Roja Muthiah Research Library

Roja Muthiah Research Library One of the world's finest libraries of Tamil publications | Preserving the past | indusscript.in

Roja Muthiah Research Library (RMRL) is a resource and research hub for South Indian Studies covering diverse fields such as humanities, social sciences and popular culture. The RMRL holds a unique collection and is widely recognized as a model library in India. Located in Chennai RMRL’s collection comprises 250000 items and aims at continually preserving and expanding the historic archive.

சென்னைப் பொக்கிஷங்கள் — 25நேப்பியர் பாலம்அன்றைய சென்னையில், பிரிட்டிஷார் கட்டிய பாலங்களில் வளைவுகள் பாலத்தின் கீழே அமைந்...
25/08/2026

சென்னைப் பொக்கிஷங்கள் — 25

நேப்பியர் பாலம்

அன்றைய சென்னையில், பிரிட்டிஷார் கட்டிய பாலங்களில் வளைவுகள் பாலத்தின் கீழே அமைந்திருந்தன. கூவம் கடலில் சேரும் இடத்தில் அமைந்திருக்கும் நேப்பியர் பாலமோ, அழகிய வளைவுகளைப் பாலத்தின் மேலே தாங்கியிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் மரப்பாலமாக இருந்த இது, 1869இல் கவர்னர் ஃபிரான்சிஸ் நேப்பியர் காலகட்டத்தில் இருப்புப் பாலமாக மேம்படுத்தப்பட்டது. 1943இல் இன்றைய வடிவத்துக்குத் திருத்தி அமைக்கப்பட்ட நேப்பியர் பாலம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக நிற்கிறது.

படம்: சென்னை மாநகராட்சி ஆண்டு மலர் 1950-51

சென்னைப் பொக்கிஷங்கள் — 24மை லேடீஸ் கார்டன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அன்றைய பக்கிங்ஹாம் கால்வாயின் மறுகரையில் சும...
24/08/2026

சென்னைப் பொக்கிஷங்கள் — 24

மை லேடீஸ் கார்டன்

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அன்றைய பக்கிங்ஹாம் கால்வாயின் மறுகரையில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் அமைந்திருந்தது பீப்புள்ஸ் பார்க்; மை லேடீஸ் கார்டன் (My Ladye's Garden) என்ற பூங்காவும் இதன் ஓர் அங்கமாக இருந்துவந்தது. மெட்ராஸின் நுரையீரல் என்று போற்றத்தக்க வகையில் மரங்கள் அடர்ந்து செழித்திருந்தது இந்தப் பூங்காவின் பெயரால் அப்பகுதி பூங்கா நகர் என்று வழங்கப்படலானது. அப்பூங்காவில் ஒரு காட்சி.

படம்: சென்னை மாநகராட்சி ஆண்டு மலர் 1950-51

வரலாற்றில் 20 சதுர அடிகள்!“தமிழ் நெடுஞ்சாலை” ஊடாக மட்டுமே பயணித்து, உலகளாவிய அனுபவங்கள் பெற்று, 34 ஆண்டுகள் இந்தியக் குட...
24/08/2026

வரலாற்றில் 20 சதுர அடிகள்!

“தமிழ் நெடுஞ்சாலை” ஊடாக மட்டுமே பயணித்து, உலகளாவிய அனுபவங்கள் பெற்று, 34 ஆண்டுகள் இந்தியக் குடிமைப் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. ஆர். பாலகிருஷ்ணன், தன்னை ஒரு ‘தமிழ் மாணவன்’ என்று மட்டுமே எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்பவர். இவர் தற்போது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலராகவும் சிந்துவெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.

தமிழ் அறிவு வளாகம் என்கிற வரலாற்றுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள இவர் உரைகள், விருதுகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமக்கு வழங்கப்படும் நல்கைகளைத் தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கே அளித்துக்கொண்டு வருகிறார்.

பிறந்தநாள், மணநாள் உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு நன்கொடை வழங்க வலியுறுத்திவரும் அவர், தன்னுடைய குடும்ப நிகழ்வுகளைக் கொண்டாடும் வகையில் தொடர்ந்து நன்கொடை வழங்கிவருகிறார்.

இந்நிலையில், தமது 40ஆம் ஆண்டு மண நாளை முன்னிட்டு (24 ஆகஸ்ட் 2026) பாலகிருஷ்ணன் - சுஜாதா பாலகிருஷ்ணன் இணையர் 20 சதுர அடிகளுக்கான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். பாலகிருஷ்ணன் அவர்கள் இணையர் சுஜாதா பெயரிலும், சுஜாதா அவர்கள் இணையர் பாலகிருஷ்ணன் பெயரிலும் நன்கொடை வழங்கி மகிழ்ந்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் - சுஜாதா பாலகிருஷ்ணன் இணையருக்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர்கள் சார்பில் மண நாள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னைப் பொக்கிஷங்கள் — 23வாசகர் வட்டம் | Book Venture1960களில் தமிழ்ப் பதிப்புலகில் புத்தக உள்ளடக்கத்திலும் உருவாக்கத்த...
23/08/2026

சென்னைப் பொக்கிஷங்கள் — 23

வாசகர் வட்டம் | Book Venture

1960களில் தமிழ்ப் பதிப்புலகில் புத்தக உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் ஒரு தனித்துவமான முயற்சியாக உருவானது வாசகர் வட்டம் - Book Venture. சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் மகள் என்றாலும், பதிப்பகத்தின் பெயரால் பெரிதும் அறியப்பட்டவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி. தமிழ்ப் பதிப்புலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில், தனது கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து இவர் மேற்கொண்ட பல பதிப்புப் பரிசோதனைகள் அக்காலட்டத்தின் முன்னோடி முயற்சிகள்.

படம்: தீபம் ஆண்டு மலர் (1967)

வாசகர் வட்டம் பற்றி நூலகச் செய்திமடல் ‘சொல்’லில் வெளியான கட்டுரை: https://shorturl.at/e7nq1

சென்னைப் பொக்கிஷங்கள் — 22சென்னை நாள்ஆனந்த விகடன் (16-5-1971) சென்னை மாவட்ட மலரில் வெளியான உவமைக் கவிஞர் சுரதாவின் ‘அறிம...
22/08/2026

சென்னைப் பொக்கிஷங்கள் — 22

சென்னை நாள்

ஆனந்த விகடன் (16-5-1971) சென்னை மாவட்ட மலரில் வெளியான உவமைக் கவிஞர் சுரதாவின் ‘அறிமுகமே தேவையில்லை’ என்கிற சென்னை வாழ்த்துப் பாடலுடன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்ப்பில் அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-

இன்று நிறைவடையும் ‘வணக்கம் சென்னை’ பார்வையிடவும் மாலை நடைபெறவிருக்கும் Madras MBS Choir சேர்ந்திசைக் கச்சேரிக்கும் அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் வருக!

இன்றைய நிகழ்வு; அனைவரும் வருக!
22/08/2026

இன்றைய நிகழ்வு; அனைவரும் வருக!

Madras MBS Choir, India’s oldest Indian Choral music group, will perform at Roja Muthiah Library, Taramani, for the Madras Week Celebration on 22nd August 2026 at 5:30 PM.

All are welcome

22/08/2026

இன்றே கடைசி!

சென்னை வாரத்தை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்தும் சென்னை தொடர்பிலான புத்தகங்கள் - இதழ்கள் கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

Location: https://maps.app.goo.gl/A9hsMDendg2YMmHo6

கண்காட்சியில் நூலக வெளியீடுகள் 10% கழிவில் கிடைக்கும்!

வணக்கம் சென்னை!சென்னை வாரத்தை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்தும் சென்னை தொடர்பிலான புத்தகங்கள் - இதழ்கள்...
21/08/2026

வணக்கம் சென்னை!

சென்னை வாரத்தை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்தும் சென்னை தொடர்பிலான புத்தகங்கள் - இதழ்கள் கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

நாளை கண்காட்சி இறுதி நாள்
இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

Location: https://maps.app.goo.gl/A9hsMDendg2YMmHo6

கண்காட்சியில் நூலக வெளியீடுகள் 10% கழிவில் கிடைக்கும்!

சென்னைப் பொக்கிஷங்கள் — 21கலைத்தொழில் கல்லூரி | ‘கால வெளி’படம் 1: சென்னை அரசினர் கலைத்தொழில் கல்லூரி பற்றி கவிஞரும் விமர...
21/08/2026

சென்னைப் பொக்கிஷங்கள் — 21

கலைத்தொழில் கல்லூரி | ‘கால வெளி’

படம் 1: சென்னை அரசினர் கலைத்தொழில் கல்லூரி பற்றி கவிஞரும் விமர்சகருமான இந்திரன் எழுதிய குறுநூல்;

படம் 2: ஒரு காலகட்டம்வரை சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற எழுத்தாளர் விட்டல் ராவ், அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் ‘கால வெளி’. எழுபதுகளில் சென்னை நகரின் கலைஞர்களும் எழுத்தாளர்களும் இருந்த சூழலை விளக்கும் ஓர் ஆவணப்படமாக இந்நாவல் விளங்குகிறது.

பன்முகத்தன்மையே சென்னையின் பலம்ரோஜா முத்தையா நூலக இயக்குநர் க. சுந்தர்இந்து தமிழ் திசை - கருத்துப் பேழை சந்திப்புசென்னை ...
21/08/2026

பன்முகத்தன்மையே சென்னையின் பலம்
ரோஜா முத்தையா நூலக இயக்குநர் க. சுந்தர்

இந்து தமிழ் திசை - கருத்துப் பேழை சந்திப்பு

சென்னை வாரத்தை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்தும் ‘வணக்கம் சென்னை’ கண்காட்சியை முன்வைத்து Tamil The Hindu நாளிதழுக்கு நூலக இயக்குநர் அளித்த பேட்டி.

🔗 https://www.hindutamil.in/news/opinion/columns/exclusive-interview-with-roja-muthiah-library-director-k-sundar

Address

3rd Cross Road, CPT Campus, Taramani
Chennai
600113

Opening Hours

Monday 9:30am - 4:45pm
Tuesday 9:30am - 4:45pm
Wednesday 9:30am - 4:45pm
Thursday 9:30am - 4:45pm
Friday 9:30am - 4:45pm
Saturday 9:30am - 4:45pm

Alerts

Be the first to know and let us send you an email when Roja Muthiah Research Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Roja Muthiah Research Library:

Shortcuts

Share