SFI Tamilnadu

SFI Tamilnadu

Share

Students Federation of India - Tamilnadu State Committee கல்வியின் நோக்கம் சமுதாயத்தை பற்றி சிந்திக்க கூடிய மாணவர்களை உருவாக்குவதே...SFI

24/06/2026

உயர்கல்வி உரிமைக்காக போராடிய SFI பீகார் மாநிலத் தலைவர் தோழர் காந்தி குமாரி உள்ளிட்ட 40 தோழர்களை கைது செய்ததை SFI தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கின்றோம்!!

நலந்தா மாவட்ட மாணவர்களின் உயர்கல்வி உரிமைக்காக அறவழியில் போராடிய இந்திய மாணவர் சங்கம்(SFI) தோழர்களை மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக தாக்கி அராஜகமான முறையில் கைது செய்து அடக்குமுறையை கையாண்ட பீகார் காவல்துறையும் , பீகார் மாநில அரசாங்கத்தையும் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

நலந்தா மாவட்டத்தில் ஒரு பட்டப்படிப்புக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டதின் விளைவாக கல்லூரி அமைக்க அனுமதி கிடைத்த பின்னர், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பு மாணவர்களும் எளிமையாக வந்து கல்வி கற்கும் சூழல் உள்ள நகர் பகுதியில் கல்லூரி அமைய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ஆளும் கட்சியின் பாஜக தலைமையிலான NDA கூட்டணி சட்டமன்ற உறுப்பினரின் (MLA) அழுத்தத்தின் காரணமாக கல்லூரியின் இடத்தை லோதிப்பூருக்கு மாற்ற முயற்சி நடைபெற்றது. இது அனைத்து மாணவர்களும் கல்வி கற்கும் சூழலை மறுக்கும் செயலாகும். இதனை கண்டித்து ஜூன் 18 அன்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட, SFI பீகார் மாநிலத் தலைவர் தோழர் காந்தி குமாரி, நலந்தா மாவட்டச் செயலாளர் தோழர் சாவித்ரி குமாரி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர் சங்க தோழர்களின் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, சாலைகளில் மாணவர்கள் என்று கூட பாராமல் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்துள்ளது. இதுவரை விடுதலை செய்யவில்லை.மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி தாக்கி கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலாகும்.

பொதுவாக கல்வி உரிமைக்காக சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து ஜாமீன் கூட வழங்காமல் சிறையில் அடைப்பது, தேச துரோக வழக்கு போடுவது, போராடும் மாணவர்கள் வீட்டை புல்டோசர் மூலம் இடிப்பது என பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களில் 18,000 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பல குளறுபடிகள் நடந்தும் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் திணிக்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை 2020 மூலம் மாநில கல்வி உரிமையை பறிக்கிறது. நாடு முழுவதும் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.காலிபணியிடங்களை நிரப்ப எந்த அறிவிப்பும் இல்லை. மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல மாணவர்களுக்கு கல்வி என்பது எட்டா கனியாகவே உள்ளது.இதுவே இன்றைய நிலை. இதற்கு எதிராக மாவட்டம், மாநிலம் துவங்கி நாடு முழுவதும் கல்வி உரிமைக்காக போராடும் அமைப்பு இந்திய மாணவர் சங்கம்.

போராட்டத்தை ஒடுக்குவதாலும் மாணவர்கள் மீதும் SFI தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தினாலும் எவ்வளவு அடக்குமுறை செய்தாலும் அவற்றிலிருந்து மீண்டெழுந்து எப்போதும் கல்விக்காக எங்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். தற்போது கைது செய்யப்பட்ட பீகார் மாநில தலைவர் காந்தி குமாரி, மாவட்ட செயலாளர்
சாவித்ரி குமாரி உள்ளிட்ட 40 தோழர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது. இல்லையெனில் போராட்டத்தை முன்னெடுப்போம் என SFI எச்சரிக்கிறது.

பீகார் அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு மாணவர்கள்,இளைஞர்கள்,கல்வியாளர்கள் குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

S. மிருதுளா
மாநில தலைவர்

T. சம்சீர் அகமது
மாநில செயலாளர்

Photos from SFI Tamilnadu's post 24/06/2026

தர்மபுரி பாலக்கோடு அருகே நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி இல்லத்திற்கு சென்று‌ ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

இதில் மாநில செயலாளர் சம்சீர் அகமது, மாநில குழு உறுப்பினர் டார்வின், தர்மபுரி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பங்கேற்றனர்.

Photos from SFI Tamilnadu's post 23/06/2026

22/06/2026
இன்று கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரியில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும்,
சமீபத்தில் நடைபெற்ற
நீட் தேர்வு குளறுபடிகளை
கண்டித்தும் ,
அதற்கு எதிராக போராடிய மாணவர்களை
தமிழ்நாடு காவல்துறை அடாவடியாக கைது செய்வதை கண்டித்தும்,
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்
என வலியுறுத்தி கல்லூரியின் கிளை தலைவர் சுதாகர் தலைமையில் கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் தோழர் தங்கராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக நன்றி உரை
தோழர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய மாணவர் சங்கம்
கரூர் மாவட்டம்

23/06/2026

🟥NEET Complaint Cell🟥

This complaint portal is initiated by the Students' Federation of India (SFI). As part of the massive mismanagement and corruption associated with the conduct of NEET exams, students have faced serious difficulties. These serious issues caused by systemic failures should be resolved by the government. Therefore, we request you to register your complaints here. We will ensure legal support for complainants and will ensure that the issue is raised inside the Parliament of India.

Together, we can fight to resolve this legally and politically.

👇👇👇👇👇👇👇👇

https://enoughisenough.sficec.in/

23/06/2026

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தியும், சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தலைவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

Photos from SFI Tamilnadu's post 22/06/2026

நீட் தேர்வின் குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், Viksit Bharat Shiksha Adhishthan Bill 2025 யை தடை செய்ய வலியுறுத்தியும் சிறப்பு கருத்தரங்கம் தூத்துக்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

Photos from SFI Tamilnadu's post 21/06/2026

நீட் தேர்வால் 12 மாணவர்களின் உயிர் பறிப்பு, ஒரு வாரத்தில் மட்டும் 2 மாணவிகள் நீட் தேர்வின் மன அழுத்தத்தால் தற்கொலை

நீட் தேர்வை ரத்து செய்யவும், ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் கோரியும், சென்னையில் போராடிய SFI தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் தமுக்கம் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Photos from SFI Tamilnadu's post 21/06/2026

ரத்து செய்ய வலியுறுத்தியும் , ரத்து செய்ய கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் சங்கத் தோழர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும் மதுரை மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Photos from SFI Tamilnadu's post 21/06/2026

தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.போராட்த்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை குண்டுகட்டாக கைது செய்தனர்.

20/06/2026

நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களுக்கு கைது செய்யப்பட்ட இடத்தில் SFI - இந்திய மாணவர் சங்கம் சார்பாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


57/21 Arunodhaya Complex, E. V. R. High Road, Periyamed
Chennai
600003