04/05/2024
தாமரைகளை காணவில்லை!
கானல் நீர் ஆகிப்போன திண்மையின் உரசல்கள்!
மகிழ்வின் உச்சத்தில் தென்பட்ட மேகங்களின் குழைவு!
நேசத்தின் தடாகம் வற்றிவிட்டது!
பாரெங்கும் படர்ந்து இருக்கும்
தாமரைகளைக் காணவில்லை!
நிலவின் காத்திருப்பு ஒவ்வொரு கணங்களிலும் பூத்திருக்கிறது!
கதிரவனுக்கு ஒரே கவலை!
காதல் நதிகள் ஒய்யாரமாய் ஒளிந்து கொண்டன!
அருவிகள் சில மலைகளின் நடுவே வறண்டு விட்டன!
குன்றுகள் மாயமாகி விட்டன!
வற்றாத ஜீவ நதிகள் சில நேரங்களில் குன்றுகளை சுற்றி வளைத்து சமுத்திரத்தை நோக்கி தீராக் காதலோடு பயணிக்கின்றன!
ஏமாற்றங்களில் சிக்கி தவிக்கும் ஜீவ நதிகளது பயணங்கள்!
இடர்பாடுகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இயற்கை இயங்குகிறது!
சோலைவனங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன!
பாலைவனங்கள் சோலை வனங்களாய் உருமாற்றம் பெற்று விட்டன.
(படைப்பு: மங்கலபிரதாபன் முரளிதரன்)
(Copyright: © Mangalaprathaban Muralidharan,May04,2024)
( ® All rights reserved)
#மங்கலபிரதாபனின்_கவிதைகள்