செம்மை மரபுப் பள்ளி

செம்மை மரபுப் பள்ளி

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from செம்மை மரபுப் பள்ளி, School, Chennai.

உங்கள் பிள்ளைகள் எந்தக் கல்விமுறையில் பயின்றாலும், செம்மை மரபுப் பள்ளியில் பகுதிநேரமாக இணைந்துகொள்ளலாம். வார இறுதிநாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் மரபுப் பள்ளி இயங்கும். இங்கே போட்டி இல்லை, தேர்வுகள் இல்லை. சக உயிர்களோடு இணைந்து வாழும் பண்புகளையும், அஞ்சாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதே மரபுப் பள்ளியின் நோக்கங்கள். இவற்றிற்கேற்றவாறு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன

செம்மை ஆசான் பள்ளி குறித்து ஆசான் ம.செந்தமிழன் அவர்களுடன் குரு.சரவணன் அவர்களின் கலந்துரையா 15/12/2021

செம்மை ஆசான் பள்ளி
குறித்து ஆசான் ம.செந்தமிழன் அவர்களுடன் செம்மை நீர் நிறை மற்றும் நிறைவன நாதர் ஆலய ஒருங்கிணைப்பாளர் குரு.சரவணன் அவர்களின் கலந்துரையாடல் ...
https://youtu.be/toCJB78O_Ys
இது தமிழம் வலையொளிக்கான ஒரு கலந்துரையாடல்
*********************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
https://semmaivanam.org/shop/
*********************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
https://www.semmaivanam.org
https://www.facebook.com/semmaivanam
https://www.youtube.com/semmaimarabupalli
https://www.youtube.com/semmaikalvi
*********************

செம்மை ஆசான் பள்ளி குறித்து ஆசான் ம.செந்தமிழன் அவர்களுடன் குரு.சரவணன் அவர்களின் கலந்துரையா செம்மை ஆசான் பள்ளி குறித்து ஆசான் ம.செந்தமிழன் அவர்களுடன் செம்மை நீர் நிறை மற்றும் நிறைவன நாதர் ஆலய ஒருங்கிணைப...

Photos from Semmai vanam's post 31/08/2021
07/09/2020

ஆசான் ம.செந்தமிழனின் திருநெறிப் பயணம்!

”ஊர் திரும்புதல் என்பது வெறுமனே இடப்பெயர்வு மட்டுமல்ல. கருத்தும் சிந்தனையும் மரபு நோக்கித் திரும்புதல் தேவை” என்பது ஆசான் ம.செந்தமிழன் தொடர்ந்து முன்மொழிந்து நடைமுறைப்படுத்தி வரும் கருத்து.

”பெருநகர சூழலுக்கும் பெருநிறுவன அட்டவணை வேலைக்கும் இடையில் தொலைத்துவிட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க ஊர் திரும்புதலே தீர்வு” என்பதை உணர்ந்த பலரும் ஊர் திரும்புதலை நீண்ட கால விருப்பமெனக் கொண்டிருந்தனர். தற்போதைய இடர்ப்பாடுகள் பலருக்கு அவ்விருப்பத்தினை நிறைவேற்றும் வழியையும் அது தொடர்பான கூடுதல் புரிதலையும் அமைத்துக்கொடுத்துள்ளது. செம்மை சமூகத்தினர் பலர் ஏற்கெனவே ஊர் திரும்பியுள்ளனர், மற்றும் பலர் ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் வழிப்படுத்தி அரவணைக்க செம்மை ஆற்றுப்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து சந்திப்புகள் வழியாக ஊர் திரும்புபவர்களுக்கு சில அறிவுரைகளை ஆசான் வழங்கி வருகிறார்.
• நிலத்தில் அதிகப் பணத்தைக் கொட்டி முதலீடு ஆக்காதீர்கள்.
• தெரியாத ஊருக்கு திரும்பிச் செல்லாதீர்கள்.
• மரபுத் தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் வெறுமனே சேமிப்பை நம்பி ஊர் திரும்பாதீர்கள்
• பணம் என்பது தேவையற்றது அல்ல. அதே வேளை பணத்தை முன்னிறுத்திய வாழ்க்கையை வாழாதீர்கள்
என ஊர் திரும்புபவர்களை நடைமுறைக்கு நெருக்கமாக வழிப்படுத்தி ஆற்றுப்படுத்தி அழைத்துச் செல்வது ஆசானின் வழக்கம்.

அதே வேளை ஊர் திரும்பியோரின் செயல்பாடுகளைக் கேட்டறிந்து வாய்ப்பமையும்போது அவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி வழிப்படுத்துவதை மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செய்பவர் ஆசான்.

கடந்த சில மாதங்களாக ஊர் திரும்பியோரின் செயல்பாடுகள் அவர்களுக்குக் கூடுதல் வேலை மற்றும் பொருளாதாரச் சுமையைத் தரும் விதத்தில் இருப்பதைத் தொடர்ந்து கவனித்து வந்தார். அதிக அளவில் நிலத்தில் முதலீடு செய்வதும், நீர் மேலாண்மையைத் தவறாக வடிவமைப்பதும், பொருந்தாத ஊரில் வீடு கட்டுவது என தவறான முடிவுகளுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு வீடு, தொழில், நிலம், வேளாண்மை, நீர் மேலாண்மை, குழந்தைகளுக்கான கல்வி ஆகிய தளங்களில் வழிகாட்டும் விருப்பத்தில் ஆசான் தமது பயணத்தைத் தொடங்குகிறார்.

நம் மரபின் இன்றியமையாத உணர்வுப் பூர்வமான கூறான ”கோயில்” என்பது முற்றும் துறந்த துறவிகளுக்கான இடமுமல்ல, பயத்தில் இறைவனை அதிகாரியாகப் பார்க்கும் பக்திக்கான இடமுமல்ல. கோயில்கள் வாழ்க்கைக்கான இடம்! எவருள்ளும் பாகுபாடு இல்லாமல் உரிமையுடன் இறையிடம் உறவாடும் இடம்!

எனவேதான் சமூகத்தின் செயல்பாடுகளும் வாழ்க்கையும் கோயிலுடன் எப்பொழுதும் நம் மரபில் பிணைந்திருந்தன. கல்வி, உணவு சேமிப்பு, இடர்ப்பாட்டு காலத்தில் தஞ்சம், கலைகள் வளர்ப்பு, தொழில் என கோயில்களை மையப்படுத்தி சமூகம் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது. நால்வர் உள்ளிட்ட சிவனடியார்களும் மற்றும் பலரும் திருத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று பதிகங்கள் பாடினார்கள். அப்பதிகங்கள் பக்தியைப் பரப்பவல்ல. அப்பதிகங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்தன. அறிவியலைப் பதிவு செய்தன. அனைத்தையும் பதிவு செய்து ”அனைத்துக்கும் அவனே முதல்வன்” என இறைவனைக் கொண்டாடினார்கள்.

மாணிக்கவாசகர் ஒரு தேர்ந்த முதன் மந்திரியாக இருந்து மக்களைக் குறைவறக் கவனித்துக்கொண்டவர். பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியவர். பிறகு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு உலகறியப்பட்டவர்.

நமது இறையியல் மரபின் தொடர்ச்சியாக, ஆசான் தமது பயணங்களை அம்மையப்பர் கோயில்களின் வழியே அமைக்கிறார்.

ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்குள்ள கோயிலில் செம்மை சமூகத்தினரைச் சந்தித்தும், அவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியும் ஆசானின் திருநெறிப்பயணம் அமையவுள்ளது.

விருப்பமுள்ளோர் கலந்துகொள்ளுங்கள்!

பயணத்திட்டம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

*************************************************
திருநெறிப் பயணம்
மரபு வாழ்வியல் மற்றும் ஊர் திரும்புகைக்கான நெறி முறைகளை எடுத்துரைக்கும் ஆசான் ம.செந்தமிழனின் திருநெறிப் பயணம்

11-09-2020 (வெள்ளி கிழமை) - காலை 10 மணி – காங்கேயம்
கொங்கண சித்தர் குகைக்கோவில், ஊதியூர் மலை
(ஊதியூர், காங்கயத்திலிருந்து தாராபுரம் வழியில் உள்ளது)
நிகழ்விடம் ஊதியூரிலிருந்து குண்டடம் செல்லும் வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ளது (Sony crusher அருகில்)
தொடர்புக்கு:
மணி, அருண் – 8825769397
*************************** ****************************************
13-09-2020 ஞாயிற்று கிழமை - காலை 10 மணி – போடி
பரமசிவன் கோவில், போடிநாயக்கனூர்.
நிகழ்விடம் போடிநாயக்கனூர்-மூனார் தேசிய நெடுஞ்சாலையில் 5 வது கிலோமீட்டரில் (CPA கல்லூரிக்கு முன்பாக) இடது புறம் திரும்பினால் 1கிமீ தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு:
ரவி - 75581 55327

06/09/2020

மரபுக் கட்டுமானம்
கொள்கை, வடிவமைப்பு, நுட்பங்கள்
- ஆசான் ம.செந்தமிழன்

செம்மை வனத்தில் ...
மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு

2020, செப்டம்பர் 25 முதல் 27 வரை
(புரட்டாசி 9, 10, 11)

கட்டணம்: ரூ 3,000

கட்டுமானம் எழுப்புவதற்கு நேரடி செயல் வழிப் பயிற்சி தேவை. இந்த வகுப்புகள் மரபுக் கட்டுமானம் குறித்த கோட்பாடுகளை விளக்குவது மட்டுமே.

பதிவுக்கு:
பிரேமா : 9944974317
சிவா: 9845539071

விருப்பமுள்ளோர் பதிவு செய்யவும். எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது.

13/06/2020

ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தைக் காக்கலாம்!

மரபிசை, நாடகக் கலைஞர்களை அரவணைக்க வாருங்கள்!

அனைவருக்கும் வணக்கம்,
பொதுமுடக்கம் மூன்று மாதங்களாக நீடிக்கிறது. சமூகத்தின் சில பகுதியினர் கையறுநிலையில் தவிக்கின்றனர். அவர்களில் சிலரையாவது நாம் அரவணைக்க வேண்டியுள்ளது. மரபு இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகிய இரு பிரிவினரின் வாழ்க்கை சிதைந்துகொண்டுள்ளது. சித்திரை, பங்குனி ஆகிய மாதங்களில் நிகழும் திருவிழாக்கள், குடும்பநிகழ்வுகள் ஏதுமில்லை. ஆண்டு முழுமைக்குமான வருவாயினை ஒருசில நாட்களில் ஈட்ட வேண்டிய நிலைகொண்டோர் இக்கலைஞர்கள். அந்தச் சில நாட்களிலும் அவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

எந்த வகையிலும் வருவாய் இல்லை. சேமிப்பும் இல்லை, கடன் கொடுக்கவும் ஆளில்லை. நாதசுரம், தவில், பம்பை, பறை, தாளம், தபேலா, மேளம் உள்ளிட்ட எல்லாக் கருவிகளும் தீண்டும் விரல்களில்லாமல் கிடக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகால தமிழ் மரபு இசையின் தொடர்ச்சியாக வாழும் மக்கள் இவர்கள். இந்த இசைக் கருவிகளை இசைப்பதால் சமூகத்தில் ஏற்கெனவே இவர்கள் மரியாதை இழந்துவிட்டனர். இப்போது வாழ்க்கைக்கான பொருளாதாரமும் இல்லை. ஏற்கெனவே கடன் உள்ளது, வீட்டு வாடகை உள்ளது. மருத்துவச் செலவுகள் உள்ளன. இவற்றைத் தவிர்க்கவியலாது. அரசு வழங்கும் சில உணவுப் பொருட்களை மட்டும் சார்ந்து இருப்பது நடைமுறை வாய்ப்பற்றது.

செம்மை தமிழ்க் கழகத்திற்கான இசை கோப்புப் பணிகளில் இவர்களில் சிலருடன் நாம் பணியாற்றினோம். இவர்களுடைய மனநிலை, திறன் ஆகியவற்றை அந்நாட்களில் புரிந்துகொண்டோம். இவர்களிடம் நம் மரபிசையின் கூறுகள் உள்ளன. தொன்மையான குடியின் மரபுத்தொடர்ச்சி இவர்கள். சமூகத்தின் இசை வணிகத்தில் இன்று பொருளாதாரம் பெருக்கிக்கொண்டுள்ளோர் நிலையையும், இந்த தொல்மாந்தர் நிலையையும் ஒப்பிட்டால், ஒப்பாரி வைத்துத்தான் அழவேண்டும்.

நாடகக் கலைஞர்களின் நிலை இதைக் காட்டிலும் சீர்கேடு. மற்ற துறைகளில் உள்ளோருக்கு பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் கிடைத்துள்ளன. பொதுநிகழ்வுகள், கூடல்கள், விழாக்கள் நிகழும்வரை இசைக்கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள், 100 ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டுள்ள நாடகச் சபைகளின் அங்கத்தவர். பெருமைகளுக்குப் பஞ்சமில்லை, உண்ணவோ உணவில்லை!

நம் ஊரான ஆச்சாம்பட்டியில் வாழும் நான்கு மரபிசைக் கலைஞர்களுக்கு, இருமாதங்களுக்கு முன்னர், அடிப்படை உதவித்தொகை வழங்கினோம். அவர்களில் ஒருவர் சிலநாட்களுக்கு முன் செம்மைவனம் வந்து நம்மைச் சந்தித்தார். வயதில் மிகவும் முதியவர், தவில் இசைக் கலைஞர். சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, குழந்தையைப்போல கண்ணீர்விட்டார்.
சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள், வாகனங்கள் சீறிப்பாய்கின்றன, மீண்டும் நகைக் கடைகளும் துணிக்கடைகளும் செயல்படுகின்றன. எல்லோர் கைகளிலும் இணைய இணைப்புடன் அலைபேசிகள் உள்ளன. புவியின் மறுமுனையில் உள்ள நாட்டின் நிகழ்வுகளை இங்குள்ளோர் அறிந்துகொள்கின்றனர். ஆனால், அருகில் இருப்பவருடைய பசியையும், அவமானத்தையும் அறிந்துகொள்ள ஆளில்லையே! இவ்விதமான அகந்தையின் விளைவாகத்தான் ஊழி நிகழ்கிறது. இந்நிலையிலும் அன்பிலாது இருந்தால், மனிதகுலம் மன்னிப்புகேட்கும் வாய்ப்பும் இல்லாதொழியும்.

நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளோம், ‘ஊழி எனப்படுவது அழிவுமட்டுமல்ல, ஆக்கமும் அழிவும் ஒருசேர நிகழ்வது’ ஆகும். பொருந்தாத சூழல்களும் உயிரினங்களும் அழிக்கப்பட்டு, பொருந்துவன படைக்கப்படுகின்றன. மனித இனம், தம்முடைய குணங்களில் உள்ள பொருந்தாதவற்றை அழித்து, அன்பு செய்ய விழைய வேண்டும். இதுவே ஊழியில் பொருந்துதலின் அடிப்படை.

ஒருவயது குழந்தையின் பிறந்த நாளுக்கு இச்சமூகம் செய்துகொண்டிருந்த செலவுகளைத் திரட்டினாலே, நாட்டில் உள்ள எல்லா மரபிசைக் கலைஞர்களையும், நாடகக் கலைஞர்களியும் அரவணைத்துக் காக்கலாம். இவர்கள் வீட்டின் விழாக்களுக்கும் சாவுக்கும் பறையடித்தவர்களும் நாதசுரம் வாசித்தவர்களும் இன்று பட்டினியில் கிடக்கின்றனர். இதைப் பற்றி இச்சமூகத்தினருக்கு என்ன அக்கறை உள்ளதெனப் பார்க்கிறோம். புறக்கணிப்புதான் நீக்கமற நிறைந்துள்ளது.
பொதுச் சமூகம் வேறு, செம்மைச் சமூகம் வேறு என்பதை நாமறிவோம். மற்றவர்கள் ‘உதவி செய்வதாக’க் கருதுவார்கள். நாம் உதவி என்று ஏதுமில்லை என்கிறோம்.

உரிமை உள்ளோரின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவது உதவி அல்ல, அரவணைப்பு!

அம்மையப்பர் நமக்கு உணர்த்தும் இறையியலில் ‘எவ்வுயிரும் எம்முயிரே’ என்பதுவே சாரமான கொள்கை.
எண்ணற்ற குழந்தைகள் பட்டினியிலும், சூழல் நெருக்கடியிலும் திணறுகின்றனர் என்றால், அந்த வேதனையை நம் சிந்தனை உணரும். அதைப் புறக்கணிக்கக் கூடாது. நிலம் வறண்டால், மேகம் வருவது இயல்பு. பிறர் வாடினால் நாமும் வாடுதலும் அதே இயல்புதான்.

மரபிசைக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் நம்மை அழைக்கவில்லை. அவர்களுக்கு நம்மைத் தெரியாது. ஆனால், நமக்கு அவர்களிடம் உள்ள உரிமையினால் நாமே முன்வந்து அவர்களை நோக்கிச் செல்கிறோம். இந்த உரிமை நாமாக வகுப்பதல்ல, படைத்தவரின் அருள்.
அரவணைக்க வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.

செம்மை அறக்கட்டளையின் வழியாக, செம்மை நெறிச் செயல்திட்டத்தின் கீழ், தூய்மைப் பணியாளருக்கான காலை உணவு வழங்குகிறோம். தஞ்சாவூர், சிதம்பரம், நெல்லை பாபநாசம் ஆகிய பகுதிகளில் நெறி செயல்படுகிறது. திருச்சியில் செம்மை நெறி இரு மாதங்களுக்குச் செயல்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நிறைவுற்றது. பெங்களூருவில், புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கான காலை உணவு வழங்கப்பட்டது. ஏற்கெனவே 40 இசைக்கலைஞர்களுக்கு பங்களிப்புத்தொகை வழங்கினோம்.
தமிழகம் முழுவதும் பல்லாயிரம் இசைக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் உள்ளனர். இந்தப் பொதுமுடக்கம் முடிவுக்கு வருகையில், அவர்களில் எவ்வளவுபேர் எஞ்சுவார்கள் எனத் தெரியாது. அன்றாடக் கூலி வேலைக்குச் சென்று உயிர் வாழும் நிலை அவர்களுக்கு ஏற்படும். கலைமீதும் மரபின் மீதும் செருக்கு கொண்ட கலைஞர்கள் அதையும் செய்யாமல் மன உளைச்சலில் வீழநேரிடலாம். எதுவாகினும், இந்தப் போக்கில் அன்புகொண்டோர் தலையிட்டாக வேண்டும்.

செம்மாந்த மரபின் கலைகளைப் பற்றிக்கிடக்கும் மனிதர்கள் பசிக்கும், இருக்கும் வீட்டின் வாடகைக்கும் அஞ்சி கூலிவேலைக்குச் சென்றால், அது இந்த மரபின் வீழ்ச்சி. இவ்வளவு பொருளாதாரம் புழங்கும் இந்தச் சமூகத்தில் சில ஆயிரம் மரபுக் கலைஞர்கள் ’அரவணைக்க ஆளின்றி வீழ்ந்தார்கள்’ என்ற அவலத்தை நாம் அனுமதிக்கக் கூடாது.

சூழல் சீராகும்வரை, அவர்கள் குடும்பங்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். என் சிந்தனையில் உள்ள விருப்பம் ஆழமானது, மிக விரிவானது. அது கருவாக இருக்கட்டும். அம்மையப்பரின் அருள் அதனை வெளிப்படுத்தி வினையாக்கட்டும்.
உங்களிடம் உள்ள உரிமையினால் உங்களை வேண்டுகிறேன், வாருங்கள் சில நூறு குடும்பங்களையாவது காப்போம்!
இயன்றவற்றை எல்லாம் செய்யுங்கள். அதேவேளை, உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம்.

விருப்பம் இருந்தால், வழிகள் ஆயிரம்!
இச்செயல் திட்டத்திற்கென பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். நிலைமை சீராகும்வரை ஒவ்வொரு குடும்பத்தின் தேவைக்கேற்ப அரிசி முதல் காய்கறிவரை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடியாகப் பணமாகத் தருவதைக் குறைத்து, உணவு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது இத்திட்டத்தின் சாரமான கருத்து. சிலருக்குப் பணத்தேவை நெருக்கடியான நிலையில் இருக்கும். சான்றாக, வாடகை, மருத்துவச் செலவுகள் ஆகியனவற்றைக் குறிக்கலாம். அவற்றைப் பணமாக வழங்க விரும்புகிறோம்.

தஞ்சாவூரிலும் இதன் சுற்றுப்புறங்களிலும் பணி தொடங்கப்படுகிறது. தமிழாசிரியரும் செம்மைச் சமூகத்தவருமான திரு ஐ.குழந்தைசாமி, மரபிசைக் கலைஞர் திரு.இராசேந்திரன் ஆகியோர் கலைஞர்களை ஒருங்கிணைக்கின்றனர். செம்மைச் சமூகத்தவர் பலர் களப்பணியிலும் பொது ஒருங்கிணைப்பிலும் ஈடுபடுகின்றனர்.
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை, இம்மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் பிற தேவைக்கான பொருட்களை வழங்குவது நடைமுறையாக இருக்கும். இதன்வழியாக, இம்மக்களுக்கும் நமக்கு நேரடி உறவு அமையும் வாய்ப்புண்டு. மேலும், ஒவ்வொரு குடும்பத்தின் தேவையையும் நாம் அறிந்துகொள்வோம்.

இச்செயல் திட்டத்தில் இணையும் அக்கலைஞர்களின் குடும்பத்தினர் இனி, பசி எனும் பிணிக்கு ஆட்படமாட்டார்!

இவ்விருப்பம் நிலைக்கட்டும்!
செம்மை அறக்கட்டளையின், செம்மை அகல் எனும் இச்செயல் திட்டத்தில் பங்கேற்க விருப்பம்கொண்டோர் வருக!

அம்மையப்பர் அருள் நிறைவதாக!
அன்புடன்,
ம.செந்தமிழன்

தொடர்புக்கு:
சிவராமகிருஷ்ணன் - 9845539071
சிவப்பிரகாசம் – 9443291202

05/06/2020

மெய்யியல் - மெய்மையை நோக்கிய ஒரு பயணம்!
- சிவநங்கை

மண்பாண்டத்தில் சமைக்கப்படும் சிறுதானிய உணவுக்கும், மிகைச் செலவில் அமைக்கப்படும் ஓலைக்கூரை வீடுகளுக்கும் வழிபாட்டுச் சடங்குகளுக்கும் உடைகளுக்கும் ஒப்பனைகளுக்கும் பெருமைப் பேச்சுகளுக்கும் மரபு என்னும் சொல் பலரால் போகிறபோக்கில் பயன்படுத்தப்பட்டு நீர்த்துப்போனது. இந்த வெளிப்புற ஒப்பனைகளும் பொய் வேடங்களும் சொற்ப காலத்தில் மறைந்து ஒழிந்து போகக்கூடியவை.

பல்லாயிரம் ஆண்டு காலம் நீடித்து நிலைத்து நிற்கும் தொன்மையான ஒரு சமூகத்துக்கு, பன்மைத்தன்மையுடன் தன்னை விரித்து வளர்ந்திருக்கும் ஒரு சமூகத்துக்கு இந்த ஒப்பனைகள் மட்டுமே எப்படி மரபாக இருந்திருக்க முடியும்?
இந்த மேற்பூச்சுகளைப் பூசிக்கொண்டிருப்பவர்களிடமிருந்து எப்படி முச்சங்கங்கள் முளைத்திருக்க முடியும்? அண்டம் பற்றியும் அணுவைப் பற்றியும் எப்படி அவர்கள் உணர்ந்து பாடியிருக்க முடியும்? எப்படி இறையை உணர்ந்து உருகி உறவாடிக் களித்துக் கொண்டாடியிருக்க முடியும்? கற்களை அடுக்கி அடுக்கி எப்படிக் கற்றளிகள் சமைத்திருக்க முடியும்? இயைந்து இசைந்து எப்படிப் பாடல்கள் பாடி ஆடியிருக்க முடியும்? வெறும் சுண்ணாம்பை அரைத்து புடைத்திருக்கும் நரம்புகளையும் ’நாம் இமைக்கும் நேரத்துள் சிற்பங்களின் கண்கள் இமைத்துவிடுகின்றனவோ!’ என்று அதிசயப்படும் இமைகளையும் கொண்ட சிற்பங்களை எப்படி வடித்திருக்க முடியும்?

இவற்றுக்கெல்லாம் எந்த அளவுக்கு தொழில்நுட்பமும் கணிதமும் அறிவியலும் நம் மரபில் இருந்திருக்க வேண்டும் என்ற வியப்பதும் பெருமையடைவதும்தான் அதிகபட்சம் இதுவரை நாம் வந்தடைந்த இடம்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்துக்கும் ஆதியாக, உயிர் நாடியாக, மனிதப் பிறப்பின் சிறப்பாக, தமிழர் மரபின் செழுமையாக இருப்பது மெய்யியல். அம்மெய்யியலே நம் மரபு மீதான வியப்பையும் பெருமையையும் கடந்து வரச்செய்து நம்மை நம் மரபுடன் மீண்டும் பிணைத்து வைப்பது.

அநேகம் பேருக்கு கேள்விகள் எழும். நம் மரபில் இக்கேள்விகளுக்குத் தனித்த அடையாளம் வழங்கப்படவில்லை. அப்படி எழுந்த கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் நம் மரபின் வழி நின்று மெய்மை உணர்ந்து அடைந்த அறிதல்களை, உணர்தல்களைப் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்தனர் நம் முன்னோர்.

ஆனால், இன்று இறைவனைப் பாடினால் அது முதியோருக்கான ஆன்மீகம், எப்படி உலகம் தோன்றியது என்று கேட்டால் அது அறிவியல், உயிரின வளர்ச்சி பற்றிக் கேட்டால் அது பரிணாமவியல், மனிதர்கள் எப்படி நாகரிகமடைந்தார்கள் என்று கேட்டால் அது மானுடவியல், தாவர செயல்பாடு பற்றிக் கேட்டால் அது தாவரவியல், அணுக்கள் பற்றிக் கேட்டால் அது இயற்பியல் என்று ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு அடையாளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் தேடலுக்கும் அதைக் கேட்பதற்குரிய வயதும், அதற்குரிய பெருமையும் சிறுமையும் இன்று வழங்கப்படுகிறது, இவ்வடையாளங்களும் வகைமைப்படுத்தலும் எவரையும் மெய்மையை நோக்கி நகர்த்தவில்லை. முற்றிலும் மாறாக, அதனதன் தளங்களில் ஒப்பனைக்குள்ளும் பாசாங்குக்குள்ளும் பொய்மைக்குள்ளும் தேடல் கொண்டவர்களைச் சிக்க வைத்தது. தேடலுக்கான தேவையைக்கூட பாசாங்கு ஆக்கியது.

அந்தப் பாசாங்குகளை, ஒப்பனைகளை, பொய்மைகளை உடைத்தெறிகிறார் ஆசான் ம.செந்தமிழன். அவருடைய வழக்கமான உரைகளே சமூகத்தின் பொதுப்போக்கை, பொதுப்பார்வையை உடைத்தெறியும் வகையில்தான் இருக்கும்.
மெய்யியல் வழியாக மனித இயல்புகளின் மீது பல காத தூரத்துக்குப் படிந்து போன பொய்மைகளைத் தகர்த்து எறிகிறார் ஆசான்.

” இறையியலும் ஆன்மீகமும் வேறு வேறு. ‘கடுமையான தவம், முயற்சி, சில விதிமுறைகள், உணவுப் பழக்கங்கள், உடலுறவின்மை அல்லது உடலுறவு ஆகியவற்றின் வழியாக இறையை அடையலாம்’ என்று கூறுவதே இன்றைய நிலையில் ஆன்மீகம். அதனால்தான் ’சில பயிற்சிகள், விதிமுறைகள் வழியாக இறையுணர்தலுக்கு வாய்ப்பில்லை’ என்று தொடர்ந்து அழுத்தமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஆன்மீகம் இவற்றை வலியுறுத்துகின்றது. எனக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நான் முன்வைப்பது இறையியல்.
ஒருசில பயிற்சிகளை மட்டும் கற்றுக்கொண்டு, அதன் வழியாக கூட்டம், புகழ், பொருள் ஆகியவற்றை சேர்த்தல் என்ற நிலை வந்த பிறகு, இவ்வாறான போலித்தனங்களையும் இறையியலையும் ஒன்றாக்கிவிட்டார்கள். உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பதுபோல ஆசன முறைகளை மற்றவருக்கு கற்றுக் கொடுத்துவிடலாம். அப்படிச் செய்வதினால் உடல் மேம்படும் என்பதிலும் பல நோய்களைத் தீர்க்க இயலும் என்பதிலும் எந்த கேள்வியும் தேவை இல்லை. ஆனால் அதற்கும் இறையியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”
என்று மெய்யியல் வகுப்பின் அறிமுகத்திலேயே ”நான் பேசுவது ஆன்மீகமுமல்ல. உங்கள் ஆன்மீகத்துக்கும் இறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று ஆணித்தரமாகக் களமிறங்குகிறார்.

அப்படியெனில் மெய்யியல் என்றால் என்ன?

”இயல் என்பது ஏற்கனவே இருந்து கொண்டிருப்பவற்றைக் குறிக்கும் சொல். மெய்யியல் என்றால் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும் உண்மையான இயல்புகளைப் பற்றிய கருத்துச் செறிவை உள்ளடக்கி அதை வெளிப்படுத்துவதைக் குறிக்கும்.” என்பது ஆசான் உரைத்த மெய்யியலுக்கான பொருள் விளக்கம்.

ஒரு செடியை அறிந்துகொள்ள வேண்டுமெனில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதன் இலைகள் அமைப்பு, பூக்கள் எண்ணிக்கை, தாவரவியல் பெயர் என்று தகவல்களைப் பட்டியலிடுவீர்கள். உங்களைப் பொருத்தவரை செடியை அறிந்துகொள்வது என்பது அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவது அவ்வளவே. இதைத்தான் அறிவியல் என்று கொண்டாடுகிறீர்கள். இந்த அறிவியல் உங்களுக்கு ஒரு செடியைக் கூறுபோட்டு அதன் வேதிப்பொருட்கள் வரை காட்டுகிறது. ஆனால் அதனுடன் உறவாடவும் வாழவும் அவ்வாழ்க்கையின் ஊடாக ஒருவருக்கொருவர் பயன்பெறுவதையும் பழக்கவில்லை. அதற்குப் பதிலாக அச்செடியின் மீது அளவில்லாத அதிகாரம் செலுத்தி பயன்பாட்டுக்கென அதைக் கூறு போட்டு அழித்துவிடுவதைத்தான் கற்றுக்கொடுக்கிறது. இன்னொருபுறம் அதே செடியை மனிதனுக்கு சமமாகக் கருதிக் காக்க வேண்டும், கருணை செலுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் குழம்பிக்கிடக்கிறது.

நீங்கள் அதிகாரம் செலுத்தும் இடத்திலோ அல்லது கருணை காட்டும் இடத்திலோ இவ்வண்டத்தில் ஒரு எறும்பு கூட இல்லை.

இன்று மொத்த சமூகமும் சரி, தவறுக்கு இடையில் கிடந்து அல்லாடுகிறது. ஒரு சூழல் ஒன்றைச் சரியென நிறுவுகிறது, கண நேரத்தில் இன்னொரு சூழல் அதே சரியைத் தவறென நிறுவுகிறது. நுண்ணுயிரிகளை வெற்றி கொண்ட பெருமிதத்தில் இருந்த அறிவியல் சமூகம் இன்று எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறது?

”சரி - தவறுக்கு அப்பால் இருப்பது என்ன?” என்று உங்கள் குழப்பத்தை ஒத்துக்கொண்டு ஒரு குழந்தை போல மெய்மையில் நின்று கேள்வி கேட்பவர்களுக்கு வழிகாட்டுவதுதான் ஆசான் முன் வைக்கும் மெய்யியல்.
மெய்யியல் என்பது செடியில் மலர்ந்திருக்கும் மலருடன் உறவாடுவதைப்போல, அதன் மறைபொருளை நமக்கு உணர்த்துவது. நம் இயல்பை நமக்கு உணர்த்துவது. நம் இயல்பை மறைத்து பெரும் முட்புதர்போல ஒட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வழக்கத்தையும் பொய்மையையும் ஆசான் தன்னுடைய அன்பு நிரப்பிய சொற்கள் வழியாக ஒவ்வொரு முள்ளாகக் களைந்து களைந்து நம்மை மீட்கிறார்.

ஒரு குழந்தைத்தனத்தில்தான் அதைக்கொண்டாட முடியும். அவர் விடுதலையை நோக்கி அழைத்துச் செல்வதை உணர்ந்து கண்ணீர்விட முடியும்.

ஐம்பூதக் கொள்கையைக் கேட்கும்போதே படைப்பைக் கண்டு “அப்படியா!” என்று மாய்ந்து மாய்ந்து வியக்க வைப்பதாக இருக்கும். அதற்கும் ஆதியான மெய்யியலோ நம்மை இறைக்கு அருகில் இருத்தி வைப்பது.

ஆழியாறு மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மெய்யியல் வகுப்புகள் ஒலி வடிவில் இணையதளத்தில் செம்மை செவி வழியாக வெளியிடப்படவுள்ளன.
விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

அனுபவங்களைப் பெறுவீர்!
இயல்பில் வெளிப்படுவீர்!
அன்பை உணர்வீர்!

ஓவியம்: பார்வதி (Parvathi Ashok)

01/02/2020

தமிழ்க் குடமுழுக்கிற்காக உழைத்தோர் வாழ்க!

’தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் வடமொழியிலும் நிகழவேண்டும்’ என உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு முன்மொழிந்த நிலைப்பாடு இது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாம் இந்நிலையை வரவேற்கிறோம். சிவநெறியின் எல்லாப் பகுதிகளும் தமிழால் அமைந்தவை. தமிழின் எல்லாப் பகுதிகளும் சிவசக்தியால் அமைந்தவை.

உயிர், மெய் எனும் எழுத்து வகைமையே அம்மையப்பரின் கரு உரு மெய்யியல்தான்.
உயிர் - கரு
மெய் - உரு என்பது கருத்து.
உயிர் எழுத்துகள் மெய்யின்றியும் ஒலிக்கும். விண் ஒலி, காற்றின் ஒலி ஆகியன உயிர் எழுத்து ஒலி வகையின.
மெய்யெழுத்துகள் ஒலிக்க உடல் வேண்டும்.
கருவும் உருவும் இணைந்திருக்கையில்தான் உயிரின வாழ்க்கை உணரப்படும் எனும் மெய்யியல் சாரத்தினால் இலக்கணம் வகுக்கப்பட்ட மொழி, தமிழ்!
ஆகவே இது இறைத்தமிழ்.

இறைத்தமிழைப் பேசுதலே மந்திரம் உச்சரித்தலுக்கு ஒப்பானது என்பதை உணர்ந்தவன் நான்.

தமிழையும் அம்மையப்பரையும் எவர் முயன்றும் பிரிக்கவியலாது.

கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழையும் இறையியலையும் சிதைக்க முற்பட்ட அயல் சமயங்கள் தமிழகத்தில் அழிக்கப்பட்டன. அது எக்கொள்கையாயினும் எப்பிரிவாயினும் தமிழைச் சிதைக்க முற்படுதல் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் செயல். எதிர்க் கருத்துகள் விரைந்து செயலாற்றிச் சில வெற்றிகளை ஈட்டும். தமிழாகிய சிவம், நின்று நிலைத்து அவ்வெற்றிகளையும் தன்வயப்படுத்திச் செம்மாந்து வாழும். இதுவே நம் மரபு.

பெருவுடையார் குடமுழுக்கு இனிது நிகழட்டும்!
இக்கருத்திற்காக முயன்றோர் அனைவரும் வாழ்த்துக்குரியோர், நன்றிக்குரியோர். நாமும் இவ்விருப்பத்திற்காக வேண்டினோம். நமது விருப்பத்தில் நிலைபெற்றால், அது அம்மையப்பரால் நிறைவேற்றமுறும் என்பதற்கான மேலும் ஒரு சான்று இது.

தமிழில் மட்டுமே வழிபாடு நிகழவேண்டும் என்பதே நம்கொள்கை. திருமுறைகள் இயற்றப்பட்டதே இதற்காகத்தான். அந்நிலை வாய்க்கட்டும் என விரும்புவோம், நிலைபெறுவோம்!

அன்புடன்,
ம.செந்தமிழன்

இணைப்பு ஓவியத்தினைத் தீட்டியவர்:
பார்வதி பாலா

03/12/2019

நெல்லை பாபநாசத்தில்
செம்மை மெய்யியல் வகுப்பு!

செம்மை மெய்யியல் என்பது, தமிழர் மரபின் இறையியல் முதலாக வாழ்வியல் வரையான கோட்பாடுகளின் கூட்டமைவு ஆகும்.
இதனைப் பயில விரும்புவோருக்கு இந்த ஐந்து நாட்கள் வகுப்பு ஓர் அறிமுகமாக அமையும்.

18/07/2019

கம்போடியா, வியட்நாம், மற்றும் மலேசியாவில் ம.செந்தமிழன் பயணம்!

ம.செந்தமிழன் மற்றும் செம்மை குழுவினர் கம்போடியா, வியட்நாம், மற்றும் மலேசியா நாடுகளில் பயணத்தில் உள்ளனர். செம்மை கொள்கை மற்றும் செயல்பாடுகளில் விருப்பம் கொண்டோர், இப்பகுதிகளில் இருந்தால் தொடர்பு கொள்க.

கூடுதல் விவரங்களை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிப்பர்.

திருமுருகன், சிங்கப்பூர்:
+65 8144 5768
இளையராஜா ( பயணக் குழுவில் இருப்பவர்): 9941664776
மணிமேகலை (தமிழ்நாடு): 9980228980
வித்யா (தமிழ்நாடு): 9384604737

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600017

Opening Hours

10am - 3pm