01/09/2022
சாதிகள் நன்றோ?
முதலில் வந்த மனிதன் யாரோ?
முன்னோர் கூறும் ஆதம் பேரோ?
அதனை ஏற்பின், அவனினம் ஒன்றோ?
அப்படியாயின், சாதிகள் நன்றோ?
எதனை வாங்கக் கோவில் சென்றாய்?
ஏன்தான் இந்தத் தீமை கொண்டாய்?
கதறி அழுகிறார்; ஏழைக்கிரங்கு.
காணும் சாதிகள், சொறி, சிரங்கு!
-கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com
01/09/2022
நாலடி நற்செய்தி!
ஒரு முறை கூட!
ஒரு முறைக்கிருமுறை பார்ப்பது நலமே.
தெரு இடம் இருக்க, போனது வலமே.
மறுமுறை நோக்கித் திருந்தும் மனமே,
இருமுறை பிறந்த இறையின் இனமே!
-செல்லையா.
31/08/2022
பொய்யா? மெய்யா?
உள்ளே இருப்பது துரும்பு.
ஊரில் உரைப்பது இரும்பு.
வெள்ளி, பொன்னாய் நினைத்து,
விழாதீர், அலகை அணைத்து.
எள்ளிலிருப்பது எண்ணெய்;
எடுக்கும் உழைபே உண்மை.
கொள்ளி வைக்கும் பொய்மை.
கொள்வீர் இறையின் மெய்மை!
-கெர்சோம் செல்லையா.
29/08/2022
சொல்லும் செயலும்!
நற்செய்தி: யோவான் 8:41-42.
41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு. அவர் தேவன் என்றார்கள்.
42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
நல்வழி:
அன்பே இறைவன் என்று மொழிவார்;
ஆயினும் அன்பை அவர் பொழியார்.
தந்தை கடவுள் என்றும் விளிப்பார்;
தமது செயலால் மகன் பழிப்பார்.
இன்றே தவற்றை உணர்ந்திடுவார்,
இயேசுவோடு பிணைந்திடுவார்.
நன்றாய் அன்பில் வளர்ந்திடுவார்,
நலமிலா தீதும் களைந்திடுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
26/08/2022
இயேசு போன்று நடப்போம்!
நற்செய்தி: யோவான் 8:39-40.39.
அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
40. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
நல்வழி:
தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,
தவறு என்று சொல்லேன் நான்.
முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,
முழுவதும் இன்று அறுப்பவன் யான்.
மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,
மனிதருக்கென்ன செய்தேன் நான்?
எந்தையிறையே, என்னைத் தந்தேன்;
இயேசு போன்று நடக்கத்தான்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
24/08/2022
பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
நற்செய்தி: யோவான்: 8:37-38.
37. நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
38. நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
நல்வழி:
பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
பெரியோர் என்பின் சிந்திப்பீர்.
கற்றோர் என்றால் கொலை செய்வாரா?
கயமை வெறியினை நிந்திப்பீர்.
தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன?
தூயோன் இயேசுவைச் சந்திப்பீர்.
உற்றார் உறவாய் யாவரும் வருவார்;
ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
22/08/2022
அடிமையா? பிள்ளையா?
நற்செய்தி: யோவான் 8: 35-36.
35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
நல்வழி:
திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன்.
தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.
பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன்.
பழியில் விழவே கெட்டிருந்தார்.
பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன்.
பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.
விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன்.
விண் மகவாகத் தொட்டிருந்தார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
20/08/2022
அன்பே இறைவன்!
கொல்லவும், அழிக்கவும் ஒருவன் வந்தால்,
கோனாய், இறையாய்ப் பாராதீர்.
வெல்லவும், வீழ்த்தவும், சூது புனைந்தால்,
விரும்பும் அறமாய் வாராதீர்.
சொல்லவும் செய்யவும் பழியும் தந்தால்,
சொல்கிற அவன்பின் சேராதீர்.
எல்லையும், முடிவும் இல்லான் ஒருவன்;
இவனன்பு விட்டு மாறாதீர்!
-செல்லையா.
16/08/2022
தீவினைக்கு அடிமை!
நற்செய்தி: யோவான் 8: 33-34.
33. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நல்வழி:
யாருக்கும் அடிமை இல்லை என்று,
யாவரும் கூறும் பழக்கமுண்டு.
பேருக்குப் பின்னால் சாதியும் போட்டு,
பெருமை காட்டும் வழக்கமுண்டு.
நேருக்குந்நேராய் இறை முன் வந்தால்,
நெஞ்சின் அழுக்கு புரிந்துவிடும்.
ஊருக்குத் தெரியா அடிமைத்தனங்கள்
ஓடிட, விடுதலை தெரிந்துவிடும்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
15/08/2022
விடுதலை நாள் வாழ்த்து!
பதவி நாளில் எதையும் அள்ளும்
பண்பு கொண்ட பாரதம்,
உதவி நாடும் ஏழை எள்ளும்;
உண்மை தேடிப் பார் அதம்.
இதனை இன்று எடாது தள்ளும்,
இந்தியர்கள் வளர்விதம்,
மதம் என்றே பெயர் கொள்ளும்.
மா அன்புதான் நல்லிதம்!
-செல்லையா.
அதம்= தாழ்வு
இதம் = இனிமை
14/08/2022
மெய்மை தரும் விடுதலை!
நற்செய்தி: யோவான் 8:30-32.
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
நல்வழி:
மெய்மை தருகிற விடுதலையொன்றே,
மேன்மையான விடுதலையாம்.
செய்கை, வாக்கில் தூய்மை என்றே,
செயல்படாதோர் அடிமைகளாம்.
எய்தல் வைத்து இலக்கை இன்றே,
எடுத்துக் காட்டி முடிக்கும் நாம்,
பொய்மை விட்டு விடுதல் நன்றே;
புரியார் வாழ்வும் வெடிக்குமாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
12/08/2022
நாலடி நற்செய்தி!
உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;
உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.
கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,
கரையும் என்றே, தப்பினை மாயும்!
-செல்லையா.