக் காண வேண்டும்?

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவா...

Address

B6, Housing Unit, Seeranaicken Palayam
Coimbatore
641007

Alerts

Be the first to know and let us send you an email when Vetha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vetha:

Shortcuts

Share

Category