*_அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்_*
👆சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
*அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🎊*
Peacock Day Care Coimbatore
Our Special:
•Little Reader
Basic Maths
Magic English
Strider Training
• Oil Massage & Child Bath
• Pre-School preparation are provided
பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க.
1. யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்.
2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம்.
3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.
4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.
5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.
6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்
7. எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.
8. நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.
9. அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.
10. இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை.
Happy Teacher's Day..
Difference between a Guru and a Teacher
A teacher takes responsibility for your growth.
A Guru makes you responsible for your growth.
A teacher answers your questions.
A Guru questions your answers.
A teacher helps you get out of the maze.
A Guru destroys the maze.
A teacher prepares you for the outer journey.
A Guru prepares you for the inner journey.
A teacher explains the world and its nature to you.
A Guru explains yourself and your nature to you.
A teacher boosts your ego.A Guru punctures your ego.
A teacher instructs you.
A Guru constructs you.
A teacher sharpens your mind.
A Guru opens your mind.
A teacher reaches your mind.
A Guru touches your spirit.
A teacher gives you knowledge.
A Guru makes you wise.
A teacher instructs you on how to solve problems.
A Guru shows you how to resolve issues.
A teacher is a systematic thinker.
A Guru is a lateral thinker.
A teacher will punish you with a stick.
A Guru will punish you with compassion.
A teacher is to pupil what a father is to son.
A Guru is to pupil what mother is to her child.
One can always find a teacher.
But a Guru has to find and accept you.
Let us honor both,
the Teachers and the Gurus in our life.
HAPPY TEACHER'S DAY...
The mediocre teacher tells;
the good teacher explains;
the superior teacher demonstrates;
and the great teacher inspires.
Thanks for all my Teacher being my inspiration at all times.
Happy Teacher's Day 2023
படித்ததில் பிடித்தது
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு ஏழை. ஒரு மாதா கோயிலில் மணி அடிக்கும் வேலையை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறான். அந்த மாதா கோயிலுக்கு ஒரு புதிய பாதிரியார் வருகிறார். அவர் மணி அடிக்கும் ஆள் எழுதப்படிக்கத் தெரியாதவன் என்பதை அறிந்து, எழுத படிக்கத் தெரியாத ஒருவர் சர்ச்சில் வேலை செய்ய அனுமதி கிடையாது. உன்னை எப்படி வேலைக்கு சேர்த்தார்கள்? இன்னும் 15 நாள் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ எழுத படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் உன்னை சர்ச் வேலையில் இருந்து நீக்கம் செய்து விடுவேன் என்று எச்சரித்து அனுப்புகிறார்.
இரவு வீடு திரும்பிய அவன் தன் மனைவியிடம் பாதிரியார் சொன்னதை வருத்தத்துடன் கூறி இத்தனை வயதுக்கு பிறகு நான் எங்கிருந்து எழுத படிக்க கற்றுக் கொள்வேன்? அதுவும் 15 நாளில் முடிகிற காரியமா? என்று கூறி வருந்துகிறான்.
அவன் மனைவி ஆறுதல் கூறி வேறு வேலை ஏதாவது பாருங்களேன் என்கிறார்.
இந்த மணி அடிக்கும் வேலையைத் தவிர எனக்கு வேறு என்ன வேலை தெரியும் என்று வருத்தமுடன் சொல்லிக் கொண்டே இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே நடந்து சற்று தூரம் சென்றான். மன அமைதி பெறலாம் என்ற எண்ணத்தில் கால் போன போக்கில் நடந்தான். ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் வழியில் கடை ஏதுமில்லை. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகே ஒரு கடை இருக்கிறது. அங்கு சென்று சிகரெட் பிடித்து விட்டு வீடு திரும்புகிறான். திரும்பும் வழியில் மீண்டும் ஒரு சிகரெட் பிடிக்க தோன்றுகிறது. ஆனால் திரும்பவும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
இப்படி அவன் நினைத்த வேளையில் ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த ஒரு கிலோமீட்டர் தூர இடைவழியில் நாம் ஒரு சிறு கடை போட்டு சிகரெட் , பீடி விற்றால் என்ன? இந்த யோசனையில் மறுநாள் ஓரிடத்தில் தரையில் துணி விரித்து சிகரெட், பீடி தீப்பெட்டி ஆகியவஒற்றை விற்க தொடங்குகிறார். விரைவிலேயே அது ஒரு பெட்டி கடையாக வளர்ந்து பிறகு எல்லா பொருட்களும் விற்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகி விடுகிறது.
பின்னர் நகரின் முக்கிய இடங்களில் அது கிளைகளை உண்டாக்கி அக்கம் பக்கத்து ஊர்களிலும் கிளை பரப்புகிறது. இப்போது அவன் குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்களுள் ஒருவன். வங்கியில் அவன் பணம் கோடிக்கணக்கில் சேர்ந்திருக்கிறது.
அந்த வங்கிக்கு புதிதாக ஒரு மேனேஜர் வருகிறார். இவன் கணக்கில் ஏகப்பட்ட பணம் வெறுமனே முடங்கி கிடப்பது பார்த்து இதை அதிக வட்டி கிடைக்கும் திட்டங்களில் அவர் முதலீடு செய்யலாமே என்று கூறி அவனை வரவழைத்து விஷயத்தை சொல்கிறார்.
இவன் வங்கி மேனேஜரை பார்த்து எனக்கு வங்கியில் உள்ள முதலீட்டு திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. அதனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சும்மா போட்டு வைத்திருக்கிறேன் என்கிறான்.
அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் இதோ இந்த விண்ணப்பத்தில் ஒரு கையெழுத்து மட்டும் போடுங்கள். மற்றதை வங்கி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் என்கிறார் மேனேஜர்.
அவன் எனக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. நான் எழுதப் படிக்கத் தெரியாதவன் என்கிறான். மேனேஜர் ஆச்சரியத்துடன் என்ன உங்களுக்கு எழுத படிக்க தெரியாதா? எழுதப்படிக்கத் தெரியாமலே இவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கிறீர்களே இன்னும் எழுத படிக்க தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று சொன்னார்.
அவன் அமைதியாகச் சொன்னான் எழுத படிக்க தெரிந்திருந்தால் நான் மாதா கோவிலில் மணி அடித்துக் கொண்டிருப்பேன்.
இது உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மாபாசான் அவர்கள் அவர்களுடைய ஒரு சிறுகதை.
இந்த கதை உணர்த்தும் உண்மை தனக்கு மாதா கோயிலில் மணி அடிக்கும் வேலை போய்விட்டதே என்று மனம் குலைந்து போகாமல் அவன் உறுதியுடன் அடுத்த கட்ட வேலையில் ஆர்வத்துடன் இறங்கியது.
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லை. சாதனைக்கான ஆதார சக்தி உங்களுக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் உறைந்து கிடக்கிறது. அதை தூண்டிவிட்டு எழச் செய்தால் நீங்கள் எதிர்பார்த்திராத அசுர உயரத்திற்கு உங்களை கொண்டு செல்லும் என்பதே நிதர்சனம்.
05/09/2020
11/03/2020
👏👏👏👏
தினமும் இருசக்கர வாகனத்தில் தன் மகள் அனுஷாவைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் அந்த அப்பா, ஒரு வித்தியாசமான விஷயத்தைச் செய்கிறார்.
மகள் படிப்பது இரண்டாம் வகுப்பு. சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர்ப்பலகையைப் படிக்கச் சொல்வார்.
பின்னர், அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று சொல்லிக்கொண்டே போவார். முக்கியமாக, அந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் பற்றி நிறைய சொல்வார்.
உதாரணமாக ஒரு தேநீர் கடை... "எனக்குத் தெரிஞ்சு இவர் இங்கே 10 வருஷமா கடை வெச்சிருக்கார்.
தினமும் காலையில் 6 மணிக்கே திறந்துவிடுவார். அதுக்காக, 5 மணிக்கே எழுந்து வந்துவிடுவார். ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை செய்கிறார். அதுல முக்கால்வாசி நேரம் நின்னுகிட்டேதான் இருப்பார். நீ கிளாஸ்ல உட்கார்ந்துப்பே. நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். ஆனா, இவர் உட்கார்ந்து செய்ய முடியாது. நின்னுட்டே செஞ்சாதான் வேலை நடக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வைக்காம சுறுசுறுப்பா டீ கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.''
இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் எனச் சொல்வார். அனுஷாவும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பாள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அழைத்துச் செல்வார்.
ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது. உடனே எழுந்த அனுஷா, அதுபற்றி தனக்குத் தெரிந்ததை அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போனாள்.
அது வெறும் தகவல்களை... அறிவை வெளிப்படுத்துவதாக மட்டுமல்ல. ஓர் அற்புதமான குழந்தைப் பாடலை பாடுவதுபோல இருந்தது. அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம் ஆகியவை வெளிப்பட்டன.
நம் குழந்தைகளுக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்கட்டும். பெற்றோராகிய நாம் ஆசிரியராக மாறி, கற்றுக்கொடுக்க வேண்டியது இவைதான். நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு மனிதர்களை, அவர்களின் பணிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம். அதேநேரம், எப்படிச் சொல்லிக்கொடுக்கிறோம் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
"சரியா படிக்கலைன்னா இப்படித்தான் நீயும் கூலி வேலை செய்து கஷ்டப்படணும்'' என்கிறோம்.
அதாவது, குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன்மூலம் பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். ஆனால், அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும் குறைகிறது.
இது சரியான வழிமுறையா? ஒர் அலுவலகத்தில் கழிவறையைச் சுத்தம் செய்பவர் ஒரு வாரம் வராவிட்டால் என்ன ஆகும்?
இங்கே எல்லாப் பணிகளும் முக்கியமானவையே. எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
அதற்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களை எல்லாம் தவறாமல் பயன்படுத்தி நம் குழந்தைகளுக்கு வாழ்வியல் ஆசிரியராக மாற வேண்டும்.
ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருக்கும்போது, ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது, ஒரு கடைவீதியில் பொருள் வாங்கும்போது... இப்படி எங்கெல்லாம் மனிதர்களை, அவர்களின் பணிகளை, அதன் முக்கியத்துவத்தைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சொல்லுங்கள். அவர்களுக்குள் அறிவாக மட்டுமன்றி, மனிதநேயமாகவும் அதைப் பதியுங்கள்.
பெற்றோராக நாம் எப்போது வெற்றியடைகிறோம் தெரியுமா? நம் குழந்தை வளர்ந்து பெரிய அலுவலகத்தில் பெரிய பதவியில் அமரும்போது அல்ல. அந்த அலுவலகத்துக்குள் நடக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காகப் பரபரப்பாகச் செல்லும்போது, வழியில் தரையைச் சுத்தம் செய்துகொண்டிருப்பதைக் கண்டால், அந்தக் கால்கள் தயங்கி நிற்க வேண்டும். சுத்தம் செய்பவரிடம் மன்னிப்புக் கேட்பது போன்ற ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, சற்றே ஒதுங்கியோ, பக்குவமாகவோ நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
அங்கேதான் பெற்றோராக நாம் வெற்றிபெறுவோம்!
🙏🙏🙏🙏🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
No 168/2N, Vadavalli Village, Marudhamalai Road, Kalveerampalayam
Coimbatore
641046
Opening Hours
| Monday | 8am - 4pm |
| Tuesday | 8am - 4pm |
| Wednesday | 8am - 4pm |
| Thursday | 8am - 4pm |
| Friday | 8am - 4pm |